தேவையானவை:
முருங்கைக்காய் 2
சின்ன வெங்காயம் 10
துவரம்பருப்பு 1 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
எண்ணைய்,உப்பு தேவையானது
தாளிக்க:
கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை சிறிதளவு.
அரைக்க:
மிளகாய்வற்றல் 3
கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்
தனியா 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
பெருங்காயம் சிறிது
தேங்காய் துருவல் அரை கப்
(எல்லாவற்றையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்து) அதனுடன்
சின்ன வெங்காயம் 4
தக்காளி 1
பட்டை ஒரு துண்டு
சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
செய்முறை:
துவரம்பருப்பை குக்கரில் இரண்டு கப் தண்ணீர் வைத்து (நான்கு விசில்) வேகவைக்கவும்.
முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் நன்றாக கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
சாம்பார் செய்யும் பாத்திரத்தை எடுத்து அதில் சிறிது எண்ணய் விட்டு கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை
தாளித்து காய்கறிகளை வதக்கவும்.வதங்கியவுடன் வெந்த பருப்பு, அரைத்த விழுது,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
(தேவையானால் வெந்த பருப்பை mixie ல் ஒரு சுற்று அரைக்கவும் )
சிறிது கொதித்த வுடன் புளித்தண்ணீரை விடவும்.நன்கு கிளறிவிடவும்.எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன்
இற்க்கவும்.
இந்த சாம்பார் ஒரு வித்தியாசமான மணத்துடன் சுவையாக இருக்கும்.
Do not look behind, look always in front,at what you want to do - and you are sure of progressing - Annai Mira
Subscribe to:
Post Comments (Atom)
36 எரிசேரி
தேவையானவை: சேனைக்கிழங்கு 1 கப் நறுக்கிய துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...
-
தேவையானவை: சாதம் 1 கப் கடலைமாவு 1/2 கப் வெங்காயம் 1 இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 2 கொத்தமல்லித்தழை சிறிதளவு கறிவேப்பிலை 1 கொத்து உ...
-
தேவையானவை: பயத்தம்பருப்பு 1 கப் மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு 2 வெங்காயம் 2 எலுமிச்சம்பழம் 1 உப்பு,எண்ணெய் தேவையானது ---...
-
தேவையானவை: பொடியாக நறுக்கிய பீன்ஸ் 1 கப் தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி ------ கொள்ளு 1/4 கப் கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி பொட்டுக்...
No comments:
Post a Comment