Showing posts with label சிறுதானிய சிற்றுண்டிகள். Show all posts
Showing posts with label சிறுதானிய சிற்றுண்டிகள். Show all posts

Sunday, January 22, 2017

பாதாம் வரகு லட்டு

தேவையானவை:

பாதாம் பருப்பு 15
முந்திரிபருப்பு 15
வரகரிசி   1/2 கப்
பொட்டுக்கடலை 1/2 கப்
கருப்பட்டி பொடித்தது  1/2 கப்
நெய்  1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி

----------
செய்முறை:

பாதாம் பருப்பை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து வைக்கவும்.
முந்திரிபருப்பு,பாதாம் இரண்டையும் நைசாக அரைக்கவும்.
வரகரிசியை வறுத்து பொடி பண்ணவும்.
பொடித்த பாதாம்,முந்திரி,வரகரிசி இதனுடன் பொடித்த கருப்பட்டியை சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும். ஏலத்தூள் சேர்க்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள மாவு,உருக்கின நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

பாதாம் வரகு லட்டு சிறுவர் சிறுவர்களுக்கு ஒரு மாலை நேர சிற்றுண்டியாகும்.

Monday, October 3, 2016

ராகி புட்டு



தேவையான பொருட்கள்:

கேழ்வரகு(ராகி) மாவு -  1 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
தூள் வெல்லம் 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு  சிறிதளவு

செய் முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது ராகி மாவை  பரப்பிவிட்டு இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடத்தில் எடுக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து மாவை நன்றாக உதிர்க்கவும்.பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சிறிது உப்பு சேர்த்து பிசிறவும்.
பிசிறிய மாவை மீண்டும்வெள்ளை துணியில் பரப்பி இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் கழித்து எடுக்கவும்,

குக்கரில் இருந்து எடுத்து தேங்காய் துருவல்,தூள் வெல்லம்,நெய்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசிறவும்

Wednesday, September 21, 2016

தினை ரவா தோசை



தேவையானவை:
 தினை ரவா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தயிர் - ஒரு கப்
தண்ணீர்  2 கப்
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - 10 பருப்பு
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 2
----------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
-----------------

செய்முறை:

தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.வறுத்த அரிசியை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

 ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய தினை ரவா,அரிசி மாவு,தயிர்,தண்ணீர் தேவையான உப்புசேர்த்து  ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன்,மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.

Monday, July 11, 2016

வரகு புலவ்

தேவையானவை:

வரகு 1 கப்
வெங்காயம்   2
பச்சைமிளகாய் 2
பட்டாணி 1/4 கப்
காரட் 2
பீன்ஸ்  10
உருளைக்கிழங்கு 2
காலிஃபிளவர் 10 பூக்கள்
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் 1 மேசைக்கரண்டி
புதினா சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவையானது
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
தாளிக்க:

பட்டை 1 துண்டு
லவங்கம் 4
சோம்பு 1 தேக்கரண்டி
ஏலக்காய்  2
-----------

செய்முறை:


வரகு அரிசியை 2 மணி நேரம்   2 கப் தண்ணீருடன் ஊறவைக்கவேண்டும்.

வெங்காயம்,காரட்,பீன்ஸ் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன் முறுவலாக வதக்கவும்..பச்சைமிளகாயை குறுக்கே வெட்டி சேர்த்து பின்னர் எல்லா காய்கறிகளையும் அதனுடன் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது,மசாலா தூள் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

குக்கரில் ஊறவைத்த வரகரிசியை (தண்ணீருடன்) வதக்கிய காய்கறி கலவையுடன் கலந்து புதினா,கொத்தமல்லித்தழை  சேர்த்து 4 விசில் வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.

வரகரிசியில் குறைவான மாவுச்சத்துதான்.பசைத்தன்மை அறவே இல்லாதது.கொழுப்பை அதிகமாக்காது.நல்ல கொழுப்பைக் கொண்டது.
அதனால் நீரிழிவும் இதயநோயும் வராமலிருக்க உதவும்..







Monday, May 30, 2016

சாமை கிச்சடி



                                       
தேவையானவை:
                             
 சாமை 1 கப்
பயத்தம்பருப்பு 1/4கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 2
பட்டாணி 1/2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4 பல்
தண்ணீர்  4 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:



 சாமை,பயத்தம்பருப்பு  இரண்டையும்  தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு நான்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில்  சாமை யை  3 கப் தண்ணீரிலும் ,பயத்தம்பருப்பு,மஞ்சள் தூள் சேர்த்து  1 கப் தண்ணீர் வைத்து ( 5 விசில்) எடுக்கவும்.
.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கியுள்ள தக்காளி, பட்டாணி ,இஞ்சி,பூண்டு வதக்கி குக்கரில் இருந்து எடுத்த சாமை,பயத்தம்பருப்பு,தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
எல்லாம் ஒன்று  சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.

Monday, May 16, 2016

வரகரிசி தயிர் சாதம்




தேவையானவை:                        

                                                                                        வரகரிசி
                                                                           


வரகரிசி 1 கப்
தண்ணீர் 3 1/2 கப்
தயிர் 1 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
அரைக்க:
சீரகம் 1 தேக்கரண்டி
தயிர் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 1

----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:




வரகரிசியை ஒரு கப்புக்கு 3 1/2 கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து ஒரு அகண்ட தட்டில் ஆறவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
------
குக்கரில் இருந்து எடுத்த வரகரிசி நன்றாக ஆறியதும் அரைத்த விழுதை அதனுடன் கலக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து மேலும் மீதமுள்ள தயிரை ஊற்றி பிசையவும்.
கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.

வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்

Wednesday, May 4, 2016

ராகி புட்டு



தேவையான பொருட்கள்:

கேழ்வரகு(ராகி) மாவு -  1 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
தூள் வெல்லம் 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு  சிறிதளவு

செய் முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது ராகி மாவை  பரப்பிவிட்டு இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடத்தில் எடுக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து மாவை நன்றாக உதிர்க்கவும்.பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சிறிது உப்பு சேர்த்து பிசிறவும்.
பிசிறிய மாவை மீண்டும்வெள்ளை துணியில் பரப்பி இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் கழித்து எடுக்கவும்,

குக்கரில் இருந்து எடுத்து தேங்காய் துருவல்,தூள் வெல்லம்,நெய்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசிறவும்.

Tuesday, March 22, 2016

சாமை குழிப்பணியாரம்



சாமை அரிசி 1 கப்
உளுந்து 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
வாழைப்பழம் 1
பொடித்த வெல்லம் 1/2 கப்
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு ஒரு சிட்டிகை
--------
செய்முறை:
சாமை அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
சாமை அரிசியை வடிகட்டி நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
உளுந்து,தேங்காய் துருவல்,வாழைப்பழம்,பொடித்த வெல்லம் நான்கையும் நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்து வைத்துள்ள இரண்டு விழுதினையும் சேர்த்து சிட்டிகை உப்புடன் நன்கு கலக்கவேண்டும்.
ஏலத்தூள் சேர்க்கவேண்டும்.

குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எல்லாக்குழிகளிலும் எண்ணைய் ஊற்றி மாவை சிறு கரண்டியால் ஊற்றவேண்டும்.மாவு வெந்ததும் திருப்பிப்போட்டு (குச்சியால் திருப்பவேண்டும்) மீண்டும் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி எடுக்கவேண்டும்.

Monday, February 22, 2016

தினை இட்லி


தேவையானவை:

தினை 3 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
அவல் 1/4 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
----
செய்முறை:



தினையை தனியாகவும்.உளுத்தம்பருப்பு வெந்தயம் இரண்டையும் சேர்த்தும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அவலை அரை மணிநேரம் ஊறவைத்தால் போதும்.
உளுத்தம்பருப்பு,வெந்தயம்,அவல் மூன்றையும் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவேண்டும்.
தினையை தனியாக அரைத்து அரைத்து வைத்துள்ள உளுத்தம்பருப்பு,வெந்தயத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.
ஆறு மணிநேரம் கழித்து மாவு புளித்துவிடும்.பின்னர் இட்லியாக வார்க்கலாம்

தினையில் புரோட்டீன்,நார்சத்து உள்ளது.

Monday, December 21, 2015

தேனும் தினைமாவும்


தேவையானவை:
தினை 1 கப்
துருவிய வெல்லம் 1/2 கப்
ஏலக்காய்தூள் 1 தேக்கரண்டி
தேன் 2 தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி
------
செய்முறை:

தினையை லேசாக நீர் தெளித்து பிசிறி வைக்கவும்.
அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து பொடிக்கவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் பொடித்த தினையுடன் பொடித்த வெல்லம்,தேன் சேர்த்து பிசையவும்.
தினை மாவுடன் நெய் சேர்த்து உருண்டைகளாக பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
-------
தேனும் தினையும் மிகுந்த சத்துள்ள உணவு.
சுவையும் நன்றாக இருக்கும்.
தேனும் தினையும் இதிகாச காலங்களிலிருந்து சிறப்பு மிகுந்த உணவாக சொல்லப்படுகிறது

Wednesday, December 9, 2015

குதிரைவாலி உப்புமா



தேவையானவை:

 குதிரைவாலி 2 கப்

பீன்ஸ் 10

காரட் 2

பட்டாணி 1/2 கப்

தக்காளி 2

வெங்காயம் 2
தண்ணீர் 4 கப்
நெய் 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு

எலுமிச்சம்பழ சாறு 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது
---------

தனியா தூள் 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

வெள்ளை எள் 1 டீஸ்பூன்

நிலக்கடலை 10

-----

செய்முறை:
குதிரைவாலியை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,பீன்ஸ்,காரட் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

பின்னர் பீன்ஸ்,காரட்,பட்டாணி, எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும் உப்பு சேர்க்கவும்.

அதனுடன் 4 கப்,தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

வறுத்து வைத்துள்ள  குதிரைவாலியை சிறிது சிறிதாக போட்டு  கிளறவும்.
அடுப்பை ஸிம்மில் வைத்து கிளறவும்.வேகுவதற்கு 10 நிமிடம் ஆகும்.

தனியா தூள்,மிளகாய் தூள் சேர்க்கவும்.

இறக்கிய பின் வெள்ளை எள்,நிலக்கடலை இரண்டையும் வறுத்து பொடி பண்ணி தூவவும்.

கடைசியில் எலுமிச்சம்பழ சாற்றினை சேர்க்கவும்.

Tuesday, November 17, 2015

வெஜ் கம்புமாவு ஊத்தப்பம்



தேவையானவை

 கம்பு மாவு -1கப்
இட்லிமாவு -1/4கப்
சின்னவெங்காயம் -5
கேரட்துருவல் -1/4கப்
பச்சைமிளகாய் -1
இஞ்சி -சிறுதுண்டு
கறிவேப்பிலை -சிறிது
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் தேவையானது
----------

செய்முறை

வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்..
ஒரு பாத்திரத்தில் ராகிமாவு,இட்லிமாவு,சிறிது உப்பு போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதம் கரைத்துக்கொள்ளவும்..
அத்துடன் நறுக்கியவற்றை போட்டு கேரட்துருவலையும் போட்டு நன்கு கலக்கவும்.

 தோசைக்கல்லை அடுப்பில்வைத்து காய்ந்தவுடன் ஒருகரண்டி மாவு ஊற்றி  1ஸ்பூன் எண்ணை சுற்றி ஊற்றவும்.
மூடிவைத்து வேகவிடவும்.அடுப்பை சிம்மில்வைக்கவும்.
சிறிது வெந்தவுடன் திருப்பிபோட்டு இருபக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.
சுவையான வெஜ் கம்புமாவு ஊத்தப்பம் ரெடி..


Monday, October 26, 2015

.வரகு போண்டா







தேவையானவை:
வரகு அரிசி மாவு - 3 கப்
கடலை மாவு - 2 கப்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
சின்னவெங்காயம் - 10
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி,
சீரகத்தூள் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு
,பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
 உப்பு - தேவையான அளவு,
 எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:



ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்
 எண்ணெய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் ஓன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்துக் கொள்ளவும்.
 கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
இதற்கான side dish தேங்காய் சட்னி.

Monday, October 12, 2015

. தினை ரவா தோசை



தேவையானவை:
 தினை ரவா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தயிர் - ஒரு கப்
தண்ணீர்  2 கப்
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - 10 பருப்பு
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 2
----------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
-----------------

செய்முறை:


தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.வறுத்த அரிசியை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

 ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய தினை ரவா,அரிசி மாவு,தயிர்,தண்ணீர் தேவையான உப்புசேர்த்து  ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன்,மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.

Monday, October 5, 2015

சாமை அரிசிப் பொங்கல்





தேவையானவை:

சாமை அரிசி  1 கப்
சீரகசம்பா அரிசி 3/4 கப

பயற்றம்பருப்பு 1/2 கப்

மிளகு 15

சீரகம் 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

முந்திரிபருப்பு 10

நெய் 1/4 கப்

தண்ணீர்  8 கப்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கருவேப்பிலை ஒரு கொத்து

உப்பு தேவையானது



செய்முறை:

சாமை அரிசி,சீரகசம்பா அரிசி பயற்றம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய்விடாமல் வறுக்கவும்

 மூன்றையும்  குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் குக்கரில் வைத்து.ஆறு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.அப்பொழுதுதான் நன்றாக குழைவாக இருக்கும்

குக்கரை திறந்தவுடன் உப்பு சேர்க்கவும்.அதனுடன்


மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.

பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.

கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.

சுவையான சாமைஅரிசிப் பொங்கல் ரெடி.

Monday, August 17, 2015

வரகு உப்புமா கொழுக்கட்டை

தேவையானவை:

வரகரிசி 1 கப்          
                                                  
-------
அரைக்க:
துவரம்பருப்பு 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
தெங்காய்துருவல் 1/2 கப்
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 2
-------
செய்முறை:




வரகரிசியைவெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்..
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
(ஒரு கப் வரகரிசிக்கு  2 1/2 கப் தண்ணீர் வீதம்)
அரைத்த விழுதையும் தேவையான உப்பையும் அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
தண்ணீர் கொதித்தவுடன்  வரகசிசியை மெதுவாக தூவி கட்டியில்லாமல் கிளறவேண்டும்.
தேவையானால் சிறிது எண்ணெய் சேர்த்து கிளறலாம். அல்லது
(வரகரிசி,அரைத்தவிழுது.தண்ணீர்.உப்பு,தாளித்தவைகள் எல்லாவற்றையும் குக்கரில் வைக்கும் பாத்தி


ரத்தில் வைத்து 4 விசில் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்,)

ஆறினவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து   ஐந்து நிமிடம் கழித்து எடுக்க
சுவையான வரகு உப்புமா கொழுக்கட்டை ரெடி.

Monday, June 15, 2015

வரகு ..,பயறு. கிச்சடி.




தேவையானவை:

முழு பயறு 1 கப்
வரகரிசி  1/4 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 3
இஞ்சி ஒரு துண்டு
பட்டை 1 துண்டு
கிராம்பு 3
சீரகம் 1 மேசைக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
தண்ணீர்   5 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு.எண்ணெய் தேவையானது

------
செய்முறை:


முழு பயற்றை நான்கு மணிநேரம் 3 கப் தண்ணீரில் ஊறவைத்து அப்படியே குக்கரில் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வரகரிசியை ஒரு கப் தண்ணீரில்  இரண்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து நான்கு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி  பொடியாக நறுக்கிய பச்சைமிளக்காய்,இஞ்சி இரண்டையும் நன்றாக வதக்கவும்.
அதனுடன் குக்கரில் இருந்து எடுத்த முழுபயறு,வரகரிசி இரண்டையும் தேவையான உப்புடனும் மீதியுள்ள ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.

நெய்யில் பட்டை,கிராம்பு,சீரகம் தாளித்து இதனுடன் சேர்க்கவும்.
கடைசியில் கொத்தமல்லித்தழையை தூவவும்.

Monday, March 30, 2015

வரகு சர்க்கரை பொங்கல்



தேவையானவை:



வரகரிசி 1 கப்

பயற்றம்பருப்பு 1 மேசைக்கரண்டி

பொடித்தவெல்லம் 1 1/4

தண்ணீர் 4

நெய் 1/4 கப்

பால் 1/2 கப்

-----------------------

ஜாதிக்காய் 1 துண்டு

குங்குமப்பூ 1 டீஸ்பூன்

ஏலக்காய் 4

முந்திரிபருப்பு 10

கேசரிப்பவுடர் 1 /2டீஸ்பூன்



செய்முறை:




ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு பயற்றம்பருப்பை எண்ணைய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.

வரகரிசியை சிறிது நெய்யில் நன்றாக வறுக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.

குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த பயத்தம்பருப்பு, வறுத்த வரகரிசி நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ( ஐந்து விசில்) எடுக்கவும்.

குக்கரில் இருந்து எடுத்து ரெடியாக உள்ள வடிகட்டிய வெல்லத்தை சேர்த்து கிளறவும். வரகரிசியும் வெல்லமும் ஒன்று சேர்ந்து சர்க்கரை பொங்கல் பக்குவம் வரும்.


ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் கேசரிப்பவுடர்,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து  பொங்கலில் சேர்க்கவும் மீதமுள்ள பாலையும் பொங்கலில் சேர்க்கவும்.,முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

Friday, January 23, 2015

தினை இட்லி


தேவையானவை:
தினை 3 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
அவல் 1/4 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
----
செய்முறை:

தினையை தனியாகவும்.உளுத்தம்பருப்பு வெந்தயம் இரண்டையும் சேர்த்தும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அவலை அரை மணிநேரம் ஊறவைத்தால் போதும்.
உளுத்தம்பருப்பு,வெந்தயம்,அவல் மூன்றையும் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவேண்டும்.
தினையை தனியாக அரைத்து அரைத்து வைத்துள்ள உளுத்தம்பருப்பு,வெந்தயத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.
ஆறு மணிநேரம் கழித்து மாவு புளித்துவிடும்.பின்னர் இட்லியாக வார்க்கலாம்

தினையில் புரோட்டீன்,நார்சத்து உள்ளது.

Monday, December 22, 2014

தினை ரவா தோசை



தேவையானவை:
 தினை ரவா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தயிர் - ஒரு கப்
தண்ணீர்  2 கப்
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - 10 பருப்பு
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 2
----------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
-----------------

செய்முறை:

தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.வறுத்த அரிசியை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

 ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய தினை ரவா,அரிசி மாவு,தயிர்,தண்ணீர் தேவையான உப்புசேர்த்து  ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன்,மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...