Tuesday, August 25, 2015

ஓலன்



தேவையானவை:

பூசணி கீற்று 2

காராமணி 1 கப்

பச்சைமிளகாய் 4

தேங்காய் பால் 1 கப்

தேங்காய் எண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

செய்முறை:


பூசணி கீற்றுகளை தோலெடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

காராமணியை லேசாக எண்ணையில்லாமல் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்

பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.

------

அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள்,வேகவைத்த காராமணி,

பச்சைமிளகாய், ஒரு கப் தண்ணீர்,சேர்த்து வேகவைக்கவும்.

பூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.

பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

கடைசியில் தேங்காய் எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.

------

ஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.

சப்பாத்தி,பூரிக்கும் சிறந்த side dish ஆகும். 

3 comments:

கோமதி அரசு said...

ஓலன் அருமை.

Kanchana Radhakrishnan said...

Thanks கோமதி அரசு.

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/

28. அவரைக்காய் புளி குழம்பு

 தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ புளி எலுமிச்சை அளவு வெங்காயம் 1 தக்காளி  1 பூண்டு 5 பற்கள் துருவிய  தேங்காய் 1/4 கப் சாம்பார் பொடி 1 டேபிள்ஸ...