தேவையானவை:
பச்சரிசி 1 கப்
துவரம்பருப்பு 3/4 கப்
புளி 1 எலுமிச்சையளவு
வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு 10
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
நெய் 1 டேபிள்ஸ்பூன்
——————-
பொடி பண்ண:
பொடி 1:
கடலை-பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
கசகசா 1டேபிள்ஸ்பூன்
மேலே குறிப்பிட்ட மூன்றையும் தனித்தனியே எண்ணையில்லாமல் வறுக்கவேண்டும்.
பொடி 2:
கிராம்பு 10
லவங்கப்பட்டை ஒரு அங்குலம்
இரண்டையும் சேர்த்து எண்ணையில்லாமல் வறுக்கவேண்டும்.
பொடி 3:
சீரகம் 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
முதலில் சீரகத்தை வாணலியில் போட்டு பொரிக்கவிட்டு பின்னர் வெந்தயத்தை சேர்த்து பொரிக்கவேண்டும்.
பொடி 4:
தனியா 3 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை 1
இரண்டையும் தனித்தனியாக வறுக்கவேண்டும்.
பொடி 5:
கொ-ப்பறை தேங்காய் அல்லது தேங்காய் துருவல் 1 கப்
தனியே வறுக்கவேண்டும்
வற்றல் மிளகாய் 5 எண்ணெயில் வறுக்கவேண்டும்.
—————
செய்முறை:
5 பொடிகளையும் சேர்த்து நைசாக பொடி செய்து கொள்ளவேண்டும்.
அரிசியையும் பருப்பையும் சேர்த்து குக்கரில் 5 கப் தண்ணீருடன் வைக்கவேண்டும். (5 விசில்)
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து தேங்காயெண்ணையில் கடுகு தாளித்து அதனுடன் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
புளியை கரைத்து சேர்த்து வெல்லம்,மஞ்சள்தூள், பெருங்காயதூள், வேகவைத்த அரிசி பருப்பு கலவை,தேவையான உப்பு,2 1/2 டேபிள்ஸ்பூன் பொடி,தேவையான தண்ணீருடனும் கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் பிஸிபேளாபாத் அரிசி,பருப்பு,பொடி எல்லாம் சேர்ந்து நன்கு வெந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றவேண்டும்
சுவையான பிஸிபேளாபாத் ரெடி
இதில் எந்தவொரு காயும் சேர்க்கவில்லை.அவரவர் இஷ்டப்படி எந்த காயும் சேர்க்கலாம்,
No comments:
Post a Comment