Thursday, August 15, 2013

பாதாம்..வால்நட் பர்ஃபி


தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப்
வால்நட்       1/2 கப்
சர்க்கரை 1 1/4 கப்
பால் 1/4 கப்
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா 1 சிட்டிகை
------
செய்முறை:

பாதாம் பருப்பையும் வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த விழுது,சர்க்கரை,வெண்ணெய்,ஏலத்தூள்,ஆப்பசோடா எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அப்படியே அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.

15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.

பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.

4 comments:

ராஜி said...

எதாவது ஸ்வீட் சாப்பிடனும் போல இருக்குன்னு நினைச்சுட்டே வந்தேன். மாலையே செஞ்சு பார்த்து சாப்பிட வேண்டியதுதான்!!

கோமதி அரசு said...

மிக நன்றாக இருக்கிறது பதாம், வால்நட் பர்ஃபி.

Kanchana Radhakrishnan said...


வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
கோமதி அரசு.

Kanchana Radhakrishnan said...


@ ராஜி
வருகைக்கு நன்றி ராஜி.

27. வெண்டைக்காய் மோர் குழம்பு

 தேவையனவை: வெண்டைக்காய்  10 தயிர் 1 கப் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானவை கொத்தமல்லித்தழை சிறிதளவு ————— அரைக்க: தனியா 1 டீஸ்பூ...