Wednesday, October 29, 2014

தக்காளிக்காய்-பூசணி கூட்டு



தேவையானவை:

தக்காளிக்காய் 10
பூசணி துண்டுகள் 10
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
அரைக்க:
பச்சைமிளகாய் 3
சீரகம் 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
-----
தாளிக்க:
தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:


கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து கடலைப்பருப்பை வேகவைக்கவேண்டும்.
சிறிது வெந்ததும் நறுக்கிய தக்காளிக்காய்,பூசணித்துண்டுகளை அதனுடன் தேவையான உப்புடன் வேகவைக்கவேண்டும்.
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை அரைத்து சேர்த்து சிறிது நேரம் கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காயெண்ணெயில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவேண்டும்.

4 comments:

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Kanchana Radhakrishnan said...

நன்றி Yarlpavanan Kasirajalingam.

சாரதா சமையல் said...

பூசணிக்கூட்டு மிக அருமை !!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Saratha.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...