Monday, April 10, 2023

36 எரிசேரி

 தேவையானவை:

சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

மிளகு தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

———-

அரைக்க:

மிளகாய் வற்றல் 2

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

மிளகு 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் 1/2 கப்

————

தாளிக்க:

தேங்காயெண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்

மிளகாய் வற்றல் 1

கறிவேப்பிலை சிறிதளவு

————-

செய்முறை:

அரைக்ககொடுத்துள்ளவைகளை தேங்காயெண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீரில் சேனைக்கிழங்கை மஞ்சள் தூள்,மிளகுதூள் சேர்த்து வேகவைக்கவும்.சேனைக்கிழங்கு வெந்ததும் தேவையான  உப்பு சேர்க்கவும்

அரைத்து வைத்த விழுதினை அதனுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

வாணலியில் தேங்காயெண்ணெய் ஊற்றி முதலில் தேங்காய் துருவலை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.பின்னர் அதே எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை சேர்த்து  தாளித்து  தேங்காய் துருவலோடு ரெடியாக உள்ள எரிசேரியில் சேர்க்கவும்.


Thursday, April 6, 2023

35 பிஸிபேளாபாத் ( Karnataka style)

 தேவையானவை:

பச்சரிசி   1 கப்

துவரம்பருப்பு 3/4 கப்

புளி 1 எலுமிச்சையளவு

வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

முந்திரி பருப்பு 10

கொத்தமல்லித்தழை சிறிதளவு

உப்பு,எண்ணெய் தேவையானது

நெய் 1 டேபிள்ஸ்பூன் 

——————-

பொடி பண்ண:

பொடி 1:

 கடலை-பருப்பு   2 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு   2 டேபிள்ஸ்பூன்

கசகசா 1டேபிள்ஸ்பூன்

மேலே குறிப்பிட்ட  மூன்றையும்  தனித்தனியே எண்ணையில்லாமல் வறுக்கவேண்டும்.

பொடி 2:

கிராம்பு 10

லவங்கப்பட்டை ஒரு அங்குலம்

இரண்டையும் சேர்த்து எண்ணையில்லாமல் வறுக்கவேண்டும்.

பொடி 3:

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம்   1 டீஸ்பூன்

முதலில் சீரகத்தை வாணலியில் போட்டு பொரிக்கவிட்டு பின்னர் வெந்தயத்தை சேர்த்து பொரிக்கவேண்டும்.

பொடி 4:

தனியா 3 டேபிள்ஸ்பூன்

பிரிஞ்சி இலை 1

இரண்டையும் தனித்தனியாக வறுக்கவேண்டும்.

பொடி 5:

கொ-ப்பறை தேங்காய் அல்லது தேங்காய் துருவல்  1 கப்

தனியே வறுக்கவேண்டும்

வற்றல் மிளகாய் 5 எண்ணெயில் வறுக்கவேண்டும்.

—————

செய்முறை:

5 பொடிகளையும் சேர்த்து நைசாக பொடி செய்து கொள்ளவேண்டும்.

அரிசியையும் பருப்பையும் சேர்த்து குக்கரில் 5 கப்  தண்ணீருடன் வைக்கவேண்டும். (5 விசில்)

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காயெண்ணையில் கடுகு தாளித்து அதனுடன் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.

புளியை கரைத்து  சேர்த்து வெல்லம்,மஞ்சள்தூள்,  பெருங்காயதூள், வேகவைத்த  அரிசி பருப்பு கலவை,தேவையான உப்பு,2 1/2 டேபிள்ஸ்பூன் பொடி,தேவையான தண்ணீருடனும்  கொதிக்கவைக்கவேண்டும்.

கடைசியில் பிஸிபேளாபாத் அரிசி,பருப்பு,பொடி எல்லாம் சேர்ந்து  நன்கு வெந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றவேண்டும் 

சுவையான பிஸிபேளாபாத் ரெடி

இதில் எந்தவொரு காயும் சேர்க்கவில்லை.அவரவர் இஷ்டப்படி எந்த காயும்  சேர்க்கலாம்,






Wednesday, April 5, 2023

34.அவியல்

 தேவையானவை:

காய்கறிகள்

பூசணி,வாழைக்காய்,காரட்,பீன்ஸ்.புடலங்காய்,சேனைக்கிழங்கு,உருளைக்கிழங்கு, முருங்கை,பட்டாணிஒவ்வொன்றிலும் ஒரு கை-பிடி எடுத்து  (முருங்கை 1) பொடியாக நறுக்கிகொள்ளவும்..

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

தேங்காயெண்ணெய் 1/4 கப்

தயிர் 3/4 கப்

கறிவேப்பிலை 1 கொத்து

உப்பு தேவையானது

—————-

அரைக்க:

தேங்காய் துருவல் 1 கப்

சீரகம் 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய்  3

———-

செய்முறை:

அரைக்ககொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில்  தேங்காயெண்ணெய் ஊற்றி நறுக்கிய காய்கறிகளை  மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.தண்ணீர் விடவேண்டாம்.சிறிது தண்ணீர் தெளித்தால் போதும்.

காய்கறிகள் வெந்தவுடன் தேவையான உப்பு சேர்த்து அரைத்த விழுதையும் தயிரையும் சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.

இறக்கிய பின்  அவியலில் ஒரு கொத்து கறிவேப்பிலையை போட்டு அதன்மேல் ஒரு மேசைக்கரண்டி தேங்காயெண்ணையை ஊற்றவும்.


Sunday, April 2, 2023

33.ஓலன்

 



தேவையானவை:

பூசணி கீற்று 2

காராமணி 1 கப்

பச்சைமிளகாய் 4

தேங்காய் பால் 1 கப்

தேங்காய் எண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

செய்முறை:



பூசணி கீற்றுகளை தோலெடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

காராமணியை லேசாக எண்ணையில்லாமல் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்

பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.

------

அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள்,வேகவைத்த காராமணி,

பச்சைமிளகாய், ஒரு கப் தண்ணீர்,சேர்த்து வேகவைக்கவும்.

பூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.

பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

கடைசியில் தேங்காய் எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.

------

ஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.

சப்பாத்தி,பூரிக்கும் சிறந்த side dish ஆகும். 

Friday, March 31, 2023

32.மிளகூட்டல்

 தேவையானவை:

துவரம் பருப்பு. 1/2 கப்

காய்கறிகள் 2 கப் (காரத்,வெள்ளபூசணி,மஞ்சள் பூசணி,வாழைக்காய்,உருளைக்கிழங்கு,சேனை,பட்டாணி, முருங்கை)

எல்லா காய்கறிகளிலும் சிறிது எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

மஞ்சள் தூள் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

—————-

அரைக்க:

மிளகாய் வ்ற்றல் 2

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் 1/2 கப்

சீரகம் 1 டீஸ்பூன்

———

தாளிக்க:

தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

இளகாய் வற்றல் 1

கறிவேப்பிலை சிறிதளவு

————-

செய்முறை:

துவரம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் வைத்து எடுக்கவும். (4 விசில்)

ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீரில் எல்லா காய்கறிகளையும்  மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.

காய்கறிகள் எல்லாம்வெந்த்தும் தேவையான உப்பு  சேர்த்து வேகவைத்த பருப்பு,அரைத்து விழுது, பெருங்காயத்தூள், சிறிது  தண்ணீர் சேர்த்து  நன்றாக கொதிக்கவைக்கவேண்டும்.

கடைசியில் தேங்காயெண்ணையில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.


Thursday, March 30, 2023

. 31. நார்த்தங்காய் குழம்பு

 தேவையானவை:

நார்த்தங்காய். 1

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

புளி எலுமிச்சையளவு

உப்பு,எண்ணெய் தேவையானது

———-

பொடி பண்ண:

பச்சரிசி 1 டீஸ்பூன்

வெந்தயம் 1 டீஸ்பூன்

துவரம்பருப்பு 2 டீஸ்பூன்

கடலைபருப்பு 1 டீஸ்பூன்

தனியா 2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 4

உப்பு,எண்ணெய் தேவையானது

————

தாளிக்க:

நல்லெண்ணைய் 3 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

———

செய்முறை:

நார்த்தங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளில் பச்சரிசையு வெந்தயத்தையும் தனியே எண்ணெயில்லாமல் வறுத்துக்கொள்ளவும். மற்றவற்றை சிறிது எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும்.இரண்டையும் சேர்த்து பொடி செய்துகொள்ளவும்.

வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து நார்த்தங்காய் துண்டுகளை மஞ்சள் தூளோடு சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கிய பின் புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.அதனுடன் அரைத்த பொடி சேர்த்து கொடிக்கவிடவும்.

நார்த்தங்காய்  வெந்தவுடன் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.



Wednesday, March 29, 2023

30. புடலங்காய் பொரிச்சக் கூட்டு.

 தேவையானவை:

புடலங்காய் 1

பயத்தம்பருப்பு 1/2 கப்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

கொத்தமல்லித்தழை சிறிதளவு

————-

அரைக்க:

மிளகாய் வற்றல் 4

தனியா 1 டேபிள்ஸ்பூன் 

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம்  1 டீஸ்பூன்

பெருங்காயம் 1 துண்டு

கறிவேப்பிலை சிறிதளவு

————-

செய்முறை:

புடலங்காயை நன்றாக கழுவிய பின் சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய புடலங்காய் துண்டுகளை சிறிது உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிசறி பத்து நிமிடம் ஊறவைக்கவும்.

பயத்தம்பருப்பை குக்கரில் ஒரு கப் தண்ணீருடன் வைத்து எடுக்கவும்.(3 விசில்)

அரைக்க கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து விழுது போல அரைத்து கொள்ளவும்

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து புடலங்காயை பிழிந்து போடவுய்ம்.நன்றாக வதக்கவும்...

புடலங்காய் சிறிது வெந்தவுடன் வேகவைத்த பருப்பு,அரைத்த விழுது,தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

கடைசியில் கொத்தமல்லித்த்ழை தூவவும்.

29. பச்சை சுண்டைக்காய் கூட்டு

 தேவையானவை:

பச்சை சுண்டைக்காய் 1 கப்

பயத்தம்பருப்பு . 1/2  கப் 

வெங்காயம் 1 

பச்சைமிளகாய் 2

மஞ்சள்தூள்  1 டீஸ்பூன்

சீரக தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

உப்பு,எண்ணெய் தேவையானது

கொத்தமல்லித்தழை சிறிதளவு

—————

தாளிக்க:

தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

————

செய்முறை:

பச்சை சுண்டைக்காயை நன்றாக கழுவி விட்டு ஒவ்வொன்றாக இடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் குக்கரை வைத்து அதில் பயத்தம்பருப்பு,இடித்த சுண்டைக்காய்கள்,பொடியாக நறுக்கிய வெங்காயம்,குறுக்கே கீறிய பச்சைமிளகாய்,மஞ்சள்தூள்,சீரக தூள்கறிவேப்பிலை தேவையான உப்பு,தண்ணீர் எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்து 3 விசில் கழித்து இறக்கவேண்டும்.

வாணலியில் தேங்காயெண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து குக்கரில் வேகவைத்த சுண்டைக்காய் பருப்பு கலவையை இதனுடன் சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.

கடைசியில் கொத்தால்லித்தழை தூவவேண்டும்.


Tuesday, March 28, 2023

28. அவரைக்காய் புளி குழம்பு

 தேவையானவை:

அவரைக்காய் 1/4 கிலோ

புளி எலுமிச்சை அளவு

வெங்காயம் 1

தக்காளி  1

பூண்டு 5 பற்கள்

துருவிய  தேங்காய் 1/4 கப்

சாம்பார் பொடி 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு

————

அரைக்க:தேங்காய் துருவல் 1/2 கப்

சீரக 1 டீஸ்பூன்

———

தாளிக்க:

நல்லெண்ணை 2 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

வெந்தயம் 1டீஸ்பூன் 

கறிவேப்பிலை சிறிதளவு

———-

செய்முறை:

அவரைக்காயை பொடியாக நறுக்கிக்கொண்டு  சிறிது எண்ணையில் அரை ஸ்பூன் உப்புடன் வதக்கிக்கொள்ளவும்.இதனை தனியே எடுத்து வைக்கவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணையில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் சிறிது மஞ்சள் தூளுடன்  வதக்கவும்.

அத்துடன் தேவையான உப்பு,சாம்பார் பொடி,அரைத்த விழுது,புளித்தண்ணீர் , வேகவைத்த அவரை துண்டுகள் எல்லாம்சேர்த்து  கொதிக்கவிடவும்

கடைசியில் துருவிய தேங்காய்,கொத்தால்லித்தழை தூவவும்.

.


 



27.பரங்கிக்காய் பால் கூட்டு

 தேவையானவை:

பரங்கிக்காய் துண்டுகள் 2 கப்

பால் 1/2 கப்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

துருவிய வெல்லம்  1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

————-

அரைக்க:

தேங்காய் துருவல் 1 கப்

பச்சை மிளகாய்  1

அரிசி மாவு 1 டீஸ்பூன்

————

தாளிக்க:

தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

 மிளகாய்  வற்றல் 1

கறிவேப்பிலை சிறிதளவு

————-

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து பரங்கிக்காய் துண்டுகளை மஞ்சள் தூளோடு வதக்கவும்.சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும் (த்ண்ணீர்  விடவேண்டாம்)

அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

பரங்கிக்காய் வெந்தவுடன் அரைத்த விழுதையும்தேவையான உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும்.

 துருவிய  வெல்லத்தையும் பாலையும் சேர்க்கவேண்டும்.

பால் சேர்த்த பின் ரொம்பவும் கொதிக்கவிடவேண்டாம்

கடைசியில் தேங்காயெண்ணையில் தளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.


Monday, March 27, 2023

26. வெண்டைக்காய் மோர் குழம்பு

 தேவையனவை:

வெண்டைக்காய்  10

தயிர் 1 கப்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானவை

கொத்தமல்லித்தழை சிறிதளவு

—————

அரைக்க:

தனியா 1 டீஸ்பூன்

சீரகம் 1/2 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

கடலைபருப்பு 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் 1/2 கப்

பச்சரிசி 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

————

தாளிக்க:

தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 1

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

—————

செய்முறை:

வெண்டைக்காயை ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து தேங்காயெண்ணையில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவேண்டும். சிறிது உப்பு சேர்த்து வெண்டைக்காய் வதங்கியவுடன் தனியே எடுத்து வைக்கவேண்டும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கப் தயிர்,அரைத்து விழுது,மஞ்சள் தூள்,தேவையான உப்பு  சேர்த்து கட்டி இல்லாமல்  கரைக்கவேண்டும்.

வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து கரைத்து வைத்த் தயிர் கலவையை ஊற்றி அதனுடன் வெண்டைக்காயுடன் தாளித்தவைகளை சேர்த்து ஒரு நிமிடம் கொதித்த பின் கொத்தமல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவேண்டும்.

மோர் குழம்பு ரொம்ப நேரம் கொதிக்ககூடாது

மோர் குழம்பு எல்லா நீர்காய்களிலும் பண்ணலாம்..

25.அரைப்புளி குழம்பு

 


தேவையானவை:  
சேனைக்கிழங்கு  1/4 கிலோ
கொண்டக்கடலை 1 கப் (channa)
புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 3 மேசைக்கரண்டி
தேங்காய் துண்டுகள் 1/4 கப்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
எண்ணைய், உப்பு தேவையானது
------
தாளிக்க:
நல்லெண்ணை 2 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
மிளகாய் வற்றல் 3
கறிவேப்பிலை 1 கொத்து
-----
செய்முறை:

 கொண்டக்கடலையை  நான்கு மணிநேரம் ஊறவைத்து  பின்னர்
 குக்கரில் வைத்து (3விசில்) வேகவைக்கவேண்டும்.
சேனைக்கிழங்கை தோல் சீவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,மிளகாய் வற்றல், 
 இவைகளுடன் கொண்டக்கடலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.பின்னர் தேங்காய் துண்டங்களையும் போட்டு சற்று வறுத்து கறிவேப்பிலையை சேர்த்து
வெடிக்கவிடவும்.வெடித்ததும் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
நன்றாக கொதித்து வற்றியவுடன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு எல்லாம் சேர்ந்து கொதித்தபின் இறக்கவும்.
வேண்டுமென்றால் அப்பளத்தை சிறு துண்டுகளாக்கி பொரித்து போடலாம்.

Sunday, March 26, 2023

24. சுரைக்காய் மோர் கூட்டு

 தேவையானவை:

சுரைக்காய் 1

தயிர் 1/2 கப்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானவை

————

அரைக்க:

தேங்காய் 1/2 கப்

சீரகம்1 டீஸ்பூன்

பச்சைமிளகாய்  2சுரைக்காய் துண்டுகளை

இஞ்சி 1 துண்டு

கறிவேப்பிலை சிறிதளவு

———

தாளிக்க:சுரைக்காய் 

தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 1

கறிவேப்பிலை சிறிதளவு

————-

செய்முறை:

சுரைக்காயை தோல் சீவி  சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

அரைக்கக்கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாண்லியில் சிறிது எண்ணெய் வைத்து சுரைக்காய் துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.சுரைக்காய் வெந்தவுடன் தேவையான உப்பு  பெருங்காயத்தூளர ,  அரைத்த விழுதையும்  சேர்த்து 

கொதிக்கவைக்க வேண்டும்.கடைசியில் ஒரு கரண்டி தயிர் ஊற்றி தேங்காயெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.




23.அவரைக்காய் பருப்பு கூட்டு

தேவையானவை:

அவரைக்காய். 1/4 கிலோ

பயத்தம்பருப்பு 1/2கப்

வெங்காயம்  1

தக்காளி 1

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

பூண்டு 4  பற்கள்

கொத்தமல்லித்தழை சிறிதளவு

உப்பு,எண்ணெய்  தேவையானது

——-

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

மிளகாய்   வற்றல் 2

கறிவேப்பிலை சிறிதளவு

————

செய்முறை:

அவரைக்காயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் வேகவைக்கவேண்டும் (4 விசில்).

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காயெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பூண்டு பற்களை சேர்த்து வதக்கி அதனுடன்  பொடியாக நறுக்கிய வெங்காயம்தக்காளி,மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்த அவரைக்காயை சேர்த்து,அவரைக்காய் சிறிது வெந்தவுடன் தேவையான உப்பு,வேகவைத்த பயத்தம்பருப்பு,தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவெண்டும்.

கடைசியில் கொத்தமல்லித்தழை தூவவும்.


Saturday, March 25, 2023

22.வாழைக்காய் பச்சபயறு கூட்டு

 தேவையானவை:

வாழைக்காய் 1

பச்சபயறு 1/4 கப்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

————-

அரைக்க:

மிளகாய்  வற்றல் 3

தேங்காய் துருவல் 1/4 கப்

சீரகம் 1 டீஸ்பூன்

புளி சிறிதளவு

————-

தாளிக்க:

தேங்காயெண்ணை 1 டேபிள்ஸ்பூன்

கடுகு  1டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

பச்சபயறை 8 மணிநேரம் ஊறவைத்து பின்னர் குக்க்கரில் வைத்து (3 விசில்) எடுக்கவும்.வாழைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வாழைக்காய் துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.வாழைக்காய் வெந்தவுடன் தேவையான உப்பு,அரைத்த விழுது,வேகவைத்த பயறு,சிறிது த்ண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.



Friday, March 24, 2023

21. மிளகு குழம்பு

 தேவையானவை:

சின்ன வெங்காய ம்10

பூண்டு பல்  10

     புளி எலுமிச்சையளவு

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

வெல்லத்தூள் 1 டேபிள்பூன்

உப்பு தேவையானது

நல்லெண்ணை 1/4 கப்

———-

அரைக்க:

மிளகாய் வற்றல் 6

தனியா 3 டீஸ்பூன்

கடலைபருப்பு  2 டீஸ்பூன்   

வெந்தயம் 1 டீஸ்பூன் 

சீரகம் 1 டீஸ்பூன்

மிளகு 3 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

————

தாளிக்க: 

நல்லெண்ணெய்  1/4 கப்

கடுகு 1 டீஸ்பூன்

வெந்தய ம்1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

—————

செய்முறை:

முதலில் மிளகாய் வற்றல்,தனியா இரண்டையும் வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுக்கவேண்டும்.

பின்னர் மற்றவற்றை எண்ணெய் விட்டு வறுத்து மிளகாய் வற்றல்,தனியா உடன் சேர்த்து விழுது போல அரைக்கவேண்டும்.

வாணலியில் நல்லெண்ணை ஊற்றி தாளிக்க  வேண்டியவைகளை தாளித்து சின்ன வெங்காயம்,பூண்டு

இரண்டையும் வதக்கி மஞ்சள் தூள் தேவையான உப்பு ,புளித்தண்ணீர்,அரைத்த விழுது எல்லாவற்றையும் ஒரு கப் தண்ணீருடன் கொதிக்கவைக்கவெண்டும்.  நன் கு   கொதித்த பின் வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும் 

—————————

மிளகு குழம்பை வெங்காயம்பூண்டு இல்லாமலும் செய்யலாம்.

அரைப்பதற்கு 

மிளகாய் வற்றல்  8

தனியா. 2 டேபிள்பூன்

உளுத்த பருப்பு 3 டேபிள்ஸ்பூன்

மிளகு 1/4 கப்

சீரகம். 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் 1 துண்டு

கறிவேப்பிலை சிறிதளவு.

வாணலியில் நல்லெண்ணெய் வைத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுதுபோல அரைத்து புளித்தண்ண்ணீர்  தேவையான  உப்பு,இரண்டு க்ப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்றாக கொதித்தபின் சிறிது வெல்லத்தூள் சேர்க்கவும்.

20.வற்றல் காரக்குழம்பு


தேவையானவை:
சின்ன வெங்காயம் 10
பூண்டு 5 பல்
சாம்பார் பொடி 1 மேசைக்கரண்டி
புளி 1 எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,நல்லெண்ணைய் தேவையானது
------
அரைக்க:
சின்ன வெங்காயம்  5
பூண்டு 3 பல்
தக்காளி 1

தேங்காய்             1 துண்டு
-------
பொரிக்க:
மணத்தக்காளி வற்றல் 1 மேசைக்கரண்டி
சுண்டைக்காய் வற்றல் 10
மிதுக்க வற்றல் 10
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
வெந்தயம்  1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் சின்ன வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் எண்ணையில் வதக்கவேண்டும்.
 தேங்காய் துண்டுடன் எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
-----
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணைய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சின்ன வெங்காயம் பூண்டு இரண்டையும் வதக்கவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து சாம்பார் பொடி,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் அரைத்த விழுதினை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
பொரிக்க கொடுத்துள்ள வற்றல்களை எண்ணையில் பொரித்து சேர்க்கவேண்டும்.
(வற்றல்களில் ஏற்கனவே உப்பு இருப்பதால் அரை உப்பு போட்டால் போதும்)
இந்த வற்றல்..காரக்குழம்பு மற்ற வத்தக்குழம்பு  விட சுவை கூடுதலாக இருக்கும்.
சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.தயிர் சாதத்திற்கும் ஏற்றது.

Thursday, March 23, 2023

19.மாங்காய்,முருங்கை சாம்பார்

 தேவையானவை:

மாங்காய் 1

முருங்கை 2

துவரம்பருப்பு 3/4 கப்

சின்ன வெங்காயம் 10

தக்காளி 1

மஞ்சள்  தூள்  1 டீஸ்பூன்

சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு

உப்பு,எண்ணெய் தேவையானது

—————

தாளிக்க:

தேங்காயெண்ணை 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

வெந்தய ம்1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 2

பச்சைமிளகாய் 2

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

————

செய்முறை:

துவரம்பருப்பை 2 க்ப் தண்ணீரில் குக்கரில் வைத்து வேகவைக்கவு.(4 விசில்)

மாங்காயை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்

முருங்கையை ஒவ்வொன்றும் ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

வாணலியில் தேங்காயெண்ணையை வைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.அதனுடன் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் மாங்கா துண்டுகள்,முருங்கை துண்டுகள்,சாம்பார் பொடி,தேவையான உப்பு ,சிறிது தண்ணீருடனும் கொதிக்கவிடவும்.

மாங்காய் துண்டுகளும், முருங்கை துண்டுகளும் வெந்தபின் வேகவைத்த பருப்பை சேர்த்து சிறிது கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

கடைசியில் கொத்தால்லித்தழையை தூவவும்.

(இந்த சாம்பாருக்கு புளி தேவையில்லை)


Wednesday, March 22, 2023

18 சிறுகீரை மசியல்

 தேவையானவை:

சிறுகீரை 1 கட்டு

வதக்க வேண்டியது:

சீரகம் 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

பூண்டு 2 பல்

புளி சிறிதளவு

வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி 1 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை  சிறிதளவு

——

உப்பு, எண்ணெய் தேவையானது

தாளிக்க:

எண்ணெய். 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1டீஸ்பூன்

சீரகம்1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல்  1

————

செய்முறை:

சிறுகீரையை பொடியாக நறுக்கி தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ளவும்.

ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் வதக்க  தேவையான பொருட்களை  சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். தண்ணீர் அளவு குறையும் வரை வதக்கவேண்டும்.

வெங்காயம் தக்காளி எல்லாம் வதங்கிய பின்  தேவையான உப்புடன்  நறுக்கிய கீரையை சேர்த்து மத்தால் மசிக்கவும்.

எண்ணையில் கடுகு,சீரகம்,மிளகாய் வற்றல் தாளிக்கவும்.





17.வாழைத்தண்டு கூட்டு

 தேவையானவை:

வாழைத்தண்டு  ஒரு தண்டு

கடலை-  பருப்பு 3 டேபிள்ஸ்பூன்

பயத்த பருப்பு 3 டேபிள்ஸ்பூன்

சின்ன வெங்காயம் 10

தக்காளி 2

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

தனியா தூள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

கொத்தமல்லித்தழை சிறிதளவு

உப்பு,தேங்காயெண்ணை தேவையானது

—————

அரைக்க:

தேங்காய் துருவல் 1/4 கப்

பச்சை மிளகாய் 2

மிளகாய்  வற்றல் 2

சீரகம் 1 ஸ்பூன்

———-

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

சீரக 1 டீஸ்பூன்

இடித்த பூண்டு 2

கறிவேப்பிலை சிறிதளவு

———-

செய்முறை:

வாழைத்தண்டை பட்டையை எடுத்துவிட்டு நாரை நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.

பயத்தம்பருப்பையும்,கடலைபருப்பையும் குக்கரில் வைத்து வேகவைத்துக்கொள்ளவும்

அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் மஞ்சள் தூள்,உப்பு   சேர்த்து  வாழைத்தண்டுடன் வேகவைக்கவேண்டும்..வாழைத்தண்டு நன்றாக வெந்தவுடன் வேகவைத்த இரண்டு பருப்பையும்,அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.இதனை அப்படியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவேண்டும்.

வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,சீரகம் இடித்த பூண்டுகறிவேப்பிலை தாளித்து  சின்ன வெங்காயம்,தக்காளி இரண்டையும் வதக்கி அதனுடன் தனியா தூள்,மிளகாய் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம்,தக்காளி நன்றாக வதங்கியவுடன் வேகவைத்த வாழைத்த்ண்டு,பருப்பு கலவை இரண்டையும் சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

சுவையான வாழைத்தண்டு  கூட்டு ரெடி.



16,பூண்டு குழம்பு

 


தேவையானவை:
பூண்டு 20 பல்
சின்ன வெங்காயம் 10

புளி ஒரு எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 க
வெல்லம் (பொடித்தது)1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
-------
அரைக்க:
தனியா 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
வெந்தய ம்1 டீஸ்பூன்
கடலை- பருப்பு  1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
வெந்தய ம்1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்
வாணலியில் நல்லெண்ணைய் கால் கப் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து பின்னர் பூண்டு,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,
பெருங்காயத்தூள்,தனியாதூள்.சாம்பார் பொடி மூன்றையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
புளியை கெட்டியாக கரைத்து விடவும்.
ஒரு கொதிவந்ததும் அரைத்த விழுதையும்  சேர்த்து சிறிது தண்ணீருடன் கொதிக்கவிடவும்..
இறக்குவதற்கு முன்பு காரம் அதிகம் என்று நினைப்பவர்கள் வெல்லம் சேர்க்கலாம்.

பூண்டு குழம்பை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.
இட்லி,தோசைக்கு சிறந்த side dish.

15.கொத்தவரங்காய் இனிப்பு கூட்டு

 


தேவையானவை
கொத்தவரங்காய் 1/4 கிலோ

துவரம்பருப்பு 1/2 கப்
புளி எலுமிச்சை அளவு
பொடித்த வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 10
------

தாளிக்க:
தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:


கொத்தவரங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
துவரம்பருப்பை மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். (4 விசில்)
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.
---
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்தவுடன் நறுக்கிய கொத்தவரங்காயை போட்டு வேகவைக்கவும்.
காய் நன்கு வெந்தவுடன் தேவையான உப்பையும் வேகவைத்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியாக வரும்போது பொடித்த வெல்லம் சேர்த்து இறக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தேங்காயெண்ணையில் தாளித்து  கூட்டுடன் சேர்க்கவும்.

14.கத்திரிக்காய் பொரித்தகூட்டு

 தேவையானவை:


கத்திரிக்காய்  1/2 கிலோ

பயத்தம்பருப்பு 1/2 கப்

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு எண்ணெய்  தேவையானது

அரைக்க:

மிளகாய்வற்றல் 4

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் 1 துண்டு

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

நிலக்கடலை 5

தேங்காய் துருவல்  1/2 கப்

தாளிக்க:
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு



செய்முறை:

 கத்திரிக்காயை  சிறு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

 பயத்தம்பருப்பை மஞ்சள் தூள்  சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைக்கவும்.


அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கிய கத்திரி துண்டுகளை சிறிது எண்ணெயில் வதக்கவும். அதனுடன்
 குக்கரில் இருந்து எடுத்த பயத்தம்பருப்பை தேவையான உப்புடன்
சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை  தேங்காயெண்ணையில் தாளிக்கவும்.

கத்திரிக்காய் கூட்டை சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம்.பூரி,சப்பாத்திக்கும் ஏற்றது.

Tuesday, March 21, 2023

13.பீர்க்கங்காய் கூட்டு

 



தேவையானவை:
பீர்க்கங்காய் 1
 காராமணி 1/2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
------
செய்முறை:
பீர்க்கங்காயை  தோலுரித்து  சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அடுப்பில்  வாணலியை வைத்து   காராமணியை நன்றாக வறுத்து மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும் காராமணி வெந்ததும் பீர்க்கங்காயை தேவையான  உப்புடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
(பீர்க்கங்காய் சீக்கிரம் வெந்துவிடும்)

தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் ,இஞ்சி இவற்றை விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

12.சுரைக்காய் கூட்டு

 


தேவையானவை:
சுரைக்காய் 1
கடலை பருப்பு 1/4 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது
தேங்காய் எண்ணெய்   2 டேபிள்ஸ்பூன்

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

------
செய்முறை:

சுரைக்காயை தோலை சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.கடலைபருப்பை சிறிது வறுத்து தண்ணீர் விட்டு  வேக வைக்கவும்.
அடுப்பில்  வாணலியை வைத்து   சுரைக்காயை  மஞ்சள் தூள் சேர்த்து கடலை பருப்புடன்  .தேங்காயெண்ணையில் வதக்கவேண்டும்.தண்ணீர் விடவேண்டாம்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.சுரைக்காய் வெந்தவுடன் 

தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை  தேங்காயெண்ணயில் தாளித்து   அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

சுரைக்காய் கூட்டை சாதத்தோடு சேர்ந்து சாப்பிடலாம்.சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.

11. கொண்டக்கடலை காரக்குழம்பு

 தேவையானவை:

கொண்டக்கடலை 1 கப்

வெங்காயம் 2

தக்காளி 2

பச்சை மிளகாய் 2

சோம்பு 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள் ஒவ்வொன்றும் 1 டீஸ்பூன்

உப்பு,நல்லெண்ணைய்  தேவையானவை.

———-

அரைக்க:

தேங்காய் துருவல் 3/4 கப்

பொட்டுக்கடலை  1 டேபிள்ஸ்பூன்

முந்திரி-பருப்பு  10

கசகசா  1/2 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

சோம்பு 1 டீஸ்பூன்

செய்முறை:

கொண்டக்கடலையை 4 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் குக்கரில் வைத்து (4 விசில்) எடுக்கவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை (கசகசாவை மட்டும் தண்ணீரில் அரை மணிநேர ஊறவைத்து) விழுதுபோல அரைத்து எடுத்து வைக்கவும்

வாணலியில் நல்லெண்ணை ஊற்றி சோம்பு,பச்சைமிளகாய் ,பொடியாக நறுக்கிய வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து  வதக்கவேண்டும்.   வெங்காயம் பொன்னிறமாக  வந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி,இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள்  தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,தேவையான உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.அரைத்த விழுதை சிறிது தண்ணீருடனும் வேகவைத்த கொண்டக்கடலையுடனும் கலந்து சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவேண்டும்


Monday, March 20, 2023

10. சுண்டைக்காய் வத்தக்குழம்பு

 




தேவையானவை:

காய்ந்த சுண்டைக்காய் 1/2 கப்
பூண்டு 5 பல்
சின்ன வெங்காயம் 10
புளி எலுமிச்சை அளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 கப்
உப்பு தேவையானது
--
 சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:



சுண்டைக்காயை நெய் விட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பூண்டு,சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
---
வாணலியில் கால் கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
உரித்த பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சாம்பார் பொடி  தனியா தூள்,மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணைய் மேலே வந்ததும் இறக்கவும்.
கடைசியில் வறுத்த சுண்டைக்காயை போட்டுக்கலக்கவும்
——-
வெங்காயம் பூண்டு  இல்லாமலும் பண்ணலாம்..
சாம்பார் பொடிக்கு பதிலாக கீழே குறிப்பிட்ட பொடியை சேர்த்தும் பண்ணலாம்
மிளகாய்  வற்றல் 4,
தனியா 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலை-பருப்பு  1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகு 1/2 டீஸ்பூன்
வெந்தய ம் 1 டீஸ்பூன்
எல்லாவற்றையும் வறுத்து பொடியாக்கி சேர்க்கலாம்.

9.பருப்பு உருண்டைக் குழம்பு

 




தேவையானவை:
பருப்பு உருண்டைக்கு தேவையானவை

துவரம்பருப்பு  1 கப்
கடலைபருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல்  3
சோம்பு 1 டீஸ்பூன்
வெங்காய ம் 1
மஞ்சள். தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை  சிறிதளவு
உப்பு 1/2 டீஸ்பூன்
அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன்
———-
குழம்புக்கு தேவையானவை:

புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய்3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணைய்  1டேபிள்ஸ்பூன்
 கடுகு  1டீஸ்பூன்
வெந்தயம்.   1டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

துவரம் பருப்பையும் கடலைபருப்பையும் 3 மணிநேர தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி அதனுடன் மிளகாய் வற்றல்,சோம்பு,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து சற்றே கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,மஞ்சள்தூள்,அரிசி மாவு சேர்த்து  நன்றாக பிசைந்து  சிறு சிறு உருண்டைகளாக்கி இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 நிமிட வைத்து எடுக்கவும். பருப்பு உருண்டை ரெடி
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி எடுக்கவும்.


அடுப்பில்   வாணலியை  வைத்து சிறிது எண்ணெயில்     கடுகு,வெந்தயம் பெருங்காயத்தூள்,மிளகாய் வற்றல்
கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் சாம்பார் பொடி  தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.நன்றாக கொதித்தபின் ரெடியாக உள்ள பருப்பு உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு சிறிது கொதித்த பின் அடுப்பை அணைக்கலாம்.

8. பூசணி ரசவாங்கி

 தேவையானவை:

பூசணி   1/4 கிலோ

கொண்டக்கடலை 1 கப்

துவரம்பருப்பு 3/4 கப்

புளி 1 எலுமிச்சை அள்வு

மஞ்சள்தூள்  1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

----------------

அரைக்க:

தனியா 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு 2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 6

தேங்காய் துருவியது 1 கப்

------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கடலைபருப்பு 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 2

கறிவேப்பிலை ஒரு கொத்து

-----------------

செய்முறை:

பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்/


துவரம்பருப்பை 2 கப் தண்ணீர்,மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவேண்டும். (4 விசில்)

கொண்டக்கடலையை இரவு தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

கற்சட்டியில் அல்லது பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய  பூசணி துண்டுகளை வதக்கவும்.

பூசணி வெந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து அத்னுடன் தேவையான உப்பு. அரைத்த பொடியுடன் கொதிக்கவைக்கவேண்டும்.

கடைசியில் வேகவைத்த பருப்பையும், வேகவைத்த கொண்டக்கடலையயும் கொட்டி சேர்ந்து கொதித்த பின்  சிறிது எண்ணெயில்கடுகு,கடலைபருப்பு,மிளகாய் வற்றல்,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளிக்கவும்.

7. மா,முருங்கை,பலாக்கொட்டை சாம்பார்

 தேவையானவை:

முருங்கை  1

பலாக்கொட்டை 6

மாங்காய் 1

துவரம்பருப்பு 3/4 கப்

புளி எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி  2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

-------------------------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 1

கறிவேப்பிலை  ஒரு கொத்து

-------------------------

செய்முறை:

குக்கரில் ஒரு அடுக்கில் துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து 2 கப் தண்ணீருடனும், கீழ்  அடுக்கில் பலாக்கொட்டையை இடித்து சிறிது தண்ணீருடனும் வேகவைக்கவேண்டும். ( 4 விசில்)

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

மாங்காயை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முருங்கைதுண்டுகள்,வேகவைத்த பலாக்கொட்டை ,,தேவையான உப்பு,சாம்பார் பொடி சறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். பின்னர் மாங்காய் துண்டுகளை சேர்க்கவேண்டும்.

எல்லாம்சிறிது வெந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

கடைசியில் வேகவைத்த பருப்பும் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்.

சிறிது எண்ணெயில் கடுகு,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.



6. முள்ளங்கி சாம்பார்

 தேவையானவை:

முள்ளங்கி  6

துவரம்பருப்பு   3/4 கப்

புளி எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி   1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

கொத்தமல்லித்தழை சிறிதளவு

----------------------------

அரைக்க:

தனியா 1 டீஸ்பூன்

வெந்தயம் 1/2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 2

கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்

மிளகு 1/2 டீஸ்பூன்

சீரகம் 1/2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் 1/4 கப்

பெருங்காயம் 1 துண்டு

கொத்தமல்லித்தழை சிறிதளவு

--------------------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை ஒரு கொத்து

------------------

செய்முறை

 முள்ளங்கியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு வட்ட வட்டமாக  வெட்டிக்கொள்ளவும்.

துவரம்பருப்பை  இரண்டு கப் தண்ணீருடன்  குக்கரில் வைத்து வேகவைக்கவும்.( 4 விசில்)

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

அரைக்கக்கொடுத்துள்ளவைகளை எண்ணெயில் வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து .கடுகு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய  முள்ளங்கி  துண்டுகளை மஞ்சள்தூளுடன் சேர்த்து  வதக்கவும்.

 முள்ளங்கி  வெந்தவுடன் புளித்தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான உப்பு,சாம்பார் பொடி,  அரைத்த விழுது பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

புளி பச்சை வாசனை போனபின் வேகவைத்த பருப்பை சேர்த்து சிறிது கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும்.

கடைசியில் கொத்தமல்லித்தழை தூவவும்.

5. முருங்கை,வெங்காயம் சாம்பார்

 தேவையானவை:

முருங்கைக்காய்  2

சின்ன வெங்காயம்  10

துவரம்பருப்பு 3/4 கப்

புளி எலுமிச்சை அளவு

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை ஒரு கொத்து

கொத்தமல்லித்தழை சிறிதளவு

உப்பு,எண்ணெய் தேவையானது

--------------------

அரைக்க:

தனியா 2 டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்

மிளகாய் வற்றல்  6

வெந்தயம் 1 டீஸ்பூன்

பெருங்காயம் 1 துண்டு

தேங்காய் துருவல் 1/2 கப்

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

----

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

வெந்தயம் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

----------------------

செய்முறை:

முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்

வெங்காய்த்தை தோலுரித்துக் கொள்ளவும்

துவரம்பருப்பை 1 1/2 கப் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வைத்து எடுக்கவும் ( 4 விசில்)

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

அரைக்கக் கொடுத்துளள்வைகளை எண்ணெய்யில் வறுத்து விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு முருங்கைக்காயையும் வெங்காயத்தையும் நன்றாக வதக்கவும்.

இரண்டும் சிறிது வெந்தவுடன் புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவைக்கவும்.

புளி பச்சை  வாசனை போனபின் அதில் தேவையான உப்பு,அரைத்த விழுது.வெந்த பருப்பு எல்லாவற்றையும் சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

சாம்பார் கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து கொத்தமல்லிதழையை தூவவும்.


4. குடமிளகாய் சாம்பார்

 தேவையானவை:

குடமிளகாய் 3

துவரம்பருப்பு   3/4கப்

புளி எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

கொத்தமல்லித்தழை சிறிதளவு

----------------------------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

  குடமிளகாயை நன்றாக கழுவி விட்டு சிறு  சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

துவரம்பருப்பை  இரண்டு கப் தண்ணீருடன்  குக்கரில் வைத்து வேகவைக்கவும்.( 4 விசில்)

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து .கடுகு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய குடமிளகாய் 

துண்டுகளை மஞ்சள்தூளுடன் சேர்த்து  வதக்கவும்.

 குடமிளகாய் வெந்தவுடன் புளித்தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான உப்பு,சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

புளி பச்சை வாசனை போனபின் வேகவைத்த பருப்பை சேர்த்து சிறிது கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும்.

கடைசியில் கொத்தமல்லித்தழை தூவவும்.

3. பாகற்காய் பிட்லை

 

தேவையானவை:

மிதி பாகற்காய்  1/4 கிலோ
கொண்டைக்கடலை 1/2 கப் (channa)
துவரம்பருப்பு  3/4 கப்
புளி எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய்   தேவையானவை
----
அரைக்க:

தனியா 2 டேபிள்ஸ்பூன்
கடலைபருப்பு 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்  6
மிளகு 1/2  டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
பெருங்காயம் ஒரு துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு

-----------
உப்பு,எண்ணெய் தேவையானது

---
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
,உளுத்தம்பருப்பு, 1 டீஸ்பூன் 
மிளகாய்வற்றல், 2
கறிவேப்பிலை 1 கொத்து 
-----

செய்முறை:


கொண்டக்கடலையை முந்தினநாள் இரவே ஊறவைக்கவும்.
. ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் கீழ் அடுக்கில் துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு கப் தண்ணீரிலும், மேல் அடுக்கில் கொண்டக்கடலையை சிறிது தண்ணீருடனும் வைத்து 4 விசில் வந்ததும் குக்கரை அணைக்கவேண்டும்,

மிதி பாகற்காயை காம்பை எடுத்துவிட்டு குறுக்காக வெட்டவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணய் விட்டு வறுத்து நைசாக இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு எண்ணைவிட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.

பின்னர் குறுக்காக வெட்டிய பாகற்காய்,ஊறவைத்த கொண்டக்கடலை இரண்டையும் சேர்த்து வதக்கவும்.


மிதி பாகற்காய் நன்றாக வெந்ததும் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்கவைக்கவும்.
புளி பச்சை வாசனை போனபிறகு    வேகவைத்த துவரம்பருப்பு, கொண்டக்கடலை,அரைத்த விழுது மூன்றையும்   தேவையான  உப்புடன்  சேர்த்து கொதிக்க வைக்கவும்

எல்லாம் சேர்ந்து கொதிக்கும் போது தேவையான தண்ணீர் சிறிது சேர்த்து நன்றாக கொதித்த வுடன் அடுப்பை  அணைத்து கொத்தமல்லித்தழை  தூவவும்.
சுவையான பாகற்காய் பிட்லை ரெடி.

Sunday, March 19, 2023

1. எண்ணைய் கத்திரிக்காய் குழம்பு




தேவையானவை:

சின்ன கத்திரிக்காய் 12             
பெரிய வெங்காய்ம்  2     
புளி எலுமிச்சைஅளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்   1/4 கப்
சாம்பார் பொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது                                      
-------
வறுத்து அரைக்க தேவையானது:

வற்றல் மிளகாய்  4
தனியா  1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் 1/2 கப்
வேர்க்கடலை 10
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2  டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு சிறிதளவு
--------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
சின்ன கத்திரிக்காயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்    
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.     

வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவைகளில் மிளகாய் வற்றல்,தனியா இரண்டையும் எண்ணெயில்லாமல் வறுக்கவும. மற்றவற்றை 
எண்ணெயில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் சிறிது உப்பு,தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த விழுதை குறுக்கே வெட்டிய ஒவ்வொரு கத்திரிக்காயின் உள்ளும் அடைத்து மேலே கொஞ்சம் எண்ணெய் தடவவும்.

அப்படியே வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து வதக்கலாம்.
இல்லாவிடில் Oven ஐ Preheat செய்து விட்டு 25 நிமிடம் வைக்கவும்.(400 deg.-F)(இந்த முறையில் செய்தால் கத்திரிக்காய் மொறு மொறு என்று இருக்கும்.) இதனை தனியே எடுத்து வைக்கவும்.
              
                           
அடுப்பில் நல்லெண்ணய்  வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து  நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மீதியுள்ள அரைத்த விழுதை கரைத்து
உப்பு சேர்த்து  புளிதண்ணீர்,.மஞ்சள்தூள்,சாம்பார் பொடி சேர்க்கவும்.நன்கு கொதித்ததும் வதக்கிய கத்திரிக்காயை சேர்த்து
இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி.

2. வெண்டைக்காய் சாம்பார்



தேவையானவை:

வெண்டைக்காய் 15

துவரம்பருப்பு   3/4 கப்

புளி எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

கொத்தமல்லித்தழை சிறிதளவு

----------------------------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை ஒரு கொத்து

------------------

செய்முறை:

வெண்டைக்காயை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு ஒரு துணியால் துடைத்து  நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

துவரம்பருப்பை  இரண்டு கப் தண்ணீருடன்  குக்கரில் வைத்து வேகவைக்கவும்.( 4 விசில்)

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து .கடுகு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை மஞ்சள்தூளுடன் சேர்த்து  வதக்கவும்.

வெண்டைக்காய் வெந்தவுடன் புளித்தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான உப்பு,சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

புளி பச்சை வாசனை போனபின் வேகவைத்த பருப்பை சேர்த்து சிறிது கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும்.

கடைசியில் கொத்தமல்லித்தழை தூவவும்.



36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...