Monday, June 27, 2011

கார்ன் ரவா உப்புமா



தேவையானவை:


கார்ன் ரவை 1 கப்

முழு பாசிப்பயறு 1 கப்

வெங்காயம் 1

தக்காளி 2

பூண்டு 3 பல்

பச்சைமிளகாய் 2

இஞ்சி 1 துண்டு

மிளகு தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணய் தேவையானது

கொத்தமல்லித்தழை சிறிதளவு
-----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:



கார்ன் ரவை கடைகளில் கிடைக்கும்.

முழு பாசிப்பயறை தண்ணீரில் 8 மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி ஒரு ஈரத்துணியில் சுற்றி வைக்கவேண்டும்

அடுத்தநாள் முளை கட்டிவிடும்.முளைகட்டாவிட்டால் மீண்டும் பயறை தண்ணீரில் அலசி விட்டு ஈரத்துணியில் சுற்றி

வைத்தால் இரண்டாம் நாள் முளைகட்டிவிடும்.பின்னர் அதை இட்லி தட்டில் ஆவியில் வைத்து எடுக்கவேண்டும்.(4 நிமிடம்).

கார்ன் ரவையை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் சேர்த்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளிக்கவேண்டும்.
பின்னர் வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி தேவையான தண்ணீர் சேர்க்கவேண்டும்.
(ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் வீதம்).
தண்ணீர் கொதித்தவுடன் ஆவியில் வேகவைத்த முழு பாசிப் பயறு,ஊறவைத்த கார்ன் ரவை, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து
நன்கு கிளறவேண்டும்.
கடைசியில் மிளகு தூள் தூவி கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

Sunday, June 19, 2011

சுண்டைக்காய் பிரட்டல்

தேவையானவை:
சுண்டைக்காய் 1 கப்
வெங்காயம் 1
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
மசாலா தூள் 1 டீஸ்பூன்
எள்ளுப்பொடி 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-----
செய்முறை:

சுண்டைக்காய் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடிக்கவேண்டும்.(நறுக்குவதற்கு பதில் இடித்தால் சுவையாக இருக்கும்).
எள்ளுப்பொடிக்கு எள்ளை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணைய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவேண்டும்.
அதனுடன் சுண்டைக்காயை சேர்த்து வதக்கி சிறிது வெந்ததும் தேவையான உப்பு, மஞ்சள்தூள்

மசாலா தூள்,எள்ளுப்பொடி
சேர்த்து நன்கு கிளறி இறக்கவேண்டும்.

Sunday, June 12, 2011

சுரைக்காய் கூட்டு

தேவையானவை:



சுரைக்காய் 1
கடலைபருப்பு 1/4 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1/4 கப்
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
நிலக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
-----
தாளிக்க:
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:


சுரைக்காயை தோலை எடுத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
கடலைபருப்பை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த கடலைபருப்பை சிறிது தண்ணீருடன் சேர்த்து வேகவைக்கவும்..பின்னர் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளை மஞ்சள்தூளுடன் சேர்த்து வேகவிடவும்.
சுரைக்காய் வெந்ததும் தேவையான உப்பு,அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
இறக்கியவுடன் தேங்காயெண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
சுரைக்காய் கூட்டை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.
பூரி சப்பாத்திக்கு ஏற்றது.

Sunday, June 5, 2011

கொத்தவரை உசிலி

தேவையானவை:
கொத்தவரங்காய்2 கப் (பொடியாக நறுக்கியது)
துவரம்பருப்பு 1/2 கப்

கடலைப்பருப்பு 1/2 கப்

மிளகாய் வற்றல் 4

பெருங்காயம் 1 துண்டு

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

உப்பு,எண்ணைய் தேவையானது
---
தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு சிறிதளவு

செய்முறை:



கொத்தவரங்காயைபொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

துவரம்பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம் நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில்

ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.

ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்க்கவும்.(மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் உதிரியாக வரும்)

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து

கொத்தவரை ,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
கொத்தவரைவதங்கினவுடன் உதிர்த்த பருப்புகளை சேர்த்து சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறவும்.
உதிரி உதிரியாக வரும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...