Showing posts with label ஸ்வீட். Show all posts
Showing posts with label ஸ்வீட். Show all posts

Saturday, October 14, 2017

முந்திரிக் கொத்து



தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
துருவிய தேங்காய் 1 கப்
ஏலக்காய் 5
பொடித்த வெல்லம் 1 கப்
                                                          வெல்லப்பாகில் உருட்டியது

-----
அரிசி மாவு 2 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
எண்ணெய் பொரிக்க தேவையானது
-----
செய்முறை:                               முந்திரிக் கொத்து


பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவேண்டும்.
ஏலக்காயை தோலுடன் வறுத்து தோலை எடுக்கவேண்டும்.
தேங்காய் துருவலையும் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
மூன்றையும் மிக்சியில் பொடி செய்துகொள்ளவேண்டும்.
-------
வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து வெல்லம் நன்றாகக் கரைந்து சிறிது கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி உடனே சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.
------
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசிமாவு,மஞ்சள்தூள்,உப்பு (ஒரு சிட்டிகை) சேர்த்து தண்ணீர் விட்டு பிசைய வேண்டும் கரைத்த மாவு .பஜ்ஜி மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
-----
வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

Wednesday, October 11, 2017

பாதாம் வால்நட் பர்ஃபி


தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப்
வால்நட்       1/2 கப்
சர்க்கரை 1 1/4 கப்
பால் 1/4 கப்
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா 1 சிட்டிகை
------
செய்முறை:

பாதாம் பருப்பையும் வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த விழுது,சர்க்கரை,வெண்ணெய்,ஏலத்தூள்,ஆப்பசோடா எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அப்படியே அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.

15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.

பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.

Sunday, September 17, 2017

தினை புட்டு



தேவையானவை:

தினை ரவை 1 கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
நெய் 1/4கப்
துவரம்பருப்பு 2 டீஸ்பூன்
தண்ணீர் 3/4 கப்
தேங்காய் துருவல்  2 டீஸ்பூன்
ஏலக்காய் 2
முந்திரிபருப்பு 5
உப்பு ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒருவாணலியை எடுத்துக்கொண்டு  தினை ரவையை எண்ணைய் விடாமல் சிவக்க வறுத்துக்கொள்ளவும்,வறுத்ததை மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
துவரம்பருப்பை சிறிது நீரில் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

முக்கால் கப் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பை கரைத்து அந்த தண்ணீரை ரவையில் விட்டு பிசிறிக்கொள்ளவும்.அதன் மீது ஊறவைத்த
துவரம்பருப்பையும் போட்டு குக்கரில் இட்லி தட்டில் பரப்பி 15 நிமிடம் வேகவைக்கவும்.(நடுவில் திறந்து பார்த்து வேகவில்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து வைக்கவும்)
நன்கு வெந்தவுடன் ஒரு பெரிய தட்டில் கொட்டி உதிர்த்துக்கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணரில் கரைய விட்டு மண்ணில்லாமல் வடிகட்டவேண்டும்.
பிறகு வெல்லத்துடன் ஏலக்காய்,தேங்காய் துருவல் சேர்த்து நல்லகெட்டி பாகாய் (ஒரு தட்டில் ஒரு சொட்டு விட்டால் முத்தாக வரும்)வந்தவுடன் வெந்த ரவையைக்கொட்டி
நன்றாக கிளறி வறுத்த முந்திரி,நெய் இவற்றை விட்டு இறக்கவும்.அடுப்பிலிருந்து இறக்கினவுடன் சற்று இளகினாற்போலத்தான் இருக்கும்.அரைமணி கழித்து பாகு உள்ளே
இழுத்துக்கொண்டு நன்றாக உதிரியாக வந்துவிடும்.

நவராத்திரிக்கு சுண்டலுக்கு பதில் புட்டு ஒருநாள் செய்யும் வழக்கம் உண்டு

Saturday, November 7, 2015

முந்திரி கேக்





தேவையானவை:

முந்திரிப் பருப்பு -  2 கப்
சர்க்கரை -  2 கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

நெய் - 50 கிராம்

செய்முறை:


முந்திரிப் பருப்பை வாணலியில் நெய் விட்டு, நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியதும் மிக்ஸியில் சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
 அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
பதம் சரியாக வந்தவுடன் அரைத்த முந்திரியை சிறிது சிறிதாக கொட்டி கிளற வேண்டும்.  சிறிது  நெய் சேர்த்து கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.·   கெட்டியாக இருக்கும் பொழுது எடுத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி  ஆறியதும் வில்லைகளாக  போடவும்.

Monday, June 8, 2015

பேரீச்சை,பாதாம் இனிப்பு லட்டு



தேவையானவை:

பேரீச்சம்பழம் 10
பாதாம் பருப்பு 10
வால்நட்     10
முந்திரிப்பருப்பு 5
பொட்டுக்கடலை 1/4 கப்
ஏலக்காய்த்தூள் 1 தேக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
-------

செய்முறை:


பாதாம் பருப்பை நெய்யில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
பேரீச்சம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

பாதாம்பருப்பு,பேரீச்சம்பழத்துண்டுகள்,ஏலக்காய்த்தூள் மூன்றையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும்.
பொட்டுக்கடலை,முந்ததிரிப்பருப்பு இரண்டையும் நெய்யில் வறுத்து வால்நட்டுடன் சேர்த்து பொடிபண்ண வேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாதாம் பேரீச்சம்பழக் கலவை,பொட்டுக்கடலை,முந்திரிப் பொடி இரண்டையும் கலந்து நன்றாக பிசைய வேண்டும்'
தண்ணீர் விட வேண்டாம். பின்னர் உருண்டைகளாக உருட்டவேண்டும்.

இந்த இனிப்பு உருண்டை இரும்புசத்து மிகுந்ததாக இருப்பதால் ரத்த சோகைக்கு நல்லது.
குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Sunday, May 3, 2015

ஓட்ஸ் பாயசம்

ஓட்ஸ் பாயசம்

தேவையானவை:

ஓட்ஸ்  1 கப்
பால் 2 கப்
பொடித்த வெல்லம்  1/2 கப்
நெய் 1 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு 10
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
திராட்சை  10
-------------------------

செய்முறை:




ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து ஓட்ஸை பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்த ஓட்ஸை microwave bowl ல் அரை கப் தண்ணீர் சேர்த்து "H" ல் இரண்டு நிமிடம் வைத்தால் ஓட்ஸ் நன்றாக குழைந்துவிடும்.

இரண்டு கப் பாலை குக்கருக்குள் வைக்கும் ஒரு பாத்திரத்தில் வைத்து வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் கழித்து அணைக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து நன்றாக கரைந்தவுடன் சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும்.

குக்கரில் இருந்து எடுத்த பால் ஆறினவுடன் அதனுடன் வேகவைத்த ஓட்ஸ்,வடிகட்டிய வெல்லம்,ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
முந்திரி,திராட்சை இரண்டையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
  சுவையான ஓட்ஸ் பாயசம் ரெடி.

Sunday, October 19, 2014

பாதாம் வால்நட் பர்ஃபி


தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப்
வால்நட்       1/2 கப்
சர்க்கரை 1 1/4 கப்
பால் 1/4 கப்
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா 1 சிட்டிகை
------
செய்முறை:

பாதாம் பருப்பையும் வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த விழுது,சர்க்கரை,வெண்ணெய்,ஏலத்தூள்,ஆப்பசோடா எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அப்படியே அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.

15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.

பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.
-------------------------------------------------------------------------------------------------------

அனைவருக்கும் இனிய நல் தீபாவளி வாழ்த்துகள்

Saturday, October 18, 2014

சுகியன்



தேவையானவை:
கடலை பருப்பு- 2 கப்;
பொடித்த வெல்லம்- 2 கப்
தேங்காய் துருவல் 1 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
பச்சரிசி  1/2 கப்.
 உப்பு  1/4 tsp

எண்ணெய் தேவையானது

செய்முறை:


கடலைப் பருப்பை வேகவைத்து , மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
அரைத்து வைத்த விழுதை  அடுப்பில் வாணலியை  வைத்து வதக்கவும்.
தேங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி பாகு  பதம் வந்ததும்எடுத்து, அந்தப் பாகை வதக்கிய  கடலைப் பருப்பு,தேங்காய் மாவில் கொட்டி கலக்கி உருண்டைகளாக  உருட்டி வைத்துக்கொள்ளவும்.

 அரிசியையும் உளுத்தம்பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவேண்டும்.
தனித்தனியாக அரைத்து சிறிது  உப்புசேர்த்து கலக்கவேண்டும்.கலந்த மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.

அடுப்பில் எண்ணெயை காய வைத்து அதில் உருண்டைகளை ஒவ்வொன்றாக தோய்த்து எடுத்து பொரிக்கவும்.


இந்த இனிப்பை நவராத்திரி பண்டிகையின் போது விஜயதசமி அன்று செய்து ஹயக்கிரீவருக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம்.    சுகியன்

Friday, September 26, 2014

எள் பர்ஃபி



தேவையானவை:

எள் 1 கப்
வேர்க்கடலை 1 கப்
பொடித்த வெல்லம் 2 கப்
ஏலத்தூள் சிறிதளவு
------
செய்முறை:


எள்ளை நீர் விட்டு நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வெறும் வாணலியில் போட்டு வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.
வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுக்கவேண்டும்.
வறுத்த எள் ஒரு கப், வறுத்த வேர்க்கடலை ஒரு கப் இரண்டையும் 'நற நற' என்று பொடி பண்ண வேண்டும்.

வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து (ஒரு கப் பொடி பண்ணிய கலவைக்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) பொடித்த வெல்லம் ஏலத்தூள் சேர்த்து
கம்பிப்பாகு வந்ததும் பொடி பண்ணியதைப் போட்டு நன்கு கிளறி ஒரு தட்டில் நெய்யை பரவலாகத் தடவி கிளறியதைக் கொட்டி வில்லைகளாக போடலாம்.

Saturday, February 22, 2014

பாதாம், பொட்டுக்கடலை லட்டு



தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப்
வால்நட்  1/2 கப்
பொட்டுக்கடலை 1 கப்
பொடித்தவெல்லம் 1 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
நெய் 1/4 கப்
-------

செய்முறை:


பாதாம் பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி Microwave "H'  ல் ஒரு நிமிடம் வைத்து எடுக்க தோலை எளிதில் எடுத்து விடலாம்.
பின் உரித்த பாதாம் பருப்பை மீண்டும் Microwave "H' ல் 5 நிமிடம் வைக்கவேண்டும். (இரண்டு நிமிடம் வைத்து எடுத்து ஒரு கிளறு கிளறி மீண்டும் 2 நிமிடம் பின்னர் கடைசியில் ஒர் நிமிடம் வைத்து
எடுக்க வேண்டும்.)வறுத்தது போல் ஆகிவிடும். வறுத்த பாதாம் பருப்பை மிக்சியில் பொடித்துக் கொள்ளவேண்டும்.
வால்நட்,பொட்டுக்கடலை இரண்டையும் தனித்தனியே வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய பாதம்,வால்நட்,பொட்டுக்கடலை,பொடித்த வெல்லம் ஏலத்தூள், சேர்த்து நன்றாக கிளறி நெய்யை உருக்கி ஊற்றி லட்டுகளாக பிடிக்கவேண்டும்.

Monday, December 2, 2013

முந்திரிக் கொத்து



தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
துருவிய தேங்காய் 1 கப்
ஏலக்காய் 5
பொடித்த வெல்லம் 1 கப்
                                                          வெல்லப்பாகில் உருட்டியது

-----
அரிசி மாவு 2 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
எண்ணெய் பொரிக்க தேவையானது
-----
செய்முறை:                               முந்திரிக் கொத்து


பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவேண்டும்.
ஏலக்காயை தோலுடன் வறுத்து தோலை எடுக்கவேண்டும்.
தேங்காய் துருவலையும் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
மூன்றையும் மிக்சியில் பொடி செய்துகொள்ளவேண்டும்.
-------
வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து வெல்லம் நன்றாகக் கரைந்து சிறிது கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி உடனே சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.
------
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசிமாவு,மஞ்சள்தூள்,உப்பு (ஒரு சிட்டிகை) சேர்த்து தண்ணீர் விட்டு பிசைய வேண்டும் கரைத்த மாவு .பஜ்ஜி மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
-----
வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

Monday, November 11, 2013

FLAX SEED உருண்டை



தேவையானவை:                               Flax Seed

Flax seed 1 கப்
பொட்டுக்கடலை 1 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
நெய் 1/4 கப்
-------


செய்முறை:

Flax seed ஐ வெறும் வாணலியில் வறுத்து (வறுக்கும் போது எள் மாதிரி வெடிக்கும்) பொடி செய்துகொள்ளவேண்டும்.
பொட்டுக்கடலையையும் எண்ணெயில்லாமல் வறுத்து பொடி செய்துகொள்ளவேண்டும்.
பொடி செய்த Flax seed,பொட்டுக்கடலை,பொடித்த வெல்லம்,ஏலக்காய் தூள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும். நெய்யை உருக்கி பொடித்த மாவுடன் கலந்து உருண்டைகளாக பிடிக்கலாம்.

நெய் சேர்க்காமல் தண்ணீர் தெளித்தும் உருண்டைகளாக பிடிக்கலாம்.
Flax seed சாப்பிட்டால் கொலாஸ்ட்ரல் அளவு குறையும்.

Thursday, October 24, 2013

பொட்டுக்கடலைமாவு லட்டு



தேவையானவை:
பொட்டுக்கடலை 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
பொடித்த வெல்லம் 3/4 கப்
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி
-------
செய்முறை:


பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
தேங்காய் துருவலையும் வெறும்  வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.
அதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொட்டுக்கடலை மாவு,தேங்காய் துருவல்,பொடித்த வெல்லம்,ஏலத்தூள் சேர்த்து வேண்டிய நெய் ஊற்றி சிறிது தண்ணீர் அல்லது பால் தெளித்து உருண்டைகளாக உருட்டவும்.

பொட்டுக்கடலையில் புரோட்டின் சத்து உள்ளது.

Friday, September 13, 2013

அடை பிரதமன் (ஓணம் ஸ்பெஷல் )



தேவையானவை:
பச்சரிசி 1/2 கப்
பால்  3 கப்
சர்க்கரை 3/4 கப்
வாழை இலை 2 ஏடு
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 10
திராட்சை 5
நெய் 1 மேசைக்கரண்டி
--------
செய்முறை: (அடை செய்யும் முறை)
அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைத்து அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் எடுக்கவேண்டும்.அரைத்த மாவை வாழை இலை ஏடுகளில் தோசை போல வார்த்து இலையோடு சுருட்டி இட்லி தட்டில் பத்து நிமிடம் வேகவைக்கவேண்டும்.ஆறின பிறகு குளிர்ந்த நீரில் அடைகளை போட்டு எடுத்து வேண்டிய வடிவில் கட் பண்ணிக்கொள்ளலாம். இப்பொழுது ' அடை' ரெடி.
கடைகளில் தயார் நிலையில் 'அடை'யே கிடைக்கும்.

பாலை அடுப்பில் வைத்து நன்றாக சுண்டும் வரை காய்ச்சவேண்டும் (சற்றே பாலின் நிறம் மாறவேண்டும்). சுண்டிய பாலில் வெட்டிவைத்துள்ள அடைகளைப்போட்டு சர்க்கரை சேர்த்து கிளறவேண்டும்.ஏலப்பொடி சேர்க்கவேண்டும். நெய்யில் முந்திரி,திராட்சை வறுத்து சேர்க்கவேண்டும்.
-------
 பாலுக்கு பதில்  தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம். தேங்காய்ப்பால் என்றால்  வெல்லம் சேர்க்கவேண்டும்.
படம் வெல்லத்தால் செய்த அடை பிரதமன்


Thursday, August 15, 2013

பாதாம்..வால்நட் பர்ஃபி


தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப்
வால்நட்       1/2 கப்
சர்க்கரை 1 1/4 கப்
பால் 1/4 கப்
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா 1 சிட்டிகை
------
செய்முறை:

பாதாம் பருப்பையும் வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த விழுது,சர்க்கரை,வெண்ணெய்,ஏலத்தூள்,ஆப்பசோடா எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அப்படியே அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.

15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.

பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.

Wednesday, May 22, 2013

நிலக்கடலை லட்டு




தேவையானவை:
வறுத்த நிலக்கடலை 1 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி
-------

வறுத்த வேர்க்கடலையை மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.
இதனுடன் பொடித்த வெல்லம்,ஏலக்காய் தூள் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
நெய்யை உருக்கிக்கொள்ளவும்.
கலந்த லட்டு மாவை ஒரு தட்டில் கொட்டி கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

ஊட்ட சத்து அதிகமுள்ள இந்த நிலக்கடலை லட்டை குழந்தைகள் பள்ளியிலிருந்து மாலை திரும்பியதும் டிபனாகக் கொடுக்கலாம்.
புரோட்டீன்,இரும்பு சத்து நிறைந்த உணவாகும்.

Sunday, March 31, 2013

பயத்தம் உருண்டை




தேவையானவை:
பயத்தம்பருப்பு 2 கப்
பொடித்த சர்க்கரை 2 கப்
முந்திரிபருப்பு 20
நெய் 1 கப்
ஏலப்பொடி 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:

பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிவக்க வறுத்து மாவாக அரைக்கவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த பயத்தமாவு,பொடித்த சர்க்கரை,முந்திரிபருப்பு (உடைத்து நெய்யில் வறுத்தது)ஏலப்பொடி,உருக்கிய நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவேண்டும்.

Wednesday, October 24, 2012

செவியன் (SEVIYAN)





சேமியா வைக்கொண்டு செய்யப்படுவது செவியன்.

இஸ்லாமிய சகோதரர்கள்[ சகோதரிகளால் "ஈத் " பண்டிகைக்கு செய்யப்படும் முக்கியமான் இனிப்புகளில் ஒன்று.

இந்த இனிப்பின் தனித்துவம் என்னவென்றால்,இந்துக்களாலும் "சேமியா பாயசம் " என்ற பெயரில் விசேஷங்களுக்கு செய்யப்படுகிறது.

தவிர்த்து,இது நமது அன்றாட சமையலில் ஒரு DESSERT ஆகவும் செயல்படுகிறது.

 

தேவையானவை:

சேமியா 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
பால் 3 கப்
முந்திரிபருப்பு 5
உலர்ந்த திராட்சை 5
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்

செய்முறை:


சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
முந்திரிபருப்பையும்,திராட்சையையும் பொன்னிறமாக நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி சேமியாவை சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.சர்க்கரை கரைந்ததும் பாலை ஊற்றி சிறிது கொதிக்கவிடவும்.
அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பால்,சர்க்கரை,சேமியா மூன்றும் ஒன்றாக சேர்ந்து வரும்போது ஏலக்காய் தூள் சேர்த்து
அடுப்பை அணைக்கவும்.
கடைசியில் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கவும்.

இந்தப் பதிவை பதிவுலக சிநேகிதி Asiya Omar அவர்களின் "My First Event-Feast of Sacrifice" க்கு அனுப்புகிறேன்.



Tuesday, August 28, 2012

பால் பாயசம் (எளிய முறை)



தேவையானவை:

பால் 5 கப்
சர்க்கரை 1 கப்
அரிசி 2 தேக்கரண்டி
ஏலக்காய் பவுடர் 1 தேக்கரண்டி
ஜாதிக்காய் பவுடர் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 5
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:

குக்கருக்குள் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும் அரிசியையும் சேர்த்து வைக்கவும்.

' weight ' போடவும். சிறிது நேரத்தில் ' weight ' போடும் இடத்திலிருந்து சிறிது சிறிதாக தண்ணீர் வர ஆரம்பித்ததும் அடுப்பை ஸ்லிம்மில் வைத்துவிட்டு
சரியாக 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பத்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து சர்க்கரை சேர்க்கவும். (மீண்டும் கொதிக்க வைக்கவேண்டாம்)

ஏலக்காய்,ஜாதிக்காய் பவுடர் தூவி நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து போட சுவையான பால் பாயசம் ரெடி.

Thursday, June 7, 2012

பிரதமன்



தேவையானவை:
ஜவ்வரிசி 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
தேங்காய் பால் 1 1/2 கப்
ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி
முந்திரி 5
பாதாம் பருப்பு 5
வறுத்த வேர்கடலை 5
வறுத்த தேங்காய் துண்டுகள் 10
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடலைப்பருப்பை சிறிது தண்ணீருடன் சேர்த்து நன்கு வேகவைத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஜவ்வரிசியை சிறிது தண்ணீருடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
ஜவ்வரிசி நன்கு வெந்ததும் வேகவைத்த கடலைப்பருப்பை இதனுடன் சேர்க்கவேண்டும்.
பின்னர் தேங்காய் பாலை சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

மற்றொரு அடுப்பில் ஒரு கடாயில் அரை கப் தண்ணீரில் பொடித்த வெல்லத்தை சேர்த்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி
ஜவ்வரிசி கடலைப் பருப்பு கலவையில் கலந்து கொதிக்கவைக்கவும்.
தேங்காய் துண்டுகளை முதலில் நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.
பின்னர் முந்திரி பாதாம்,வேர்க்கடலை மூன்றையும் ஒன்றிரண்டாக உடைத்து நெய்யில் வறுத்து ஏலக்காய் தூளையும் சேர்க்க
சுவையான "பிரதமன் " ரெடி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...