Friday, September 25, 2009

ஓட்ஸ் உப்புமா


தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
காரட் 2
குடமிளகாய் 1
தண்ணீர் 1 1/2 கப்
உப்பு,எண்ணய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு

தாளிக்க:

கடுகு 1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

வெங்காயம்,பச்சைமிளகாய்,காரட்,குடமிளகாய் நான்கையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
---
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து பச்சைமிளகாய்,
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் காரட்,குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் 1 1/2 கப் தண்ணீருடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஓட்ஸை தூவி நன்றாக கிளற வேண்டும்.
ஓட்ஸ் வெந்தவுடன் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை
தூவவும்.

Tuesday, September 15, 2009

முளைகட்டின சோயா பீன்ஸ் சுண்டல்





முளைகட்டின சோயா பீன்ஸில் புரோட்டின் அதிகம் உள்ளது.நார்ச்சத்தும் விட்டமின் சி யும் அடங்கியுள்ளது.

தேவையானவை:

சோயாபீன்ஸ் 1கப்
குடமிளகாய் 1
வெங்காயம் 1
காரட் 2
பச்சைமிளகாய் 2
மஞ்சள்பொடி 1 டீஸ்பூன்
--
பொடி செய்ய:
தனியா 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சிவப்புமிளகாய் 2
--
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து

சோயாவை முளைகட்டும் முறை"

சோயாவை 2 கப் தண்ணீரில் முதல்நாள் இரவு ஊறவைக்கவேண்டும்.அடுத்தநாள் அந்த தண்ணீரை எடுத்துவிட்டு
வேறு தண்ணீர் விட்டு ஊறவைக்கவேண்டும்.இது மாதிரி 2,3 தடவை செய்யவேண்டும்.இரண்டாம் நாள் இரவில் சோயாவை
தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு ஈரத்துணியில் வைக்கவேண்டும்.அடுத்தநாள் காலையில் ஒவ்வொரு சோயா பருப்பும் அழகாக
முளைகட்டியிருக்கும்.
---
செய்முறை:
குடமிளகாயை பொடியாக நறுக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.
பொடிசெய்வதற்கு சொன்ன பொருட்களை லேசாக எண்ணையில் வறுத்து
பொடி செய்து கொள்ளவும்.
முளைகட்டி சோயா பருப்பை தண்ணீர்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.வடிகட்டவும்.
வாணலியை எடுத்துக்கொண்டு எண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய்
சேர்த்துவதக்கவும்.
குடமிளகாய்,துருவிய காரட் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
வேகவைத்த சோயா பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடைசியில் பொடி செய்த பொடியை தூவவும்.

Tuesday, September 1, 2009

அவல் உப்புமா


தேவையானவை:

அவல் 1கப்
பச்சைமிளகாய் 2
மஞ்சள்பொடி 1 டீஸ்பூன்
----
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 1
எலுமிச்சம்பழம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
----
செய்முறை:

1.அவலை தண்ணீரில் நன்றாகக் களைந்து வடிகட்டிவைக்கவும்.
கெட்டி அவல் என்றால் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்.
2.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
3.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
----
1.வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பச்சைமிளகாயை குறுக்காக வெட்டி சேர்த்து வதக்கவும்.
2.அவலை நன்றாக பிழிந்து அதனுடன் உப்பு,மஞ்சள்பொடி,மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து
வெங்காயம்,பச்சைமிளகாயுடன் கலந்து நன்கு கிளறவும்.
அவல் சீக்கிரத்தில் வெந்துவிடும்.
3.அடுப்பை அணைத்து எலுமிச்சம்பழம் பிழியவும்.
கொத்தமல்லித் தழையை தூவவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...