Showing posts with label பொரியல்-குருமா. Show all posts
Showing posts with label பொரியல்-குருமா. Show all posts

Monday, February 12, 2018

தூவல் பனீர் கிரேவி

தேவையானவை:

வெங்காயம்   1
தக்காளி  1
துருவிய பனீர் 2 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
காரப்பொடி 1 தேக்கரண்டி
மசாலாத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------------------
செய்முறை:

வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நடுக்கிக்கொள்ளவும்.
வாணலியில்  அடுப்பில்  வைத்து சிறிது எண்ணெயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
அதனுடன் தக்காளியையும் சேர்த்துவதக்கி தேவையான உப்பும் காரப்பொடி,மசாலாத்தூள் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
கடைசியில் துருவிய பனீர் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
கொத்தமல்லித்தழையை தூவவும்.

தூவல் பனீர் கிரேவி சப்பாத்திக்கு ஏற்ற sidedish
Sandwich ஆகவும் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்


Thursday, February 1, 2018

சேம்பு இலை பொரியல்

தேவையானவை:

சேம்பு இலை   4
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
துவரம் பருப்ப் 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 3
பெருங்காயம் 1 துண்டு
--------
செய்முறை:
முதலில்  மூன்று  பருப்புகளையும் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.
-------
சேம்பு இலையை பின்புறமாக ஒரு தட்டில் வைத்து பாதியாக கட் பண்ணி அதன் மேல் எண்ணையை தடவி அரைத்த மாவை பரவலாக இடவேண்டும்

பின்னர் அதனை சுருட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து பதினைந்து நிமிடம் கழித்து எடுக்கவேண்டும்.

இட்லி தட்டிலிருந்து எடுத்து சிறு துண்டுகளாக கட் பண்ணவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் சேம்பு துண்டுகளை பொரித்து எடுக்கவேண்டும்.

Tuesday, October 11, 2016

ஓலன்



தேவையானவை:

பூசணி கீற்று 2

காராமணி 1 கப்

பச்சைமிளகாய் 4

தேங்காய் பால் 1 கப்

தேங்காய் எண்ணைய்  1/4 கப்
கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:



பூசணி கீற்றுகளை தோலெடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

காராமணியை லேசாக எண்ணையில்லாமல் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்

பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.

------

அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள்,வேகவைத்த காராமணி,

பச்சைமிளகாய், ஒரு கப் தண்ணீருடன் கால் கப் தேங்காய் பால்,சேர்த்து வேகவைக்கவும்.

பூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.

 தேங்காய் எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

கடைசியில் மீதமுள்ள தேங்காய் பாலை சேர்த்து சிறித் கொதித்தபின் இறக்கவும்.

------

ஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.

சப்பாத்தி,பூரிக்கும் சிறந்த side dish ஆகும். 

Monday, September 5, 2016

பிந்தி மசாலா

  



 தேவையானவை:
 வெண்டைக்காய் 15
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
 மிளகாய் தூள்  2 தேக்கரண்டி
   கடலை மாவு  ஒரு மேசைக்கரண்டி
    அரிசி மாவு  ஒரு தேக்கரண்டி
    எண்ணெய்  தேவையான அளவு

   மசாலா செய்வதற்கு:

   வெங்காயம்  2
  தக்காளி  4
  இஞ்சி பூண்டு விழுது  ஒரு தேக்கரண்டி
   கரம் மசாலா  2 தேக்கரண்டி
   கசூரி மேத்தி  ஒரு தேக்கரண்டி
    வெண்ணெய்  ஒரு மேசைக்கரண்டி
    கொத்தமல்லி  அலங்கரிக்க
   உப்பு, எண்ணெய்  தேவையான அளவு
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி

செய்முறை:
வெண்டைக்காயை நன்றாகக் கழுவி துடைத்து நீளமாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய வெண்டைக்காய்,மஞ்சள்தூள்,உப்பு, மிளகாய்தூள்,அரிசி மாவு,கடலைமாவு,சிறித் எண்ணெய் சேர்த்து பிரட்டவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை பொரித்து எடுக்கவும். 

வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கடாயில்வெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து தேவையான உப்புடன் நன்றாக வதக்கவும்.நன்றாக வதங்கியதும் மேலே கூறியுள்ள அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பின்னர் அதில் பொறித்த வெண்டைக்காய்களை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்

கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
சுவையான பிந்தி மசாலா ரெடி.

Tuesday, August 30, 2016

கத்திரிக்காய் கொத்சு




தேவையானவை:

பெரிய கத்திரிக்காய் 1
புளி எலுமிச்சை அளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
எள்ளு பொடி 1 மேசைக்கரண்டி
---
அரைக்க:

மிளகாய்வற்றல் 10
உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
----
செய்முறை:

பெரிய கத்திரிக்காயின் மேல் கொஞ்சம் எண்ணைய் தடவி அடுப்பில் சுட வேண்டும்.
பின்னர் தோலுரித்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து சிறிது தண்ணீர் விட்டு
விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
புளி நன்றாகக் கொதித்தவுடன் அரைத்த விழுதினை சேர்க்கவேண்டும்.
நன்கு கொதித்தவுடன் கத்திரிக்காய் விழுதினை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் எள்ளுப்பொடி தூவி அடுப்பை அணைக்கவும்.
மிகக் காரமாக உணர்ந்தால் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.

வெண்பொங்கல்,அரிசி உப்புமா இரண்டிற்கும் ஏற்ற side dish இது.

Monday, August 8, 2016

கடலைக் கூட்டு

தேவையானவை:
 நிலக்கடலை 1/2 கப்
கொண்டக்கடலை 1/2 கப்
பட்டாணி 1/2 கப்
ராஜ்மா 1/2 கப்
மொச்சை 10
காராமணி  1/2 கப்
பச்சைபயறு 1/2 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
-------


அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்  4
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:
எல்லா கடலை வகைகளையும் தண்ணீரில் ஆறு மணிநேரம் ஊறவைக்கவேண்டும். ஊறவைத்ததை குக்கரில் சிறிது உப்புடன் சேர்த்து வைத்து நான் கு    விசில் வைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவல், சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.






Wednesday, May 11, 2016

மரவள்ளிக்கிழங்கு பொரியல்




தேவையானவை:


மரவள்ளிக்கிழங்கு 2 துண்டுகள்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
வெங்காயம்1
காய்ந்த மிளகாய்2
தேங்காய் துருவல்1/4 கப்
கடுகு1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணய் தேவையானது
-------
செய்முறை:

மரவள்ளிக்கிழங்கின் மேல் தோல் நடு வேர் இரண்டையும் அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தேங்காய் துருவல்,பச்சைமிளகாய்,வெங்காயம் மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்த மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை தேவையான உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும் வடிகட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து வதக்கவும்.
பின்னர் வடிகட்டிய மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.

Monday, April 11, 2016

உருளைக்கிழங்கு பால் கூட்டு



உருளைக்கிழங்கு 4
தேங்காய் துருவல் 2 கப்
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 1
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையானது
-----------------------

செய்முறை:

தேங்காயை துருவி முதலில் கெட்டியாகவும்,இரண்டாவது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாகவும்,மூன்றாவ்ஸ்து பால் தண்ணீராகவும் எடுத்துக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாய்,இஞ்சி,வெங்காயம் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து மூன்றாவதாக எடுத்த தண்ணீர் பாலில் இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயத்துண்டுகளைப் போட்டு வேகவைக்கவும்.
அடுத்து இரண்டாவது பாலை ஊற்றி நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளைப் போடவும். தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.

கொதித்து வரும்போது கெட்டியான முதல் பாலை சேர்த்து சிறிது கொதிக்கவைத்து கறிவேப்பிலை போட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.

பூரி சப்பாத்திக்கு ஏற்ற sidedish.

Tuesday, April 5, 2016

சேனைக்கிழங்கு மசியல்



தேவையானவை :

சேனைக்கிழங்கு  1 பெரிய துண்டு
பச்சைமிளகாய் 2
எலுமிச்சம்பழம் 1
வெங்காயம் 1
இஞ்சி ஒரு துண்டு
மிளகாய்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------------------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-------------------------
செய்முறை:
சேனைக்கிழங்கின் தோலை சீவிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய துண்டுகளை வேகவைத்து நன்றாக மசித்துக்கொள்ளவும்.
வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மசித்த சேனைக்கிழங்கு துண்டுகள்.எலுமிச்சம்பழச்சாறு,மிளகாய் தூள், தேவையான உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் சேனைக்கிழங்கு கலவையை சிறிது தண்ணீருடன் சேர்த்து கிளறவும்.
மசியல் பவுன் நிறம் வந்ததும் இறக்கவும்.

Monday, February 29, 2016

முருங்கை..முந்திரி..குருமா



தேவையானவை:

முருங்கைக்காய் 5
வெங்காயம் 2
பூண்டு 5 பல்
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
முந்திரிப் பருப்பு 10
கசகசா 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்
பச்சைமிளகாய் 2
---
தாளிக்க:

தேங்காயெண்ணய் 1 மேசைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 5
கறிவேப்பிலை ஒருகொத்து
------

செய்முறை:


முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்து உள்ளேயிருக்கும் கதுப்பை தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயம்,பூண்டு,பச்சைமிளககாய்,இஞ்சி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளில் முந்திரிபருப்பு,கசகசா இரண்டையும் தனித்தனியே அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தேங்காய்.பச்சைமிளகாயுடன் விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து பொடியாக நறுக்கியுள்ள வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய் நன்றாக வதக்கவேண்டும்.
அதனுடன் முருங்கைக்காய்   கதுப்பை மஞ்சள் தூளுடன் சேர்த்து சிறிது வதக்கி தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்த பின் அடுப்பை அணைத்து தேங்காயெண்ணையில் கடுகு,சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை தாளித்து குருமாவுடன் சேர்க்கவேண்டும்.

முருங்கை..முந்திரி..குருமா பூரி,சப்பாத்திக்கு ஏற்ற sidedish.

Tuesday, January 19, 2016

INSTANT புடலங்காய் உசிலி



தேவையானவை:
புடலங்காய் 2  கப் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
--------
வேர்க்கடலை 10
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
மிளகாய்வற்றல் 3
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-----
செய்முறை:


புடலங்காயை உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து பிசறி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
வேர்க்கடலை,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் நான்கையும் எண்ணெய்யில் வறுத்து பொடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து புடலங்காயை நன்றாகப் பிழிந்து போடவும்.
புடலங்காய் வெந்தவுடன் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து சிறிது பிரட்டவும்.

சுவையான புடலங்காய்  உசிலி ரெடி.

Monday, December 28, 2015

கீரை கடைசல்



தேவையானவை:

முளைக்கீரை 1/2 கப் (அரிந்தது)
அரைக்கீரை 1/2 கப் (அரிந்தது)
தக்காளி 2
வெங்காயம் 3
பூண்டு 5 பல்
தேங்காய் பால் 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
முளைக்கீரை,அரைக்கீரை,வெங்காயம் (2),தக்காளி எல்லாவற்றையும் நன்றாக வதக்கி அரைக்கவும்.
வாணலியை எடுத்துக்கொண்டு அதில்; சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம் (1) பூண்டு இரண்டையும் நன்றாக வதக்கவும்.பின்னர்  அரைத்த விழுதை தேவையான உப்புடன் சேர்க்கவும். சிறிது கொதித்தவுடன் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

Tuesday, September 1, 2015

கார்ன் மஞ்சூரியன்



தேவையானவை:

பேபி கார்ன்  10
Spring onion   1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் 2
Soy    sauce 1  தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது2 தேக்கரண்டி
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
கார்ன் மாவு 1 மேசைக்கரண்டி
மைதா மாவு 1 மேசைக்கரண்டி
உப்பு எண்னெய் தேவையானது
--------

செய்முறை:


பேபி கார்ன் ஐ அப்படியே Microwave H ல் சிறிது தண்ணீர் தெளித்து வைக்கவும்.
வெளியே எடுத்து  துண்டுகளாக நறுக்கவும்.

இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி,மிளகு தூள்,கார்ன் மாவு,மைதாமாவு,மிளகாய் தூள் எல்லாவற்றையும் சிறிது உப்புடனும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அதில் நறுக்கிவைத்துள்ள கார்ன் துண்டுகளை பிரட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து spring onion, பச்சைமிளகாய்,இஞ்சி பூண்டு விழுது (1 தேக்கரண்டி) வ்தக்கி அதில்
 அதில் பொரித்த கார்ன் துண்டுகளை சேர்த்து அதனுடன் soy sauce சேர்க்கவும்.தேவையான் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

Tuesday, August 25, 2015

ஓலன்



தேவையானவை:

பூசணி கீற்று 2

காராமணி 1 கப்

பச்சைமிளகாய் 4

தேங்காய் பால் 1 கப்

தேங்காய் எண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

செய்முறை:


பூசணி கீற்றுகளை தோலெடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

காராமணியை லேசாக எண்ணையில்லாமல் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்

பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.

------

அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள்,வேகவைத்த காராமணி,

பச்சைமிளகாய், ஒரு கப் தண்ணீர்,சேர்த்து வேகவைக்கவும்.

பூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.

பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

கடைசியில் தேங்காய் எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.

------

ஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.

சப்பாத்தி,பூரிக்கும் சிறந்த side dish ஆகும். 

Wednesday, April 29, 2015

காளன்

தேவையானவை:
சேனைக்கிழங் கு      1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
துருவிய தேங்காய் 3/4 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மிளகுதூள் 1 தேக்கரண்டி
நெய் 1 தேக்கரண்டி
தயிர் 1 கப்
உப்பு தேவையானது
------------
தாளிக்க:
தேங்காய் எண்ணைய் 1 மேசைக்கரண்டி
கடுகு1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
பச்சைமிளகாய்2
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:

தேங்காய் துருவல் சீரகம் இரண்டையும் சிறிது தண்ணீர் தெளித்துவிழுது போல அரைத்துக்கொள்ளவும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----------
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரை கப் தண்ணீர் விட்டு ஒரு தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி அந்த தண்ணீரை மீண்டும் பாத்திரத்தில் வைத்து அதனுடன் நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகள் .மஞ்சள் தூள்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
சேனைக்கிழங்கு சிறிது வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவல்,சீரக விழுதையும்,வெந்தய விழுதையும் நெய்யுடன் சேர்த்து சிறிது கொதிக்கவிடவும்.
பின்னர் தயிர் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவேண்டும்.(தயிர் சேர்த்த பின் கொதிக்கவைக்கக்கூடாது)
வாணலியில் தேங்காயெண்ணைய் வைத்து கடுகு,கிள்ளிய சிவப்பு மிளகாய்,குறுக்காக வெட்டிய பச்சைமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.  

Wednesday, April 22, 2015

பீன்ஸ் கொள்ளு பொரியல்






தேவையானவை:




பொடியாக நறுக்கிய பீன்ஸ் 1 கப்

தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி

------

கொள்ளு 1/4 கப்

கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி

பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் 2

பெருங்காயம் 1 துண்டு

-------

உப்பு,எண்ணெய் தேவையானது

-------

தாளிக்க:

கடுகு 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை ஒரு கொத்து

-----

செய்முறை:









கொள்ளை முதல் நாள் இரவே தண்ணீரில் உறவைக்கவேண்டும்.

கடலைபருப்பு,பொட்டுக்கடலை இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்தால் போதும்.

ஊறிய கொள்ளை வடிகட்டி அதனுடன் ஊறவைத்த கடலைபருப்பு,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல்,பெருங்காயம்

தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.

அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.

பின் அதை தட்டில் போட்டு உதிர்க்கவும். கட்டியாக இருந்தால் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.




பீன்ஸை Microwave bowl ல் வைத்து Microwave "H" ல் ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும்.

வெளியே எடுத்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.




அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வேகவைத்த பீன்ஸ் யை சேர்க்கவும்.

அதனுடன் உதிர்த்த கொள்ளு பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.




பீன்ஸ் கொள்ளு பொரியலை சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Tuesday, December 16, 2014

சௌசௌ பொரியல்



தேவையானவை:
சௌசௌ 2
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
அரைக்க:
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
நிலக்கடலை 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு சிறிய துண்டு
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:



சௌசௌ வை தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்..
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
------
நறுக்கிய சௌசௌ துண்டுகளை  சிறிது மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
microwave லும் வைத்து வேகவைக்கலாம்.microwave oven ல் நறுக்கிய துண்டுகளை ஒரு bowl ல் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து ' H 'ல் ஐந்து நிமிடம் வைத்தால் போதும்.வெந்துவிடும்.

வாணலியில் சிறிது  எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வேகவைத்த சௌசௌ துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.அரைத்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு தூவி நன்கு கிளறி இறக்கவும்.

(இந்த பொடியை தண்ணீர் விடாமல் அரைப்பதால் இரண்டு,மூன்று நாள் வைத்துக்கொள்ளலாம்,எல்லாப் பொரியலுக்கும் உபயோகப்படுத்தலாம்.)

சௌசௌ பொரியல் சற்றே மாறுபட்ட வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

Sunday, November 30, 2014

பூரி..சாகு

பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததே.

"சாகு" பூரிக்கு உகந்த side dish.

ஹோட்டல்களில் பூரி..சாகு சாப்பிட்டிருப்போம்.

ஆனால் நம்மில் பல பேர் வீட்டில் "சாகு" செய்வதில்லை.

"சாகு" செய்முறையை விளக்குகிறேன்.



தேவையானவை:

காலிஃப்ளவர் 10 பூக்கள்

உருளைக்கிழங்கு 1 கப் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் 1

பட்டாணி 1/2 கப்

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

கார்ன் 1/2 கப்

கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்

vegetable stock 1 கப்

உப்பு எண்ணைய் தேவையானது

----

அரைக்க:

துருவிய தேங்காய் 1 கப்

பட்டை 1 துண்டு

கிராம்பு 2

சீரகம் 1 டீஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

கசகசா 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

கொத்தமல்லித்தழை 1/4 கப்

----

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

-----

செய்முறை:


வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

மற்ற காய்கறிகளை ஒரு microwave bowl ல் வைத்து சிறிது உப்பு சேர்த்து microwave "H'ல் ஐந்து நிமிடம் வைக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்துவிடும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் வேகவைத்த காய்கறிகள்,அரைத்த விழுது சேர்க்கவும்.

இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து ஒரு நிமிடம்

கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.

Tuesday, August 26, 2014

முருங்கை..முந்திரி..குருமா



தேவையானவை:

முருங்கைக்காய் 5
வெங்காயம் 2
பூண்டு 5 பல்
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
முந்திரிப் பருப்பு 10
கசகசா 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்
பச்சைமிளகாய் 2
---
தாளிக்க:

தேங்காயெண்ணய் 1 மேசைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 5
கறிவேப்பிலை ஒருகொத்து
------

செய்முறை:


முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்து உள்ளேயிருக்கும் கதுப்பை தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயம்,பூண்டு,பச்சைமிளககாய்,இஞ்சி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளில் முந்திரிபருப்பு,கசகசா இரண்டையும் தனித்தனியே அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தேங்காய்.பச்சைமிளகாயுடன் விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து பொடியாக நறுக்கியுள்ள வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய் நன்றாக வதக்கவேண்டும்.
அதனுடன் முருங்கைக்காய்   கதுப்பை மஞ்சள் தூளுடன் சேர்த்து சிறிது வதக்கி தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்த பின் அடுப்பை அணைத்து தேங்காயெண்ணையில் கடுகு,சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை தாளித்து குருமாவுடன் சேர்க்கவேண்டும்.

முருங்கை..முந்திரி..குருமா பூரி,சப்பாத்திக்கு ஏற்ற sidedish.

Tuesday, August 5, 2014

தேங்காய் பால் வெஜ் குருமா



தேவையானவை:
பீன்ஸ்   1 கப் (பொடியாக நறுக்கியது)
காரட்   1 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டாணி 1 கப்
சோளம் (கார்ன்) 1 கப்
தேங்காய் பால் 2 கப்
-----------------------
அரைக்க:
தனியா 1 மேசைக்கரண்டி
மிளகு 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
பூண்டு 2 பல்
புதினா சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
கசகசா 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
முந்திரிபருப்பு 10
-------------------
தாளிக்க:
கறிவேப்பிலை
----------------
செய்முறை:


அரைக்கக் கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் சிறிது தண்ணீர் வைத்து காய்கறிகள் எல்லாவற்றையும் வேகவைக்கவேண்டும்.
காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை உப்பு, சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.
இந்த குருமா சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...