Friday, January 23, 2015

தினை இட்லி


தேவையானவை:
தினை 3 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
அவல் 1/4 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
----
செய்முறை:

தினையை தனியாகவும்.உளுத்தம்பருப்பு வெந்தயம் இரண்டையும் சேர்த்தும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அவலை அரை மணிநேரம் ஊறவைத்தால் போதும்.
உளுத்தம்பருப்பு,வெந்தயம்,அவல் மூன்றையும் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவேண்டும்.
தினையை தனியாக அரைத்து அரைத்து வைத்துள்ள உளுத்தம்பருப்பு,வெந்தயத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.
ஆறு மணிநேரம் கழித்து மாவு புளித்துவிடும்.பின்னர் இட்லியாக வார்க்கலாம்

தினையில் புரோட்டீன்,நார்சத்து உள்ளது.

Thursday, January 15, 2015

வாழைத்தண்டு கூட்டு




தேவையானவை:

வாழைத்தண்டு 1
கெட்டி மோர் 1 கப்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
----
அரைக்க:
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 4
தேங்காய் துருவல் 1/2 கப்
----
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாழைத்தண்டை பட்டை,நார் நீக்கி சுத்தம் செய்து (கருக்காமல் இருக்க) சிறிது மோர் கலந்த நீரில்
சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து வாழைத்தண்டை பிழிந்து அரை கப் தண்ணீர் உப்பு,பெருங்காயம்
சேர்த்து வேகவைக்கவும்.முக்கால் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வேகவைக்கவும்
கடைசியில் ஒரு கப் மோர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
தண்ணியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.

தேங்காயெண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

Monday, January 12, 2015

பொங்கலோ பொங்கல்.....

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்







வெண்பொங்கல்


தேவையானவை:


பச்சரிசி 2 கப்

பயற்றம்பருப்பு 1/2 கப்

மிளகு 15

சீரகம் 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

முந்திரிபருப்பு 10

நெய் 1/4 கப்

தண்ணீர் 10 கப்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கருவேப்பிலை ஒரு கொத்து

உப்பு தேவையானது



செய்முறை:








அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய்விடாமல் வறுக்கவும்.(ஒரு புரட்டுபுரட்டினால் போதும்.)

ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 10 கப் தண்ணீர் விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசியையுன் பருப்பையும் நன்றாக களைந்து போட்டு கிளறவும்.பொங்காமல் இருக்க low flame ல் வைத்து க் கிளறவும்.அரிசி ,பருப்பு இரண்டும் நன்றாக வெந்தவுடன் உப்பு போடவேண்டும்.(அரிசி,பருப்பு இரண்டும் குழையாமல் உப்பு போடக்கூடாது.)



மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.

பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.

கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.



(அரிசி பருப்பு இரண்டையும் குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் குக்கரில் வைக்கலாம்.ஆறு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.அப்பொழுதுதான் நன்றாக குழைவாக இருக்கும்

குக்கரை திறந்தவுடன் உப்பு சேர்த்து மற்றவைகளையும் சேர்த்து கிளறவேண்டும்..)
-----------------------------------------------


சர்க்கரை பொங்கல்


தேவையானவை:

பச்சரிசி 1 கப்

பயற்றம்பருப்பு 1/4 கப்

பொடித்தவெல்லம் 1 1/2 கப்

தண்ணீர் 4 1/2 கப்

நெய் 1/4 கப்

பால் 1/2 கப்

ஜாதிக்காய் 1 துண்டு

குங்குமப்பூ 1 டீஸ்பூன்

ஏலக்காய் 4

முந்திரிபருப்பு 10

உலர்ந்த திரட்சை 10

கேசரிப்பவுடர் 1டீஸ்பூன்



செய்முறை:



ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு பயற்றம்பருப்பை எண்ணைய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.

பயற்றம்பருப்பை அரிசியுடன் சேர்த்து நன்றாக களைந்து கொள்ளவும்.

ஒரு அகண்ட கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 4 1/2 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன் களைந்துவைத்திருந்த அரிசி,பருப்பைப்போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.அரிசியும் பருப்பும் நன்றாக சேர்ந்து வெந்தவுடன் வடிகட்டிய வெல்லத்தைப்போட்டு medium flame ல் ஒரு பத்து நிமிடம் வைத்து கிளறவும்.

ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் கேசரிப்பவுடர்,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து பொங்கலில் சேர்க்கவும் மீதமுள்ள பாலையும் பொங்கலில் சேர்க்கவும்.திராட்சை,முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
----------------------------------------


வரகரிசி  சர்க்கரை பொங்கல்
தேவையானவை:

வரகரிசி 1 கப்
தண்ணீர் 3 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
நெய்  1/4 கப்
முந்திரிபருப்பு 10
 ஜாதிக்காய்1 துண்டு
குங்குமப்பூ 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
பால் 1 மேசைக்கரண்டி
--------
செய்முறை:


ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு  வரகரிசியை சிறிது நெய் சேர்த்து வறுக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.

ஒரு அகண்ட கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 3 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன்    வறுத்த வரகசரிசியைப்போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.அரிசி நன்றாக  வெந்தவுடன் வடிகட்டிய வெல்லத்தைப்போட்டு medium flame ல் ஒரு பத்து நிமிடம் வைத்து கிளறவும். (வரகரிசி வேகுவத்ற்கு பத்து நிமிடம் ஆகும்).

ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் ,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து பொங்கலில் சேர்க்கவும். முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்

Monday, January 5, 2015

சன்னா காரக்குழம்பு



தேவையானவை:

கொண்டக்கடலை 1 கப் (channa)
புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் 1/4 கப்
 உப்பு தேவையானது
--------
அரைக்க:
மிளகாய் வற்றல் 2
தனியா 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
நிலக்கடலை 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
வெந்தயம் 1 தேக்கரண்டி
------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
-----
செய்முறை:



சன்னாவை நான்கு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
கொண்டக்கடலையை குக்கரில் வைத்து (3விசில்) வேகவைக்கவேண்டும்.

அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து  இவைகளுடன் கொண்டக்கடலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.
வெடிக்கவிடவும்.வெடித்ததும் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணெய்யில் வறுத்து நைசாக விழுது போல அரைத்து சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கலாம்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...