தேவையானவை:
சிறிய பிஞ்சு கத்திரிக்காய் 15
சின்ன வெங்காயம் 10
பூண்டு 8 பல்
தக்காளி 2
---
புளி ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் 2 டீஸ்பூன்
நல்லெண்ணைய் கால் கப்
---
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
---
அரைக்க:
தேங்காய் துருவல் அரை கப்
முந்திரி 8
----
செய்முறை:
சின்ன கத்திரிக்காயை குறுக்குவாட்டில் அரை அங்குலம் நறுக்கிக்கொள்ளவும்.(கத்திரிக்காய் முழு உருவில் இருக்க வேண்டும்)
சின்ன வெங்காயம்,பூண்டு இரண்டையும் உரித்துக்கொள்ளவும்.
தக்காளியை எண்ணைய் விட்டு பேஸ்டு போல வதக்கிக்கொள்ளவும்.
புளியை இரண்டுகப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவல்,முந்திரி இரண்டையும் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
-----
வாணலியில் நல்லெண்ணைய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
பின்னர் கத்திரிக்காய்,சின்ன வெங்காயம்,பூண்டு மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவும்.
செய்துவைத்த தக்காளி விழுதை போட்டு அதனுடன் ஒரு கப் தண்ணீர் ,உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்.
புளியை நன்றாக கரைத்து விடவும்.
பின்னர் மஞ்சள்தூள்,தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
எண்ணைய் பிரிந்து வந்ததும் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்