Monday, January 11, 2010

நெல்லி மசாலா தொக்கு

தேவையானவை:

நெல்லிக்காய் 10
வெங்காயம் 1
தக்காளி 1
மிளகு தூள் 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது

அரைக்க:

மிளகாய் வற்றல் 2
தனியா 1 டீஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 4

செய்முறை:
1.நெல்லிக்காயை வேகவைத்து கொட்டையை எடுத்துவிட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
2.வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வதக்கி விழுதாக அரைக்கவும்.
3.அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் மிளகாய் வற்றல்.தனியா,தேங்காய் துருவல்,முந்திரிபருப்பு
நான்கையும் எண்ணையில் வறுத்து கசகசாவை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து
எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைக்கவும். 
-----
வாணலியில் நல்லெண்ணைய் விட்டு அரைத்த நெல்லி விழுதை நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் வெங்காயம்,தக்காளி விழுதை அதனுடன் சேர்த்து வதக்கவேண்டும்.
இந்த கலவையில் அரைத்த விழுதுடன் உப்பு,மிளகு தூள்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
தொக்கு போல் வந்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...