Tuesday, March 22, 2016

சாமை குழிப்பணியாரம்



சாமை அரிசி 1 கப்
உளுந்து 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
வாழைப்பழம் 1
பொடித்த வெல்லம் 1/2 கப்
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு ஒரு சிட்டிகை
--------
செய்முறை:
சாமை அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
சாமை அரிசியை வடிகட்டி நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
உளுந்து,தேங்காய் துருவல்,வாழைப்பழம்,பொடித்த வெல்லம் நான்கையும் நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்து வைத்துள்ள இரண்டு விழுதினையும் சேர்த்து சிட்டிகை உப்புடன் நன்கு கலக்கவேண்டும்.
ஏலத்தூள் சேர்க்கவேண்டும்.

குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எல்லாக்குழிகளிலும் எண்ணைய் ஊற்றி மாவை சிறு கரண்டியால் ஊற்றவேண்டும்.மாவு வெந்ததும் திருப்பிப்போட்டு (குச்சியால் திருப்பவேண்டும்) மீண்டும் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி எடுக்கவேண்டும்.

No comments:

28. அவரைக்காய் புளி குழம்பு

 தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ புளி எலுமிச்சை அளவு வெங்காயம் 1 தக்காளி  1 பூண்டு 5 பற்கள் துருவிய  தேங்காய் 1/4 கப் சாம்பார் பொடி 1 டேபிள்ஸ...