Showing posts with label மாலை டிபன். Show all posts
Showing posts with label மாலை டிபன். Show all posts

Thursday, September 21, 2017

கருப்பு உளுந்து சுண்டல்



தேவையானவை:
கருப்பு உளுந்து  2 கப்
தேங்காய் துருவல்  1/2 கப்
இஞ்சி              1 துண்டு
பச்சைமிளகாய்      3
சீரகம்              1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு          1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
------
செய்முறை:
 கருப்பு உளுந்தை இரவே ஊறவைத்து மறு நாள் குக்கரில்  தேவையான உப்புடன் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம் நான்கினையும் தண்ணீர் விடாமல் பொடி போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கருப்பு உளுந்தை வடிகட்டி
சேர்க்கவேண்டும்.அதனுடன் அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
நவராத்திரிக்கு ஒரு நாள் இந்த சுண்டலை செய்யலாம்,

Sunday, January 22, 2017

பாதாம் வரகு லட்டு

தேவையானவை:

பாதாம் பருப்பு 15
முந்திரிபருப்பு 15
வரகரிசி   1/2 கப்
பொட்டுக்கடலை 1/2 கப்
கருப்பட்டி பொடித்தது  1/2 கப்
நெய்  1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி

----------
செய்முறை:

பாதாம் பருப்பை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து வைக்கவும்.
முந்திரிபருப்பு,பாதாம் இரண்டையும் நைசாக அரைக்கவும்.
வரகரிசியை வறுத்து பொடி பண்ணவும்.
பொடித்த பாதாம்,முந்திரி,வரகரிசி இதனுடன் பொடித்த கருப்பட்டியை சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும். ஏலத்தூள் சேர்க்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள மாவு,உருக்கின நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

பாதாம் வரகு லட்டு சிறுவர் சிறுவர்களுக்கு ஒரு மாலை நேர சிற்றுண்டியாகும்.

Monday, September 28, 2015

மாலை நேர மினி போண்டா



தேவையானவை:
 மைதா 1 கப்
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
தயிர் 1/2 கப்
-----
மிளகு 1 மேசைக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
தேங்காய் சிறிய துண்டுகளாக 10
பெருங்காயத் தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:





ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மைதா மாவு,அரிசிமாவு, தயிர். மிளகு,பொடியாக நறுக்கிய இஞ்சி,தேங்காய் துண்டுகள்,பெருங்கயத்தூள்,கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

வாணலியில் தேவையான எண்ணெய் வைத்து பிசைந்த மாவை உருண்டைகளாக போட்டு எடுக்கவும்.
இந்த போண்டாவை தக்காளி சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்

Wednesday, July 15, 2015

புளி அவல்



தேவையானவை:
கெட்டி அவல் 1 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
வேர்க்கடலை 10
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:

அவலை நன்றாக தண்ணீரில் அலச வேண்டும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து லேசாக சூடு பண்ணவேண்டும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அவல்,புளித்தண்ணீர்,மஞ்சள்தூள்,தேவையான உப்பு சேர்த்து பிசறி மூடி வைக்கவேண்டும்.
பத்து நிமிடம் அப்படியே ஊறவைக்கவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஊறவைத்த அவலை சேர்த்து
சிறிது நேரம் அடுப்பை slim ல் வைத்து கிளற சுவையான புளி அவல் ரெடி.

Monday, December 22, 2014

தினை ரவா தோசை



தேவையானவை:
 தினை ரவா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தயிர் - ஒரு கப்
தண்ணீர்  2 கப்
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - 10 பருப்பு
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 2
----------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
-----------------

செய்முறை:

தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.வறுத்த அரிசியை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

 ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய தினை ரவா,அரிசி மாவு,தயிர்,தண்ணீர் தேவையான உப்புசேர்த்து  ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன்,மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.

Monday, November 24, 2014

சாமைப் புளிப்பொங்கல்

தேவையானவை:
சாமை ரவை 1 கப்
புளி எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் 4
நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
-------

தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
வேர்க்கடலை 5
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து

--------
செய்முறை:


புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
சாமை ரவையை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சாமை ரவையுடன் புளித்தண்ணீர் ஒரு கப் தண்ணீர் 1 1/2 கப் சேர்த்து கலந்து வைக்கவும்.( சாமை ரவை 1 கப்,புளித்தண்ணீரும்,தண்ணீரும் சேர்ந்து 2 1/2 கப்)


ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சாமை ரவையும் புளித்தண்ணீரும் கலந்த கலவை,
தாளித்த பொருட்கள் எல்லாவற்றையும் தேவையான உப்புடன் கலந்து அப்படியே குக்கரில் வைத்து 3 விசில் முடிந்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்தேங்காய்
வேண்டுமென்றால் அரை கப் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்..
சுவையான சாமைப் புளிப்பொங்கல் ரெடி.

Monday, September 29, 2014

கறுப்பு உளுந்து சுண்டல்




தேவையானவை:
கறுப்பு உளுந்து  2 கப்
தேங்காய் துருவல்  1/2 கப்
இஞ்சி              1 துண்டு
பச்சைமிளகாய்      3
சீரகம்              1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு          1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
------
செய்முறை:
 கறுப்பு உளுந்தை இரவே ஊறவைத்து மறு நாள் குக்கரில்  தேவையான உப்புடன் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம் நான்கினையும் தண்ணீர் விடாமல் பொடி போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கறுப்பு உளுந்தை வடிகட்டி
சேர்க்கவேண்டும்.அதனுடன் அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

Thursday, September 25, 2014

.ராகி புட்டு.



தேவையான பொருட்கள்:

கேழ்வரகு(ராகி) மாவு -  1 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
தூள் வெல்லம் 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு  சிறிதளவு

செய் முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது ராகி மாவை  பரப்பிவிட்டு இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடத்தில் எடுக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து மாவை நன்றாக உதிர்க்கவும்.பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சிறிது உப்பு சேர்த்து பிசிறவும்.
பிசிறிய மாவை மீண்டும்வெள்ளை துணியில் பரப்பி இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் கழித்து எடுக்கவும்,

குக்கரில் இருந்து எடுத்து தேங்காய் துருவல்,தூள் வெல்லம்,நெய்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசிறவும்.

காராமணி இனிப்பு சுண்டல்



தேவையானவை:
காராமணி 1 கப்
பொடித்த வெல்லம் 1/2 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
ஏலக்காய் தூள்  சிறிதளவு
உப்பு ஒரு சிட்டிகை
------
செய்முறை:


காராமணியை லேசாக வறுத்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் ஒரு சிட்டிகை உப்புடன் வைத்து (மூன்று விசில்) எடுக்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீருடன் அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டிய காராமணி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக கிளறியவுடன்  தேங்காய் துருவல் சேர்க்கவும்.

Wednesday, September 24, 2014

பட்டாணி சுண்டல்


தேவையானவை:

பச்சப்பட்டாணி 2 கப்
பச்சமிளகாய் 4
துருவிய தேங்காய் 1/2 கப்
மாங்காய் 1
எண்ணைய்,உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 4
துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1.பச்சைப்பட்டாணியை 6 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும்
அடுப்பை அணைத்து வடிகட்டிவைக்கவும்.
2.பச்சைமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
3.மாங்காயை துருவிக்கொள்ளவும்.
------
4.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
வடிகட்டிய பட்டாணி,உப்பு,பச்சைமிளகாய்,துருவிய தேங்காய்,துருவிய மாங்காய்
ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.

Monday, September 22, 2014

மசால் வடை




தேவையானவை:

கடலைப்பருப்பு 1 கப்
சோம்பு 1 மேசைக்கரண்டி
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2
இஞ்சி 1 துண்டு
பூண்டு 2 பல்
பச்சைமிளகாய் 2
வெங்காயம் 1
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------------------------
செய்முறை:


கடலைப்பருப்பை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.ஊறிய பின் வடிகட்டவேண்டும்.ஒரு தேக்கரண்டி கடலப்பருப்பை தனியே எடுத்துவைக்கவேண்டும்.

சோம்பை தனியாக ஊறவைக்கவேண்டும்.
ஊறிய சோம்பு,பச்சைமிளகாய்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,இஞ்சி.பூண்டு எல்லாவற்றையும் முதலில் கரகரப்பாக அரைக்கவேண்டும்.
அதனுடன் வடிகட்டிய கடலைப்பருப்பு,தேவையான உப்பு சேர்த்து சற்றே கரகரப்பாக அரைக்கவேண்டும்.

அரைத்ததை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் தனியாக எடுத்து வைத்த தேக்கரண்டி கடலைப்பருப்பு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,பொடியாக அரிந்த கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.

கடாயில் எண்ணெய் வைத்து நன்கு காய்ந்ததும் கலந்த மாவை உள்ளங்கையில் வடை போல தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவேண்டும்.

Sunday, May 25, 2014

ஃபிரஞ்ச் ஃப்ரை


தேவையானவை:

உருளைக்கிழங்கு  4
மிளகுத்தூள் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------

செய்முறை:

உருளைக்கிழங்கை தோலுரித்து நீட்டவாக்கில் நறுக்கவும்.
நறுக்கிய உருளைத் துண்டுகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு freezer ல் வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து freeezer ல் இருந்து எடுத்து அடுப்பில் எண்ணெய் வைத்து மிதமான சூட்டில் பொரிக்கவும்.
பொரித்ததை .கிச்சன் டவலால் எல்லாவற்றையும் நன்கு துடைத்து விட்டு மீண்டும் பொரிக்கவும்.
இதனுடன் உப்பு,மிளகுத்தூள் சேர்க்கவும்.

Thursday, May 22, 2014

போண்டா



தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப்
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
-----
மிளகு 1 மேசைக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
தேங்காய் சிறிய துண்டுகளாக 10
பெருங்காயத் தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:


உளுத்தம்பருப்பை இரண்டுமணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த உளுந்த மாவு,அரிசிமாவு,மிளகு,பொடியாக நறுக்கிய இஞ்சி,தேங்காய் துண்டுகள்,பெருங்கயத்தூள்,கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

வாணலியில் தேவையான எண்ணெய் வைத்து பிசைந்த மாவை உருண்டைகளாக போட்டு எடுக்கவும்.
இந்த போண்டாவை தக்காளி சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்

Sunday, October 13, 2013

சுண்டல் சாலட்


தேவையானவை:

நிலக்கடலை 1 கப்
வெள்ளரிக்காய் 1
தக்காளி 2
மிளகுதூள் 1 தேக்கரண்டி
Chat மசலா 1/2 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு தேவையானது
------
செய்முறை:


நிலக்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைக்கவும்.(3 விசில்)
குக்கரில் இருந்து எடுத்து வடிகட்டி ஒரு அகண்ட பாத்திரத்தில் போடவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய்,தக்காளி,மிளகுதூள்,chat மசாலா,தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
கடைசியில் எலுமிச்சம்பழத்தை   பிழிந்து .கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.
' சுண்டல் சாலட்' ஐ மாலை வேளை டிபனுக்கும் செய்யலாம்.

Tuesday, July 30, 2013

மணி கொழுக்கட்டை



 


தேவையானவை:

அரிசி மாவு 1கப்
உப்பு தேவையானது
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
---
அரைக்க:

துவரம்பருப்பு 1/4 கப்
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
---
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து அரிசி மாவை பரவலாக தூவி கட்டிதட்டாமல் கிளறவும்.
கிளறிய மாவு ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியே எடுத்து வைக்கவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரை மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி கரகரப்பாக அரைக்கவும்.அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து ஆவியில் வைத்து எடுத்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.உதிரியாக வரும்.பின்னர் தயாராக உள்ள மணி கொழுக்கட்டைகளை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும்.

பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டி இது.

Wednesday, July 24, 2013

புளி அவல்



தேவையானவை:
கெட்டி அவல் 1 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
வேர்க்கடலை 10
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:

அவலை நன்றாக தண்ணீரில் அலச வேண்டும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து லேசாக சூடு பண்ணவேண்டும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அவல்,புளித்தண்ணீர்,மஞ்சள்தூள்,தேவையான உப்பு சேர்த்து பிசறி மூடி வைக்கவேண்டும்.
பத்து நிமிடம் அப்படியே ஊறவைக்கவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஊறவைத்த அவலை சேர்த்து
சிறிது நேரம் அடுப்பை slim ல் வைத்து கிளற சுவையான புளி அவல் ரெடி.

Monday, July 9, 2012

வெங்காய பகோடா



தேவையானவை:
கடலை மாவு 1 கப்
அரிசி மாவு 1/2 கப்
வெங்காயம் 2
மிளகாய் பொடி 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
கொத்தமல்லி,கறிவேப்பிலை சிறிதளவு
ஆப்ப சோடா 1 சிட்டிகை
உப்பு,எண்ணெய் தேவையானது
------------------
செய்முறை:

வெங்காயத்தை நீட்ட வாக்கில் மெல்லிய slice களாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலைமாவு அரிசி மாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை ஆப்ப சோடா,பெருங்காயத்தூள்,தேவையான உப்பு,காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும்  சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசையவேண்டும்.

அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிசைந்துவைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவதுபோல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும்.

மொறு மொறு வெங்காய பகோடா ரெடி.

Friday, July 6, 2012

ரைஸ் பக்கோடா



தேவையானவை:
சாதம் 1 கப்
கடலைமாவு 1/2 கப்
வெங்காயம் 1
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:

வெங்காயம்,இஞ்சி,பச்சை,மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வடித்த சாதம்,கடலைமாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை,தேவையான உப்பு,காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.

அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிசைந்துவைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவதுபோல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும்.

Tuesday, May 22, 2012

ரவா வடை




தேவையானவை:
ரவா      1 கப்
துருவிய தேங்காய் 1/2 கப்
சீரகம் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
வற்றல் மிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
தயிர் 2 மேசைக்கரண்டி
வெங்காயம் 1
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
----------
செய்முறை:

ரவாவில் சன்னரக ரவாவில் வடை செய்தால் ருசியாக இருக்கும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் ரவாவுடன் தயிர்,உப்பு,சீரகம்,தேங்காய் துருவல் எல்லாவற்றையும் சேர்த்து பிசறிக்கொள்ளவேண்டும்.
தண்ணீர் வேண்டுமென்றால் தெளித்துக்கொள்ளவும்.
இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வற்றல் மிளகாயை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி
கறிவேப்பிலையையும் சேர்த்து எல்லாவற்றையும் கலந்து கையில் அள்ளித் தட்டும் பதத்துக்கு பிசைந்து கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் வடைகளை தட்டிப்போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

பிசைந்த மாவை நெடு நேரம் வைத்திருந்தால் மாவு புளித்து விடும். அதனால் பிசைந்த உடனே வடைகளை தட்டவேண்டும்.

Tuesday, March 20, 2012

ரவா பக்கோடா




தேவையானவை:

ரவா 2 கப்
கடலை மாவு 1/2 கப்
அரிசிமாவு 1/4 கப்
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
காரப்பொடி 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:
ரவையை லேசாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த ரவை,கடலைமாவு,அரிசி மாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,
காரப்பொடி,கறிவேப்பிலை,கொத்தமல்லி,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து முதலில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து மாவில் போட்டு பிசறி
பின்னர் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைய வேண்டும்.

அடுப்பில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் மிதமான் தீயில் பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.
பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்ற மாலை டிபன் இது.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...