Thursday, September 23, 2010

தேங்காய்பால் குருமா


தேவையானவை:

தேங்காய்பால் 1 கப்
பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டாணி 1/2 கப்
உருளைக்கிழங்கு 2
சின்ன வெங்காயம் 10
உப்பு,எண்ணைய் தேவையானது
--
அரைக்க:

தேங்காய் துருவல் 1/2 கப்
முந்திரிபருப்பு 5
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
---
தாளிக்க்:

சோம்பு 1 டீஸ்பூன்
பட்டை சிறு துண்டு

செய்முறை:

பீன்ஸ்,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டு இரண்டாக நறுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
---
வாணலியில் எண்ணைய் வைத்து சோம்பு,பட்டை தாளித்து வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,பட்டாணி நான்கையும் சேர்த்து வதக்கவும்.காய்கறிகள் நன்கு வெந்ததும்
தேவையான உப்பும்,சிறிது தண்ணீருடன் அரைத்த விழுதைக் கலந்து கொதிக்கவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து சில நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

தேங்காய்பால் குருமா இட்லி,தோசை,பூரி,சப்பாத்தி எல்லாவற்றிற்கும் சிறந்த sidedish.

Tuesday, September 21, 2010

சௌ சௌ அல்வா


தேவையானவை:

சௌ சௌ 1 கப் (துருவியது)
சர்க்கரை 1/2 கப்
பால் 1/4 கப்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
food colour 1/4 டீஸ்பூன்

செய்முறை: 
சௌ சௌ (பெங்களூர் கத்திரிக்காய்) வை தோலுரித்து துருவிய விழுது ஒரு கப் இருக்கவேண்டும்.
சௌ சௌ துருவிய விழுதினை ஒரு அகண்ட பாத்திரத்தில் பாலோடு சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
சௌ சௌ வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கிளறவேண்டும்.
விழுதும் சர்க்கரையும் நன்றாக சேர்ந்த பின் நெய் விட்டு கலந்து food colour யை ஒரு டீஸ்பூன் பாலில்
கலந்து சேர்த்து இறக்கவேண்டும்.
எப்பொழுதும் நாம் காரட்,பீட் ரூட்,பூசணி ஆகியவற்றில் அல்வா செய்வோம்.
இது ஒரு வித்தியாசமான் ஒன்று.சுவையும் அருமையாக இருக்கும்.

Saturday, September 18, 2010

பனீர் நூடுல்ஸ்


தேவையானவை:

Maggie veg.atta Noodules 1 பாக்கெட்
துருவிய பனீர் 1 கப்
பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 1
பட்டாணி 1 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு தேவையானது

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணையில் பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய பீன்ஸ்,காரட்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.
துருவிய பனீர்,தேவையான உப்பு,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.தனியே எடுத்து வைக்கவும்.

Maggie Noodules ஐ நன்றாக உடைத்து taste maker,தேவையான தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
தனியே எடுத்து வைத்துள்ள பனீர்,காய்கறி கலவையை இதனுடன் சேர்த்து ஒரு முறை கிளறவும்.

நூடுல்ஸை மட்டும் தனியாக செய்வதை விட பனீர்,காய்கறிகள் சேர்த்து கொடுத்தால் சத்துக்கு சத்தாகும்.குழந்தைகளின் விருப்பமான
உணவுமாகும்.

Sunday, September 12, 2010

டால் மாக்கனி


தேவையானவை:
கறுப்பு உளுந்து 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
----
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
----
காரப்பொடி 1 டீஸ்பூன்
தனியாத்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் 1 டீஸ்பூன்
வெங்காய தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
---
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
பால் 1/2 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
--
செய்முறை:

கருப்பு உளுந்தை குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
--
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் விட்டு முதலில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பினார் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
குக்கரில் இருந்து கறுப்பு உளுந்தை எடுத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வெங்காயம் தக்காளியுடன் கலக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் மேலே குறிப்பிட்ட காரப்பொடி,தனியாதூள்.சீரகதூள்,ஆம்சூர் பவுடர்,வெங்காய தூள் எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியில் பாலை விட்டு இறக்கவும்.
இறக்கிய பின் வெண்ணைய் போடவும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
இது சப்பாத்தி,பூரி,நான்,புல்கா ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற side dish.

Sunday, September 5, 2010

பசலை சப்ஜி


பசலைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
பயத்தம்பருப்பு 1/2 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
-----
சாம்பார் பொடி 1/2 டீஸ்பூன்
தனியா தூள் 1/2 டீஸ்பூன்
சீரக தூள் 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது.
---
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:

பசலைக்கீரையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
----
குக்கரை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பயத்தம்பருப்பு,நறுக்கிய பசலைக்கீரை,
வெங்காயம்,தக்காளி,மேலே குறிப்பிட்ட மசாலா சாமான்கள்,அரை கப் தண்ணீர்,தேவையான உப்பு
எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து மூன்று விசிலுக்கு பிறகு அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
சப்ஜி ரெடி.
இது பூரி,சப்பாத்திக்கு ஏற்ற side dish.

Wednesday, September 1, 2010

ஆப்பிள் சூப்


தேவையானவை:
ஆப்பிள் 1
தக்காளி 2
பால் 1 கப்
மைதாமாவு 1 டீஸ்பூன்
மிளகுதூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

ஆப்பிளைத் துருவி பாலில் வேகவைக்கவும்.
தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்துக் கொள்ளவும்.
வேகவைத்த ஆப்பிளையும்,தக்காளியையும் மிக்சியில் அடிக்கவும்.
மைதாமாவை லேசாக வறுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்கவைக்கவும்.
அதனுடன் ஆப்பிள்,தக்காளி விழுதை சேர்க்கவும்.நன்றாக கிளறவும்.
பின்னர் உப்பு,சீரகத்தூள்,மிளகு தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
இறக்கிய பின் வெண்ணையை மேலே போடவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...