Monday, August 17, 2015

வரகு உப்புமா கொழுக்கட்டை

தேவையானவை:

வரகரிசி 1 கப்          
                                                  
-------
அரைக்க:
துவரம்பருப்பு 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
தெங்காய்துருவல் 1/2 கப்
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 2
-------
செய்முறை:




வரகரிசியைவெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்..
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
(ஒரு கப் வரகரிசிக்கு  2 1/2 கப் தண்ணீர் வீதம்)
அரைத்த விழுதையும் தேவையான உப்பையும் அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
தண்ணீர் கொதித்தவுடன்  வரகசிசியை மெதுவாக தூவி கட்டியில்லாமல் கிளறவேண்டும்.
தேவையானால் சிறிது எண்ணெய் சேர்த்து கிளறலாம். அல்லது
(வரகரிசி,அரைத்தவிழுது.தண்ணீர்.உப்பு,தாளித்தவைகள் எல்லாவற்றையும் குக்கரில் வைக்கும் பாத்தி


ரத்தில் வைத்து 4 விசில் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்,)

ஆறினவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து   ஐந்து நிமிடம் கழித்து எடுக்க
சுவையான வரகு உப்புமா கொழுக்கட்டை ரெடி.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமாக செய்துள்ளீர்கள்... முயற்சி செய்கிறோம்... நன்றி...

Kanchana Radhakrishnan said...

நன்றி. திண்டுக்கல் தனபாலன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...