Tuesday, August 16, 2016

தேங்காய் பால் புலாவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
தேங்காய் பால் 2 கப்
------
வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சிபூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை 1 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:

வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
கிராம்பு 2
ஏலக்காய் 2
பட்டை 1 துண்டு
----

செய்முறை:


பாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காய்ம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் கிராம்பு,ஏலக்காய் பட்டை மூன்றையும் வெண்ணையில் தாளித்து அதில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.அதனுடன் தக்காளி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்,

தேவையான உப்பு  சேர்த்து ஊறவைத்த அரிசியை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும். கொத்தமல்லித்தழையை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.

குக்கரில்  வைக்கும்  பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசி கலவையுடன் தேங்காய் பால் இரண்டு கப் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வைத்து அடுப்பை அணைக்கவேண்டும்.

 Electric cooker  ரிலும் வைக்கலாம்.

5 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான இதுவரை
அறியாத ரெஸிபி
அவசியம் செய்து பார்த்து விடுவோம்
படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
வாழ்த்துக்களுடன்...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Ramani Sir.

ராமலக்ஷ்மி said...

அருமை. தக்காளி சேர்க்காமல் இதே முறையை பட்டாணி புலாவ் செய்ய பின் பற்றுவதுண்டு.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ராமலஷ்மி.

waltinoberdorf said...

Slots and Live Dealer Casinos - CasinoTopTables.org
Slot machines are the most popular form of video games and live dealer casinos are to 생방송바카라 play them and 슬롯머신 게임 if 승인 전화 없는 토토 사이트 you 도박장 have a game or table that is 사설 토토 사이트 going to take

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...