Thursday, October 9, 2014

குதிரைவாலி பிரிஞ்சி



தேவையானவை:

 குதிரைவாலி 1 கப்

பீன்ஸ் 10

காரட் 2

உருளைக்கிழங்கு 1
வேகவைத்த காராமணி 1/2 கப்

பட்டாணி 1/4 கப்
பச்சைமிளகாய் 2

தேங்காய்பால் 1 கப்
தண்ணீர் 1 கப்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானவை

-------

அரைக்க:

சோம்பு 1 டீஸ்பூன்

கசகசா 1/2 டீஸ்பூன்

முந்திரிபருப்பு 10

பூண்டு 4 பல்

-----

தாளிக்க:

பட்டை 1 துண்டு

லவங்கம் 2

------

செய்முறை:


குதிரைவாலி அரிசியை நெய்யில் நன்றாக வறுக்கவேண்டும்..

பீன்ஸ்,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கை தோலுரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைக்கவும்.

----

கடாயில் எண்ணைய் வைத்து பட்டை,லவங்கம் தாளித்து பொடியாக நறுக்கிய பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,வேகவைத்த காராமணி

பட்டாணி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் வதக்கவேண்டும்.அரைத்த விழுது,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

வறுத்த குதிரைவாலி அரிசியுடன் தேங்காய்பால் 1 கப்.தண்ணீர் 1  கப் வதக்கிய காய்கறி கலவை எல்லாவற்றையும் நன்றாக கலந்து ele.cookerல்

வைக்கவேண்டும்.

onionரெய்தா,குருமா இரண்டும் இதற்கு ஏற்றது.

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
விளக்க குறிப்பு நன்று... பகிர்வுக்கு நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ரூபன்.

விழி வழி said...

nice.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி விழி வழி

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...