Showing posts with label சட்னி - துவையல். Show all posts
Showing posts with label சட்னி - துவையல். Show all posts

Tuesday, September 27, 2016

தக்காளி சட்னி

தேவையானவை:

தக்காளி  10
மிளகாய் வற்றல்   5
சீரகம்  1 மேசைக்கரண்டி
பூண்டு 4 பல்
இஞ்சி ஒரு துண்டு
குடமிளகாய் 1
புளி   எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி

முந்திரிபருப்பு 6
கறிவேப்பிலை சிறிதளவு
புதினா சிறிதளவு
உப்பு தேவையானது
எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
-------
செய்முறை:


தக்காளியையும் குடமிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொண்டு எண்ணையில் நன்றாக வதக்கிகொள்ளவும்.
மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,சீரகம்,பெருங்காயத்தூள் மூன்றையும் த்னியே வறுத்துக்கொள்ளவும்.
பூண்டு,இஞ்சி இரண்டையும் எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும்.
புளியை தனியாக வறுத்துக்கொள்ளவும்.
முந்திரிபருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

  புதினா,கறிவேப்பிலை வதக்கி,உப்பு சேர்த்து  எல்லாவற்றையும் ஒன்றாக நைசாக அரைக்கவும்.
கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கொத்தமல்லித்தழையை தூவவும்.

Tuesday, March 15, 2016

புளி இஞ்சி


தேவையானவை:


இஞ்சி 1 கப் (நறுக்கியது)
புளி பெரிய எலுமிச்சை அளவு)
நல்லெண்ணைய் 1/4 கப்
பச்சைமிளகாய் 3
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
வெல்லம் சிறிதளவு

செய்முறை:


இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவேண்டும்.---
வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் தாளித்து
பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவேண்டும்.
நன்கு வதங்கிய பின் உப்பு,மஞ்சள்தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
புளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவேண்டும்.

புளி இஞ்சியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.பொங்கலுக்கு ஏற்ற side dish.
ஜீரணத்திற்கு நல்லது.

Monday, January 11, 2016

வேர்க்கடலை, கடுகு சட்னி



தேவையானவை:

வேர்க்கடலை   1 கப்
கடுகு           1மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1/2 கப்
மிளகாய் வற்றல்  3
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
சீரகம் 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
--------

செய்முறை:


முதலில் கடுகை வெறும் வாணலியில் போட்டு வெடிக்கவிடவும். தனியே எடுத்துவைக்கவும்.
பின்னே வேர்க்கடலை,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு எல்லாவற்றையும் எண்ணெய்யில் வறுக்கவும்.
வறுத்த பருப்புகளுடன் வெடிக்க வைத்த கடுகு,தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
தாளிக்க வேண்டியவைகள தாளிக்கவும்.
இட்லி தோசைக்கு ஏற்ற ருசியான சட்னி ரெடி.


Monday, November 2, 2015

முடக்கத்தான் கீரை துவையல்





தேவையானவை:                        

முடக்கத்தான் கீரை  

முடக்கத்தான் கீரை 1 கப் (அரிந்து நறுக்கியது)
வெங்காயம் 1
தேங்காய் துருவல் 1/2 கப்
மிளகாய்  வற்றல் 3
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------------------
செய்முறை:
முடக்கத்தான் கீரையை நன்றாக அலசிவிட்டு சிறிது எண்ணெய்யில் வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயதை பொடியாக நறுக்கி எண்ணெய்யில் பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.
மிளகாய்வற்றல்,பெருங்காயம்,உளுத்தம்பருப்பு,புளி நான்கினையும் சிறிது எண்ணெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
-----
வதக்கிய முடக்கத்தான் கீரை,வெங்காயம் வறுத்த தேங்காய் துருவல் ,வறுத்த மிளகாய் வற்றல்,பெருங்காயம்,உளுத்தம்பருப்பு எல்லாவற்றையும் தேவையான் உப்புடன்சேர்த்து அரைக்கவும்.
-------
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு சிறந்த மருந்து

Tuesday, September 15, 2015

சுண்டைக்காய் துவையல்





தேவையானவை:

சுண்டைக்காய் 1 கப்
வெங்காயம் 2
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
பெருங்காயம் 1 துண்டு
புளி சிறிதளவு
எண்ணெய்,உப்பு தேவையானது
------
செய்முறை:


சுண்டைக்காயின் காம்பை எடுத்துவிட்டு எண்ணெயில் தனியாக  நன்றாக வதக்கவும்
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொன்னிறமாக வதக்கவும்.
உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல்,பெருங்காயம்,புளி எல்லாவற்றையும் சிறிது எண்ணெயில் நன்றாக வறுக்கவும்.
எல்லாவற்றையும் உப்புடன் சேர்த்து அரைக்கவும்.
கடைசியில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்துக்கொட்டவும்.
சுவையான சுண்டைக்காய் துவையல் ரெடி.

இந்த துவையலை சாதத்தோடு நல்லெண்ணய் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

Sunday, May 31, 2015

நெல்லி, மல்லி சட்னி



தேவையானவை:

வேகவைத்த நெல்லிக்காய் 4
கொத்தமல்லித்தழை 1 கப்
பச்சைமிளகாய் 2
பொடித்த வெல்லம் 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:


வேகவைத்த நெல்லிக்காய்,கொத்தமல்லித்தழை,பச்சைமிளகாய்.பொடித்த வெல்லம் தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும்.
அரைத்த சட்னியில் எலுமிச்சை சாறு சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளிக்கவும்.
தித்திப்பும் புளிப்பும் இணைந்த ருசியான சட்னி.

Wednesday, April 15, 2015

பொட்டுக்கடலை துவையல்



தேவையானவை:
பொட்டுக்கடலை 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
வற்றல் மிளகாய் 4
உளுத்தம்பருப்பு  2 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:


பொட்டுக்கடலையை எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவல்,வற்றல் மிளகாய்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம் நான்கினையும் எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும்.
எல்லாவற்றையும் தேவையான உப்பு,தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

சாதாரணமாக நாம் பருப்பு துவையலில் துவரம்பருப்பும்,கடலைப்பருப்பும் சேர்ப்போம். ஆனால் இந்த துவையல் மிகவும் ருசியாக இருக்கும்.
சாதத்தில் சிறிது நல்லெண்ணையுடன் இந்த துவையலை பிசைந்து சாப்பிடவேண்டும்.

பொட்டுக்கடலையில் இரும்பு சத்து உள்ளது.

Monday, March 9, 2015

பீர்க்கங்காய் துவையல்



தேவையானவை:

பீர்க்கங்காய் 2


மிளகாய்வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் ஒரு துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது

தாளிக்க:

கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:


பீர்க்கங்காயின் தோலை சீவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து நறுக்கிய துண்டுகளை வதக்கிக்கொள்ளவும்.

அதே வாணலியில் மிளகாய்வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிவக்க வறுக்கவேண்டும்.
மிக்சியில் முதலில் இந்த நான்கையும் தேவையான உப்புடன் அரைத்துவிட்டு அதனுடன் வதக்கிய பீர்க்கங்காய் துண்டுகளைப் சேர்த்து விப்பரில் ஒரு சுற்று சுற்ற வேண்டும்.

கடைசியில் தாளிக்கவும்.

பீர்க்கங்காய் இரத்தத்தை சுத்திகரித்து உடல் சூட்டை தணிக்கும்.

Monday, February 9, 2015

ஆரஞ்சு தோல் துவையல்



தேவையானவை:

ஆரஞ்சு தோல் 1 கப் (நறுக்கியது)
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
------

செய்முறை:


வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோலை நன்றாக வதக்கவேண்டும்.
மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் எண்ணெயில் வறுக்கவேண்டும்.
வறுத்ததை வதக்கிய ஆரஞ்சு தோலுடன் தேவையான உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்.
கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவேண்டும்.

இந்த துவையலை சாதத்தோடு நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிடலாம்.

Monday, December 29, 2014

புளி இஞ்சி


தேவையானவை:


இஞ்சி 1 கப் (நறுக்கியது)
புளி பெரிய எலுமிச்சை அளவு)
நல்லெண்ணைய் 1/4 கப்
பச்சைமிளகாய் 3
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
வெல்லம் சிறிதளவு

செய்முறை:


இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவேண்டும்.---
வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் தாளித்து
பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவேண்டும்.
நன்கு வதங்கிய பின் உப்பு,மஞ்சள்தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
புளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவேண்டும்.

புளி இஞ்சியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.பொங்கலுக்கு ஏற்ற side dish.
ஜீரணத்திற்கு நல்லது.

Friday, December 27, 2013

பச்சைமிளகாய் சட்னி



தேவையானவை:

பச்சைமிளகாய் 10
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கறிவேப்பிலை சிறிதளவு
வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சைமிளகாயை எண்ணைய் விட்டு வதக்கிகொள்ளவும்.
பெருங்காயம்,உப்பு இரண்டையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியிலிருந்து கோதை எடுத்துவிட்டு லேசாக வறுக்கவேண்டும்.
பச்சைமிளகாய்,உப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவேண்டும்.


வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
வேண்டுபவர்கள் வெல்லத்தை சேர்க்கலாம்.

தோசை,இட்லி இவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.

Monday, December 9, 2013

பேரீச்சை,தக்காளி சட்னி



தேவையானவை:
பேரீச்சம்பழம் 10
தக்காளி 4
இஞ்சி ஒரு துண்டு
சிவப்பு மிளகாய் 3
உப்பு ,எண்ணெய் தேவையானது
சர்க்கரை 1/2 தேக்கரண்டி
------
செய்முறை:

பேரீச்சம்பழத்தை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
தக்காளி,இஞ்சி,மிளகாய் வற்றல் மூன்றையும் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
ஊறவைத்த பேரீச்சம்பழம்,வதக்கிய தக்காளி,இஞ்சி,மிளகாய் வற்றல்,தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
கடைசியில் சர்க்கரை சேர்க்கவும்.

பேரீச்சை,தக்காளி சட்னி இட்லி,தோசை,பொங்கல் மூன்றுக்கும் ஏற்ற side dish.

Monday, August 12, 2013

தனியா சட்னி



தேவையானவை:
தனியா 1/2 கப்
மிளகாய் வற்றல் 3
பூண்டு 3 பல்
புளி சிறிதளவு
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
----
செய்முறை:

தனியாவை எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
மிளகாய் வற்றல்,பூண்டு,புளி மூன்றையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் தேங்காய் துருவல்,கறிவேப்பிலை இரண்டையும் ஒரு பிரட்டு பிரட்டினால் போதும்.
எல்லாவற்றையும் தேவையான உப்புடன் சேர்த்து அரைக்கவும்.
தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
தனியா சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தோடு சாப்பிடலாம்.
இட்லி,தோசைக்கும்  சிறந்த  side dish ஆகும்.

Friday, January 11, 2013

புதினா துவையல்




தேவையானவை:
புதினா 1 கட்டு
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1  துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது             புதினா

-------
செய்முறை:
புதினாவை நன்கு ஆய்ந்துவிட்டு தண்ணீரில் அலசிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து புதினாவை பிழிந்து போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
மிளகாய் வற்றல்.உளுத்தம்பருப்பு,பெருங்காயம் மூன்றினையும் எண்ணெயில் வறுக்கவும்.
வதக்கிய புதினா,வறுத்த மிளகாய் வற்றல் உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,புளி,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்
சூடான சாதத்துடன் சற்று நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட அருமை..

Thursday, September 20, 2012

கொத்தமல்லி சட்னி




தேவையானவை:

கொத்தமல்லி 1 கட்டு
பச்சைமிளகாய் 2
பெருங்காயம் 1 சிறிய துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
கடுக் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
                                கொத்தமல்லி

------
செய்முறை:

கொத்தமல்லியை நன்கு ஆய்ந்து தண்ணீரில் அலசிக்கொள்ளவும்.
பெருங்காயத்தை எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
மிக்சியில் ஆய்ந்த கொத்தமல்லி,பச்சைமிளகாய்,பெருங்காயம்,புளி தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும்.
பின்னர் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

இட்லி,தோசைக்கு ஏற்றது.

Sunday, February 12, 2012

பச்சைமிளகாய் சட்னி



தேவையானவை:

பச்சைமிளகாய் 10
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கறிவேப்பிலை சிறிதளவு
வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சைமிளகாயை எண்ணைய் விட்டு வதக்கிகொள்ளவும்.
பெருங்காயம்,உப்பு இரண்டையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியிலிருந்து கோதை எடுத்துவிட்டு லேசாக வறுக்கவேண்டும்.
பச்சைமிளகாய்,உப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவேண்டும்.


வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
வேண்டுபவர்கள் வெல்லத்தை சேர்க்கலாம்.

தோசை,இட்லி இவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.

Friday, February 4, 2011

சிவப்பு குடமிளகாய் சட்னி



தேவையானவை:

சிவப்பு குடமிளகாய் 1

வெங்காயம் 1

தக்காளி 1

பூண்டு 2 பல்

இஞ்சி 1 துண்டு

புளி சிறிதளவு

சிவப்பு மிளகாய் 3

உப்பு,எண்ணய் தேவையானது

---------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

சீரகம் 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

-------

செய்முறை:
  • சிவப்பு குட மிளகாயை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி நான்கையும் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கிக்கொள்ளவும்.

சிவப்பு மிளகாய்,புளி இரண்டையும் தனித்தனியே எண்ணையில் வறுத்துக்கொள்ளவும்.

எல்லாவற்றையும் தேவையான உப்புடன் மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும்.

கடைசியில் கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.

சிவப்பு குட மிளகாய் சட்னி இட்லி,தோசை,பொங்கல் ஆகியவற்றிற்கு ஏற்ற sidedish.

Thursday, December 16, 2010

பருப்புத் துவையலும் மைசூர் ரசமும்

பருப்புத் துவையல்


தேவையானவை:

துவரம்பருப்பு 1/2 கப்

கடலைப் பருப்பு 1/2 கப்

மிளகாய் வற்றல் 4

பெருங்காயத்துண்டு சிறிதளவு

உப்பு,எண்ணைய் தேவையானது.

செய்முறை:

துவரம்பருப்பு,கடலைப் பருப்பு,மிளகாய் வற்றல்,பெருங்காயம் நான்கையும் சிறிது

எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் உப்பு சேர்த்து மிக்சியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.

பருப்புகள் நன்றாக மசிந்து நைசாக ஆகும் வரை அரைக்கவேண்டும்.


மைசூர் ரசம்



தேவையானவை:

துவரம்பருப்பு 1/2 கப்

புளி ஒரு எலுமிச்சை அளவு

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

உப்பு எண்ணைய் தேவையானது

----

அரைக்க:

தனியா 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 2

மிளகு 10

துவரம்பருப்பு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

---

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

நெய் 1/2 டீஸ்பூன்

-----

செய்முறை:

துவரம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் தனியா,மிளகாய் வற்றல்,மிளகு,துவரம்பருப்பு நான்கையும்

எண்ணையில் லேசாக வறுத்து அரைத்து கடைசியில் சீரகத்தை பச்சையாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

-----

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதில் உப்பு,பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

புளித்தண்ணீர் கொதித்தவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.

கடைசியில் வெந்த பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

இறக்கி வைத்த பின் நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.

------

பண்டிகை நாட்களுக்குப் பிறகு பருப்புத் துவையலும்,மைசூர் ரசமும் சாப்பிட்டால் வயிறு லேசாகும்.

Wednesday, July 28, 2010

தூதுவளைக் கீரை துவையல்


தூதுவளைக் கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி 1 துண்டு
மிளகாய் வற்றல் 2
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
புளி சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

தூதுவளைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கீரையை நன்கு வதக்கவேண்டும்.

இஞ்சி,மிளகாய் வற்றல்,புளி,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சிறிது எண்ணையில்
வதக்கவும்.இதனுடன் வதக்கிய கீரை,தேவையான உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்.

Tuesday, February 9, 2010

புளி இஞ்சி


தேவையானவை:




இஞ்சி 1 கப் (நறுக்கியது)
புளி பெரிய எலுமிச்சை அளவு)
நல்லெண்ணைய் 1/4 கப்
பச்சைமிளகாய் 3
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
வெல்லம் சிறிதளவு

செய்முறை:


இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவேண்டும்.---
வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் தாளித்து
பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவேண்டும்.
நன்கு வதங்கிய பின் உப்பு,மஞ்சள்தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
புளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவேண்டும்.

புளி இஞ்சியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.பொங்கலுக்கு ஏற்ற side dish.
ஜீரணத்திற்கு நல்லது.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...