Wednesday, December 30, 2009

தேங்காய் பால் குருமா


தேவையானவை:

தேங்காய் பால் 2 கப்
உருளைக்கிழங்கு 2
சின்ன வெங்காயம் 10
காரட் 2
தக்காளி 2
தண்ணீர் 1/4 கப்

அரைக்க:

தேங்காய் துருவியது 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1/4 கப்
முந்திரிபருப்பு 10
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்

தாளிக்க:

பட்டை,லவங்கம்,சோம்பு எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்துக்கொள்ளவும்.
காரட்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கக்ிகொள்ளவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டிய பொருட்களை வறுக்கவும்.
பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு,காரட்,தக்காளி,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுதுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

இந்த குருமா இட்லி,தோசை,சப்பாத்தி ஆகியவற்றிற்கு சிறந்த side dish.

Monday, December 28, 2009

கல்கண்டு பாத்

தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 கப்
பால் 2 கப்
கல்கண்டு 2 கப்
---
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10
குங்குமப்பூ சிறிதளவு

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு அரிசியையும் பயத்தம்பருப்பையும் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
இதில் வென்னீர் விட்டு நன்றாக களைந்து கொள்ளவும்.
பாலில் சிறிது தண்ணீர் சேர்த்து களைந்த அரிசியையும் பருப்பையும் அதில் கலந்து
குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கால் கப் தண்ணீர் விட்டு
கல்கண்டை போட்டு கம்பிப்பாகு பதத்திற்கு காய்ச்சவும்.
இதில் வெந்த அரிசியையும் பருப்பையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
மீதமுள்ள நெய்,ஏலக்காய்தூள் சேர்க்கவும்
குங்குமப்பூ வை சிறிது பாலில் கலந்து சேர்க்கவும்
எல்லாவற்றையும் நன்றாக கிளறி இறக்கவும்.

Monday, December 21, 2009

French Fries


தேவையானது:

பெரிய உருளைக்கிழங்கு 4
உப்பு சிறிதளவு
தண்ணீர் 4 கப்
எண்ணைய் தேவையானது

செய்முறை:

பெரிய கெட்டியான உருளைக்கிழங்காக வாங்கிக்கொள்ளவும்.
தோலை சீவிவிட்டு 2 அங்குல நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
முதலில் குளிர்ந்த தண்ணீரில் உருளைக்கிழங்கு துண்டுகளை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
பின்னர் வடிகட்டவும்.

ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் வைத்து கொதிக்கவைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் சிறிதளவு உப்பு சேர்த்து வடிகட்டிய உருளைக்கிழங்கு துண்டுகளை
போடவும்.15 நிமிடம் கழித்து வடிகட்டி பேப்பர் டவலால் ஒத்தி எடுக்கவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து நன்கு காய்ந்ததும் உருளைக்கிழங்குத்துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக
போட்டு நன்றாக பிரௌன் கலர் வந்ததும் எடுக்கவும்.

இதற்கு side dish Tomato ketchup or chilli sauce

Tuesday, December 15, 2009

கேழ்வரகு லட்டு

கேழ்வரகு மாவு 2 கப்
உப்பு ஒரு சிட்டிகை
----
வேர்க்கடலை 1 கப்
கருப்பு எள் 1 கப்
வெல்லம் 1 1/2 கப் (பொடித்தது)
நெய் 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கேழ்வரகு மாவை சிட்டிகை உப்பு தேவையான தண்ணீருடன் நன்றாக சப்பாத்தி மாவு போல
பிசைந்துகொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து பிசைந்த மாவை உருண்டைகளாக்கி
கையால் அடை போல தட்டி இருபுறமும் எண்ணைய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.
அடை கொஞ்சம் ஆறியவுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு பொடி பண்ணவும்.
தனியே எடுத்து வைக்கவும்.

வேர்க்கடலையையும் கறுப்பு எள்ளையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய் விடாமல் வறுத்து
வெல்லத்துடன் சேர்த்து மிக்சியில் பொடி பண்ணவும்..
இந்த பொடியுடன் கேழ்வரகு பொடியை சிறிது நெய் விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
இது ஒரு வாரம் வரை கெடாது.
பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல சத்துள்ள சிற்றுண்டி.

Wednesday, December 9, 2009

பசலைக்கீரை சூப்

தேவையானவை:

பசலைக்கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் 1 கப்
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
பால் 1 கப்
மைதாமாவு 1 டேபிள்ஸ்பூன்
மிளகு 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
cream 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை: சூப்

பொடியாக நறுக்கிய பசலைகீரையை ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைக்கவேண்டும்.
கீரை நன்றாக வெந்ததும் மிக்சியில் விழுது போல அரைக்கவேண்டும்.

வாணலியில் வெண்ணைய் வைத்து காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
வதக்கவேண்டும்.பின்னர் மைதாமாவை தூவி low flameல் ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
அரைத்துவைத்துள்ள பசலை விழுது,பால்,சிறிது உப்பு,மிளகு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் cream சேர்க்கவேண்டும்.

Sunday, December 6, 2009

பாவ் பாஜி



தேவையானவை:

பாவ் பிரட் 2
வெங்காயம் 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி 1 கப் (பொடியாக நறுக்கியது)
குடமிளகாய் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது
பச்சைப்பட்டாணி 1 கப்
முட்டைக்கோஸ் 1 கப் (பொடியாக நறுக்கியது)
துருவிய காரட் 1 கப்
உருளைக்கிழங்கு 2 (வேகவைத்தது)
பூண்டு 4 பல் (துருவியது)
பச்சைமிளகாய் 3 (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சம் பழ சாறு 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

மசாலா பவுடர் :

தனியாதூள்,சீரகத்தூள்,காரப்பொடி,பாவ் பாஜி மசாலா
ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க:

கொத்தமல்லித்தழை 1/2 கப் (அரிந்தது)


பாஜி செய்முறை:

பொடியாக நறுக்கிய தக்காளியை வாணலியில் எண்ணைய் விட்டு நன்கு வதக்கி பேஸ்டு மாதிரி
செய்து கொள்ளவேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் விட்டு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,பூண்டு
இரண்டையும் நன்றாக வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்.

வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அதனுடன்
பொடியாக நறுக்கிய குடமிளகாய்,பீன்ஸ்,முட்டைக்கோஸ்
துருவிய காரட்,
பச்சைப் பட்டாணி,
தக்காளி பேஸ்டு
எல்லாவற்றையும் உப்புடன் சேர்த்து வெங்காயத்தோடு நன்கு கலந்து வதக்கவேண்டும்.

காய்கறிகள் நன்றாக வதங்கிய பின் ஒரு கப் தண்ணீர் விட்டு எல்லா மசாலா பவுடர்களையும்
சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.

அடுப்பை அணைத்து எலுமிச்சம் பழ சாற்றினை ஊற்றி நன்கு கிளறவேண்டும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
பாவ் தயாரிக்க:

பாவ் பிரட்டை குறுக்காக வெட்டி அதில் இறுபுறமும் வெண்ணைய் தடவி தோசைக்கல்லில்
பொன்னிறமாக வரும் வரை ரோஸ்டு செய்யவேண்டும்.

சூடாக இருக்கும் போதே ரெடியாக உள்ள பாஜியுடன் சாப்பிடவேண்டும்.

Thursday, December 3, 2009

பப்பாளியின் பயன்கள்


பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.

பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

குழந்தைகளுக்கு பப்பாளிப்பழம் கொடுத்தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
பல் எலும்பு போன்றவை வலுவடையும்.

பப்பாளியை உணவில் சேர்த்துக்கொண்டால் தேவையற்ற சதைகள் குறையும்.
(பப்பாளி கூட்டு பண்ணலாம்)

பப்பாளியின் பாலை புண் உள்ள இடங்களில் பூசினால்குணமாகும்.

பப்பாளி இலையை அரைத்து பூசினால் கட்டி உடையும்.வீக்கமும் குறையும்.

பிரசவமான பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்கு சுரக்கும்.
பப்பாளி விதையை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

நன்கு பழுத்த பழத்தை கூழ் போல பிசைந்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி வர முக சுருக்கம் மாறி
முகம் பொலிவு பெறும்.

Tuesday, December 1, 2009

அப்பம்


தேவையானவை:

பச்சரிசி 1 கப்
வெல்லம் 1/2 கப் (பொடித்தது)
வாழைப்பழம் 1 (சிறியது)
கோதுமைமாவு 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்

செய்முறை:

பச்சரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின்னர் வடிகட்டி
பொடித்த வெல்லம்,வாழைப்பழம் இரண்டையும் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.
(அரைத்த மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும்).
அதனுடன் கோதுமைமாவு,ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்

ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து எண்ணைய் காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டியால்
அப்ப மாவை ஒவ்வொன்றாக ஊற்றி இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவேண்டும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...