Showing posts with label சாத வகைகள். Show all posts
Showing posts with label சாத வகைகள். Show all posts

Thursday, February 1, 2018

சேம்பு இலை பொரியல்

தேவையானவை:

சேம்பு இலை   4
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
துவரம் பருப்ப் 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 3
பெருங்காயம் 1 துண்டு
--------
செய்முறை:
முதலில்  மூன்று  பருப்புகளையும் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.
-------
சேம்பு இலையை பின்புறமாக ஒரு தட்டில் வைத்து பாதியாக கட் பண்ணி அதன் மேல் எண்ணையை தடவி அரைத்த மாவை பரவலாக இடவேண்டும்

பின்னர் அதனை சுருட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து பதினைந்து நிமிடம் கழித்து எடுக்கவேண்டும்.

இட்லி தட்டிலிருந்து எடுத்து சிறு துண்டுகளாக கட் பண்ணவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் சேம்பு துண்டுகளை பொரித்து எடுக்கவேண்டும்.

Friday, September 29, 2017

சுரைக்காய் பகாளாபாத்




தேவையானவை:

சுரைக்காய் துருவியது  1 கப்
தயிர் 1 1/2 கப்
பச்சை திராட்சை 1/2 கப்
மாதுளை முத்துகள் 1/2 கப்
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
------
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:


துருவிய சுரைக்காயை  அடுப்பில் வாணலியில் தண்ணீர்  சிறிது தெளித்து   வேகவைக்கவும்,.. ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்..
ஒரு பாத்திரத்தில் தயிருடன் வேகவைத்த சுரைக்காய்,உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,பெருங்காயத்தூள்,பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை
தாளித்து ரெடியாக உள்ள   பகாளாபாத்தில் கலக்கவேண்டும்.
பச்சை திராட்சை,மாதுளை முத்துகள் சேர்க்கலாம்.

அரிசி சாதத்தை குறைக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள் இதனை தயிர் சாதத்துக்கு பதில் சாப்பிடலாம்.


Wednesday, August 30, 2017

பனீர் புலவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி     1 கப்
பனீர் துண்டுகள் 15
வெங்காயம் 1
பட்டாணி   1/2 கப்
உருளைக்கிழங்கு 1
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
புதினா,கொத்தமல்லித்தழை   சிறிதளவு
நெய்  2 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய்    தேவையானது
-----
தாளிக்க:
பட்டை,லவங்கம்,ஏலக்காய்
--------------------
செய்முறை:


பாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
வெங்காயம், உருளைக்கிழங்கு இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பனீர் துண்டுகளை வெந்நீரில்   அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் நெய்யில் சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக  வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
----------
வாணலியில் சிறிது நெய்  வைத்து பட்டை,லவங்கம்,ஏலக்காய் தாளித்து  அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்

பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கு,பட்டாணி சேர்க்கவேண்டும். இஞ்சி பூண்டு விழுது தேவையான உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லிதழை சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
--------
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பாசுமதி அரிசியை வடிகட்டி 1 1/2 கப் தண்ணீருடன்  வைத்து அதனுடன் வதக்கிவைத்துள்ள காய்கறி கலவையை சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து புலவை எடுத்து  வறுத்த பனீரை சேர்த்து ஒரு கிளறு கிளறவேண்டும்.

பனீரில் புரத சத்தும்.சுண்ணாம்பு சத்தும் உள்ளது.
குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tuesday, August 16, 2016

தேங்காய் பால் புலாவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
தேங்காய் பால் 2 கப்
------
வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சிபூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை 1 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:

வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
கிராம்பு 2
ஏலக்காய் 2
பட்டை 1 துண்டு
----

செய்முறை:


பாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காய்ம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் கிராம்பு,ஏலக்காய் பட்டை மூன்றையும் வெண்ணையில் தாளித்து அதில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.அதனுடன் தக்காளி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்,

தேவையான உப்பு  சேர்த்து ஊறவைத்த அரிசியை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும். கொத்தமல்லித்தழையை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.

குக்கரில்  வைக்கும்  பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசி கலவையுடன் தேங்காய் பால் இரண்டு கப் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வைத்து அடுப்பை அணைக்கவேண்டும்.

 Electric cooker  ரிலும் வைக்கலாம்.

Monday, April 25, 2016

மாங்காய் சாதம்



தேவையானவை:

மாங்காய் 1
இஞ்சி ஒரு துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
வடித்த சாதம் 1 கப்
எலுமிச்சம்பழம் 1
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
பொடி பண்ண:
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
தனியா 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
-------------
தாளிக்க:
கடுகு 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:

மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
இஞ்சியையும் துருவிக்கொள்ளவும்
பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
பொடிக்க கொடுத்துள்ளவைகளை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
-----
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
அதனுடன் துருவிய மாங்காய், இஞ்சி,மஞ்சள்தூள்,தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் உதிரியாக வடித்த சாதம்,பொடித்து வைத்துள்ள பொடி,சிறிது உப்பு,தேங்காய் எண்ணெய்,எலுமிச்சம்பழ சாறு சேர்த்து நன்கு கிளறவும்.
சுவையான மாங்காய் சாதம் ரெடி.
தயிர் பச்சடி இதற்கு ஏற்ற sidedish

Monday, February 15, 2016

தக்காளி புலாவ்



தேவையானவை:

பாசுமதி அரிசி 2கப்
வெங்காயம் 3
தக்காளி 6
கொத்தமல்லித் தழை 1 கட்டு
பச்சைமிளகாய் 3
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
தனியா தூள்  1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
லவங்கம் 3
நெய் 1 தேக்கரண்டி
------
செய்முறை:
பாசுமதி அரிசியை நன்றாகக் களைந்து 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
தக்காளி,கொத்தமல்லித்தழை பச்சைமிளகாய்,,இஞ்சி பூண்டு விழுது நான்கையும் நன்றாக விழுது போல அரைக்கவேண்டும்.
ஊறவைத்த அரிசியை வடிகட்டி அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து கலந்து வைக்கவேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து நெய்யில் பட்டை லவங்கம் இரண்டையும் தாளிக்கவேண்டும்.
அதனுடன் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் மிளகாய் தூள்,தனியாத்தூள் சேர்த்து வதக்கி அரிசி,தக்காளிக் கலவையை தேவையான உப்புடன் சேர்த்து பிரட்டவேண்டும்.
நான்கு கப் தண்ணீர் விட்டு அப்படியே குக்கரில் வைத்து 3 விசில் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும். அல்லது ele.cooker ல் வைக்கலாம்.

சுவையான தக்காளி புலவ் ரெடி.

Monday, November 17, 2014

நெய் சோறு




தேவையானவை:

பச்சரிசி 1 கப்
தேங்காய் பால் 1 கப்
தண்ணீர் 1 கப்
வெங்காயம் 1
நெய் 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு 5
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
லவங்கம் 2
ஏலக்காய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:

அரிசியை நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வைக்கவேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து நெய் சேர்த்து வடிகட்டிய அரிசியை நன்றாக பிரட்டவேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பட்டை,லவங்கம்.ஏலக்காய்,கறிவேப்பிலை நான்கையும் எண்ணையில் வறுக்க வேண்டும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காய்த்தை சேர்த்து வதக்கவேண்டும்.

குக்கருக்குள் வைக்கும் பாத்திரத்தை எடுத்து அதில் பிரட்டிய அரிசி,வதக்கிய வெங்காயம்,பட்டை,லவங்கம்,ஏலக்காய்
தேங்காய் பால்,தண்ணீர்,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறி இரண்டு விசில் வந்ததும் இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.
குக்கரில் இருந்து எடுத்தால் சாதம் உதிரியாக இருக்கும்.
பின்னர் வறுத்த முந்திரிபருப்பை சேர்க்கலாம்.

வெஜிடபிள் குருமா வுடன் சேர்ந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்தால் பாக்கி இல்லாமல் வீட்டிற்கு பாக்ஸ் திரும்பி வரும்.

Wednesday, November 5, 2014

பாலக் புலாவ்



தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
பாலக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 2
Spring onion 1 கட்டு
பச்சை மிளகாய் 2
இஞ்சிபூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
Jalapeno 1
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு 10
--------
தாளிக்க:
பட்டை 1
கிராம்பு 2
ஏலக்காய் 2
சோம்பு 1 தேக்கரண்டி
-------
செய்முறை:


பாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

கடாயில் வெண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக் கீரை,spring onion, பச்சை மிளகாய்,Jalapeno,இஞ்சி பூண்டு விழுது,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி ஊறவைத்த அரிசியுடன் கலந்து அப்படியே Ele.cooker ல் வைக்கவும்.

கடைசியில் முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து போடவும்.

Thursday, October 9, 2014

குதிரைவாலி பிரிஞ்சி



தேவையானவை:

 குதிரைவாலி 1 கப்

பீன்ஸ் 10

காரட் 2

உருளைக்கிழங்கு 1
வேகவைத்த காராமணி 1/2 கப்

பட்டாணி 1/4 கப்
பச்சைமிளகாய் 2

தேங்காய்பால் 1 கப்
தண்ணீர் 1 கப்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானவை

-------

அரைக்க:

சோம்பு 1 டீஸ்பூன்

கசகசா 1/2 டீஸ்பூன்

முந்திரிபருப்பு 10

பூண்டு 4 பல்

-----

தாளிக்க:

பட்டை 1 துண்டு

லவங்கம் 2

------

செய்முறை:


குதிரைவாலி அரிசியை நெய்யில் நன்றாக வறுக்கவேண்டும்..

பீன்ஸ்,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கை தோலுரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைக்கவும்.

----

கடாயில் எண்ணைய் வைத்து பட்டை,லவங்கம் தாளித்து பொடியாக நறுக்கிய பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,வேகவைத்த காராமணி

பட்டாணி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் வதக்கவேண்டும்.அரைத்த விழுது,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

வறுத்த குதிரைவாலி அரிசியுடன் தேங்காய்பால் 1 கப்.தண்ணீர் 1  கப் வதக்கிய காய்கறி கலவை எல்லாவற்றையும் நன்றாக கலந்து ele.cookerல்

வைக்கவேண்டும்.

onionரெய்தா,குருமா இரண்டும் இதற்கு ஏற்றது.

Monday, August 11, 2014

சீரக சாதம்




தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 4
புதினா சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
வெங்காயம் 1
உப்பு தேவையானது

செய்முறை:


பாசுமதி அரிசியை  இரண்டு கப் தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும்.

வாணலியில் வெண்ணைய் வைத்து உருகினதும் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய்,புதினா,கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவேண்டும்.

 இதனை ஊறவைத்த பாசுமதி அரிசியுடன் உப்புடன் கலந்து அப்படியே

ele.cooker ல் வைக்கவேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி சிறிது வெண்ணெயில் பொன்னிறமாக வறுத்து சீரக சாதத்துடன் சேர்க்கவேண்டும்.

Thursday, July 24, 2014

மெக்சிகன் ரைஸ்


தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
--------
குடமிளகாய் 3
(பச்சை,மஞ்சள் சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று)
Spring onion 1 கட்டு
வெங்காயம் 2
Jalapeno slices 5
--------
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
தக்காளி பேஸ்டு 1/2 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
------
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:

பாசுமதி அரிசியை (ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர்) 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
குடமிளகாய்,வெங்காயம் இரண்டையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
spring onion ஐ பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
Jalapeno slices ஐ அப்படியே போடலாம்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்துள்ள குடமிளகாய்,spring onio,jalapeno slices மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
தேவையான  உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது,சீரகம்,தக்காளி பேஸ்டு,காரப்பொடி எல்லாம் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சிறிது வதங்கியதும் வெண்ணெய் சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியுடன் கலந்து அப்படியே Ele.cooker ல்
வைக்கலாம்.

Tuesday, June 10, 2014

பிரௌன் ரைஸ் பிஸிபேளாபாத்

தேவையானவை:   
பிரௌன் ரைஸ் 1 கப்

துவரம்பருப்பு 1/2 கப்

மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

தண்ணீர் 7 கப்

புளி ஒரு எலுமிச்சை அளவு

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

------

வெங்காயம் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பட்டாணி 1/2 கப்

-----

பொடி பண்ண:

கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

தனியா 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் 1/2 டீஸ்பூன்

மிளகு 10

வற்றல் மிளகாய் 5

பெருங்காயம் 1 துண்டு

கிராம்பு 2

பட்டை 1 துண்டு

துருவிய தேங்காய் 1/2 கப்

வறுத்து பொடி பண்ணியது:



-------

தாளிக்க:

கறிவேப்பிலை சிறிதளவு

மிளகாய் வற்றல் 2

முந்திரிபருப்பு 10

நிலக்கடலை 10 (உடைத்தது)

-----

செய்முறை:


பிரௌன் ரைஸை ஒரு கப்புக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம் வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் அடி பாத்திரத்தில் பிரௌன் ரைஸையும் மேல் தட்டில் துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து

ஒரு கப் தண்ணீருடன் வைத்து 6 விசில் விட்டு குக்கரை அணைக்கவேண்டும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.

வெங்காயத்தை முதலில் பொன்னிறமாக வதக்கி அதனுடன் மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

-----

வேகவைத்த சாதம்,பருப்பு இரண்டையும் குக்கர் பாத்திரத்தில் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

அதில் வதக்கின காய்கறிகள்,அரைத்து வைத்துள்ள பொடி,தேவையான உப்பு சேர்க்கவும்.

சாதம்,பருப்பு,காய்கறிகள்,பொடி எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து மீதமுள்ள தண்ணீர் (1 1/2 கப்)

சேர்த்து அடுப்பை ஸ்லிம்மில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்..

முந்திரிபருப்பு,நிலக்கடலை,கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் எல்லாவற்றையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

Sunday, May 11, 2014

மொகல் வெஜ் பிரியாணி



தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
பீன்ஸ்  10
காரட் 2
உருளைக்கிழங்கு 2
தக்காளி 4
வெங்காயம் 2
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
தயிர் 1/2 கப்
மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
தனியா தூள் 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் 1 மேசைக்கரண்டி
புதினா 1/4 கப்
கொத்தமல்லி தழை 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
பட்டை ஒரு துண்டு
லவங்கம் 2
பிரிஞ்சி இலை 1
-------
செய்முறை:


பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு மூன்றையும் நீட்டவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.
வெங்காய்ம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்லவேண்டும்.
--------
பாசுமதி அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும
அரிசியை கொதிக்கும் தண்ணீரில் (இரண்டு கப்) போட்டு அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும்.
அரிசி முக்கால் பதத்துக்கு வெந்துவிடும். தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
-----
கடாயில் எண்ணெய் வைத்து பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.(முடிந்தால் இஞ்சியை தனியாகவும்,பூண்டு தனியாகவும் அரைத்து சேர்க்கலாம்)
பிறகு தக்காளி வதக்கி அதனுடன் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பும்,,மிளகாய் தூள், தனியா தூள்,கரம் மசாலா தூள் மூன்றையும் சேர்த்து வதக்கவேண்டும்.
கலவைகெட்டியாக வந்ததும் வடித்த சாதத்தை போட்டு சிறிது கிளறி  அடுப்பை அணைத்து விட்டு தயிர், கொத்தமல்லித்தழை,புதினா சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

தம் கட்டுதல்:
பிரியாணியை ஒரு அகண்டை பாத்திரத்தில் வைத்து ஒரு தட்டு போட்டு மூடவேண்டும்.
பாத்திரத்துக்கும் தட்டுக்கும் இடைவெளி இல்லாமல் ஈரத்துணியால் மூடி  துணியை முறுக்கிவிட்டு தட்டு மேல் ஏதாவது வெயிட்டான பொருளை வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான மொகல் வெஜ் பிரியாணி ரெடி.

Sunday, January 26, 2014

பிரிஞ்சி (எளிய முறை)



பச்சரிசி 1 கப்
தேங்காய் பால் 1 கப்
தண்ணீர் 1 கப்
சின்ன வெங்காயம் 10
பூண்டு 10
பச்சைமிளகாய் 4

பட்டை 1 துண்டு
பிரிஞ்சி இலை 1
லவங்கம் 5
கிராம்பு 5
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
----------
செய்முறை:


சின்ன வெங்காயம்,பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து பட்டை,பிரிஞ்சி இலை,லவங்கம்,கிராம்பு நான்கையும் வறுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு,குறுக்கே நறுக்கிய பச்சைமிளகாய்
எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவேண்டும்.வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் ஊறவைத்த அரிசியை வடிகட்டி குக்கரில் சேர்த்து நன்றாக பிரட்டவேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து தண்ணீர், தேங்காய் பால்,தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வைக்கவேண்டும். பிறகு
அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.
சுவையான பிரிஞ்சி ரெடி.

எதிர்பாராமல் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு இந்த திடீர் பிரிஞ்சி நமக்கு கை கொடுக்கும்.

Wednesday, November 6, 2013

சீரக சாதமும்...பட்டர் வெஜ் மசாலாவும்..


சீரக சாதம்:

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையானது

செய்முறை:


பாசுமதி அரிசியை மூன்று கப் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

வாணலியில் வெண்ணைய் வைத்து உருகினதும் சீரகத்தை பொரிக்கவேண்டும்.

பொரித்த சீரகத்தை ஊறவைத்த பாசுமதி அரிசியுடன் உப்புடன் கலந்து அப்படியே

ele.cooker ல் வைக்கலாம்.
----------
பட்டர் வெஜ் மசாலா:

தேவையானவை:

வெண்ணைய் 1டேபிள்ஸ்பூன்

வெங்காயம் 1

உருளைக்கிழங்கு 1

கார்ன் 1/2 கப்

காரட் 1

பீன்ஸ் 10

குடமிளகாய் 1

தக்காளி 2

-------

இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

சீரகத்தூள் 1 டீஸ்பூன்

தனியாதூள் 1 டீஸ்பூன்

காரப்பொடி 1/2 டீஸ்பூன்

மசாலாதூள் 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு

--------

தாளிக்க:

பட்டை சிறு துண்டு

லவங்கம் 2

கசகசா 1 டீஸ்பூன்

சோம்பு 1 டீஸ்பூன்

-----

செய்முறை:


வெங்காயம்,உருளைக்கிழங்கு,காரட்,பீன்ஸ்,குடமிளகாய்,தக்காளி எல்லாவற்றையும் பொடியாக நறுக்க்கிகொள்ளவும்.

கடாயில் வெண்ணைய் வைத்து உருகினதும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது

இரண்டையும் நன்றாக வதக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கியுள்ள காய்கறிகள்,கார்ன்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவேண்டும்

காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன் உப்பு சேர்க்கவேண்டும்.

அதனுடன் சீரகத்தூள்,தனியா தூள்,காரப்பொடி,மசாலாதூள்,சிறிது தண்ணீருடன் சேர்த்து வதக்கவேண்டும்.

(தண்ணீர் அதிகம் விடவேண்டாம்)

எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் இறக்கியபின் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டும்.

கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

Monday, July 15, 2013

நெல்லிக்காய் (Gooseberry ) சாதம்



தேவையானவை:
நெல்லிக்காய் 5
உதிரியாக வடித்த சாதம் 1 கப்
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணய் 1 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:


நெல்லிக்காயை வேகவைத்து (குக்கரில் சிறிது தண்ணீருடன் 2 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும்) ஆறினவுடன் உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்துவிட்டு மிக்சியில் ஒரு சுற்று சுற்று சுற்றவும்.(முடிந்தால் துருவிக்கொள்ளலாம்)
உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் உதிரியாக வடித்த சாதத்தை மஞ்சள் தூள்,நல்லெண்ணய் சேர்த்து பிசிறவும்.
ஐந்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
அதில் துருவிய நெல்லிக்காய்,உளுத்தம்பருப்பு பொடி தேவையான உப்பு சேர்த்து பிசிறவும்.
கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்க சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி.
நெல்லிக்காயில் வைட்டமின்' C ' அதிகம் உள்ளது.

Tuesday, January 22, 2013

சன்னா (கொண்டக்கடலை) பிரியாணி



தேவையானவை:
சன்னா 1 கப்
பாசுமதி அரிசி 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
புதினா இலைகள் 10
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
அரைக்க:
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பற்கள்
துருவிய தேங்காய் 1/4 கப்
கரம் மசாலா 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை 1/4 கப் (ஆய்ந்தது)
------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2
சீரகம் 1 தேக்கரண்டி
-------
செய்முறை:

கொண்டக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைத்து எடுக்கவேண்டும்.
பாசுமதி அரிசியை ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் வைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
தக்காளி வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை விழுதாக அரைக்கவேண்டும்.
---------
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
பின்னர் தக்காளி,புதினா இலைகள் சேர்த்து வதக்கவேண்டும்,
வேகவைத்த கொண்டக்கடலை,அரைத்த விழுது தேவையான உப்பு சேர்த்து வதக்கி ஊறவைத்த அரிசியை வடிகட்டி (தண்ணீரை எடுத்துவைக்கவேண்டும்.) இதனுடன் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.
எல்லாவற்றையும் ele.cooker ல் ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து வைக்கவேண்டும்.
சுவையான சன்னா பிரியாணி ரெடி.

Monday, January 14, 2013

கலந்த சாதங்கள் (சித்ரான்னம்)



 புளியோதரை


தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 4 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10
வேர்க்கடலை 10
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 டீஸ்பூன்
---------
புளிக்காய்ச்சல் செய்ய தேவையானது:

புளி 2 எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் 6
வெந்தயம் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:


வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எண்ணைய் விட்டு மிளகாய்வற்றலை வறுத்து இரண்டையும் சிறிது உப்போடு நன்கு பொடி பண்ணிக்கொள்ளவும்.

புளியை இரண்டு கப் தண்ணீரில் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,மீதமுள்ள 2 மிளகாய்,பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொண்டு தயாராக உள்ள புளித்தண்ணியை சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.வெந்தயப் பொடியில் பாதியை இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
20 நிமிடங்கள் நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவேண்டும். இப்பொழுது புளிக்காய்ச்சல் ரெடி.

பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து உதிரியாக குக்கரில் 3 விசில் வரும் வரை வைக்கவும்.(ele,cooker லும் வைக்கலாம்)
சாதம் ஆறினவுடன் ஒரு தட்டில் பரவலாக போட்டு மஞ்சள் தூள் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து பிசறவேண்டும்.15 நிமிடம் ஊறவேண்டும்.
பின்னர் செய்து வைத்திருக்கும் புளிக்காய்ச்சலை சேர்க்கவும் மீதமுள்ள பொடியை சேர்க்கவும்..முந்திரிபருப்பு,வேர்க்கடலை,கறிவேப்பிலை மூன்றையும் சிறிது நெய்யில் வறுத்து நன்றாக கலந்து வைக்கவும்.
--------------------------------------

எலுமிச்சம்பழ சாதம்.

தேவையானவை
பாசுமதி அரிசி 2 கப்
எலுமிச்சம்பழம் 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

பொடிபண்ண:
வெந்தயம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 3
உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)
முந்திரிபருப்பு 5
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து'

செய்முறை:

1.பாசுமதி அரிசியை 40 நிமிடம் (ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர்)ஊறவைக்கவும்.
அப்படியே Electric cooker ல் வைத்தால் உதிரியாக வரும்.

2.சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள்,நல்லெண்ணைய் கலந்து ஆறவைக்கவும்.

3.வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.
சிறிது எண்ணைய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும்.
உப்பு வறுக்கவேண்டாம்.
மூன்றையும் பொடி பண்ணி சாதத்தில் தூவவேண்டும்.
4.கடைசியாக தாளிக்கவேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து
எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.

(சாதாரண பச்சைஅரிசியிலும் செய்யலாம்.பாசுமதி சற்று சுவையைக் கூட்டும்)
----------------------------------------


தேங்காய் சாதம்

தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
மிளகாய் வற்றல் 2 எண்ணெயில் கடுகு
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையானது
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை

பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து உதிரியாக வடித்துக்கொள்ளவும்.
தேங்காய் எண்ணெயில் தேங்காயை வறுத்துக்கொள்ளவும்.
சிறிது தேங்காய் எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,கிள்ளிய மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட தட்டில் சாதத்தை பரவலாக போட்டு அதனுடன் வறுத்த தேங்காய் துருவல்,தாளித்த கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தேவையான் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.
-------
கலந்த சாதங்களை அப்பளம்,வடகம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
தவிர்த்து சிறிது மோர்க்குழம்புடனும் சாப்பிடலாம்
காணும் பொங்கல்,ஆடிப்பெருக்கு,சித்ரா பௌர்ணமி ஆகிய நாட்களில் 'சித்ரான்னம்' என்ற பெயரில் கலந்த சாதங்களை செய்வது வழக்கம்.
=====================
எள்ளு சாதமும் செய்யலாம்.
எள்ளுப் பொடிக்கு இந்த லிங்க் ஐ பார்க்கவும்.
http://annaimira.blogspot.com/2012/07/blog-post_31.html

Friday, December 21, 2012

மெக்சிகன் ரைஸ்



தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
--------
குடமிளகாய் 3
(பச்சை,மஞ்சள் சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று)
Spring onion 1 கட்டு
வெங்காயம் 2
Jalapeno slices 5
--------
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
தக்காளி பேஸ்டு 1/2 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
------
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:

பாசுமதி அரிசியை (ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர்) 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
குடமிளகாய்,வெங்காயம் இரண்டையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
spring onion ஐ பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
Jalapeno slices ஐ அப்படியே போடலாம்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்துள்ள குடமிளகாய்,spring onio,jalapeno slices மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
தேவையான  உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது,சீரகம்,தக்காளி பேஸ்டு,காரப்பொடி எல்லாம் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சிறிது வதங்கியதும் வெண்ணெய் சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியுடன் கலந்து அப்படியே Ele.cooker ல்
வைக்கலாம்.

Tuesday, December 11, 2012

இஞ்சி பாத்




தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 3
கொத்தமல்லி 1 கப் (ஆய்ந்தது)
புளி ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
நிலக்கடலை 10
நெய் 1 தேக்கரண்டி
-----
தாளிக்க:
கடுக் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
------
செய்முறை:
பாசுமதி அரிசியை இரண்டு கப் தண்ணீரில் இருபது நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் அப்படியே ele cooker ல் வைத்தால் உதிரியாக வரும்.
====
இஞ்சியை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
இதனுடன் பச்சைமிளகாய்,புளி,கொத்தமல்லி மூன்றையும் நல்லெண்ணையில் வதக்கவேண்டும்.
வதக்கியதை உப்புடன் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்த விழுதை சாதத்துடன் கலக்கவேண்டும்.
கடைசியில் நிலக்கடலையை நெய்யில் வறுத்து போடவேண்டும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...