Wednesday, May 11, 2016

மரவள்ளிக்கிழங்கு பொரியல்




தேவையானவை:


மரவள்ளிக்கிழங்கு 2 துண்டுகள்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
வெங்காயம்1
காய்ந்த மிளகாய்2
தேங்காய் துருவல்1/4 கப்
கடுகு1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணய் தேவையானது
-------
செய்முறை:

மரவள்ளிக்கிழங்கின் மேல் தோல் நடு வேர் இரண்டையும் அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தேங்காய் துருவல்,பச்சைமிளகாய்,வெங்காயம் மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்த மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை தேவையான உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும் வடிகட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து வதக்கவும்.
பின்னர் வடிகட்டிய மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.

2 comments:

கோமதி அரசு said...

எங்கள் வீட்டிலும் மரவள்ளிக் கிழங்கு பொரியல் செய்வோம்.
உங்கள் செய்முறை அருமை.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோமதி அரசு

28. அவரைக்காய் புளி குழம்பு

 தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ புளி எலுமிச்சை அளவு வெங்காயம் 1 தக்காளி  1 பூண்டு 5 பற்கள் துருவிய  தேங்காய் 1/4 கப் சாம்பார் பொடி 1 டேபிள்ஸ...