Thursday, December 18, 2008

வெண்பொங்கல் -சர்க்கரை பொங்கல்

வெண்பொங்கல்
தேவையானவை:

பச்சரிசி 2 கப்
பயற்றம்பருப்பு 1/2 கப்
மிளகு 15
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு 10
நெய் 1/4 கப்
தண்ணீர் 10 கப்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையானது

செய்முறை:

அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய்விடாமல் வறுக்கவும்.(ஒரு புரட்டுபுரட்டினால் போதும்.)
ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 10 கப் தண்ணீர் விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசியையுன் பருப்பையும் நன்றாக களைந்து போட்டு கிளறவும்.பொங்காமல் இருக்க low flame ல் வைத்து க் கிளறவும்.அரிசி ,பருப்பு இரண்டும் நன்றாக வெந்தவுடன் உப்பு போடவேண்டும்.(அரிசி,பருப்பு இரண்டும் குழையாமல் உப்பு போடக்கூடாது.)

மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.
பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.
கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.

(அரிசி பருப்பு இரண்டையும் குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் குக்கரில் வைக்கலாம்.ஆறு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.அப்பொழுதுதான் நன்றாக குழைவாக இருக்கும்
குக்கரை திறந்தவுடன் உப்பு சேர்த்து மற்றவைகளையும் சேர்த்து கிளறவேண்டும்..)


சர்க்கரை பொங்கல்


தேவையானவை:

பச்சரிசி 1 கப்
பயற்றம்பருப்பு 1/4 கப்
பொடித்தவெல்லம் 1/2 கப்
தண்ணீர் 4 1/2 கப்
நெய் 1/4 கப்
பால் 2 டேபிள்ஸ்பூன்

ஜாதிக்காய் 1 துண்டு
குங்குமப்பூ 1 டீஸ்பூன்
ஏலக்காய் 4
முந்திரிபருப்பு 10
உலர்ந்த திரட்சை 10
கேசரிப்பவுடர் 1டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு பயற்றம்பருப்பை எண்ணைய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.
பயற்றம்பருப்பை அரிசியுடன் சேர்த்து நன்றாக களைந்து கொள்ளவும்.

ஒரு அகண்ட கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 4 1/2 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன் களைந்துவைத்திருந்த அரிசி,பருப்பைப்போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.அரிசியும் பருப்பும் நன்றாக சேர்ந்து வெந்தவுடன் வடிகட்டிய வெல்லத்தைப்போட்டு medium flame ல் ஒரு பத்து நிமிடம் வைத்து கிளறவும்.

ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் கேசரிப்பவுடர்,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து பொங்கலில் சேர்க்கவும்.திராட்சை,முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.


அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

7 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஈழத்தில், எனக்குத் தெரிந்த வெண்பொங்கல் எங்கள் ஊர் கோவில் ஐயர், வெறும் தண்ணீரில் அவித்த பச்சையரிசிப் பொங்கல்..உப்புக் கூடப் போடாதது.
பூசை முடிந்ததும் பூப்பறித்துக் கொடுத்தவர்க்கு சற்றுப் பெரிய பிடி என கையால் உருட்டிய பொங்கல் தருவார்.
அமிர்தம் என்பது அதுவே!!!என்பேன் நான்..இப்போது ஊர் நண்பர்கள் பேசும் போது அந்த பொங்கலை (புக்கை என்றும் கூறுவோம்) நினைவு கூருவோம்.

ஏதுமே சேர்க்காததால் அதை 'வெண் பொங்கல்' என்பதாகக் கூறுவார்கள்.

நீங்கள் கூறியுள்ளது... சற்று வசதி படைத்தோரின் 'பாற்பொங்கல்' எனலாம்.

நீங்கள் 'பொரி'க்கவேண்டிய இடத்தில்
'பொறி'த்தெடுத்துள்ளீர்கள்.
முடிந்தால் மாற்றவும்.

Kanchana Radhakrishnan said...

தவறை சுட்டிக்காட்டியம்மைக்கும்,வருகைக்கும் நன்றி.தவறு திருத்தப்பட்டது.

Anonymous said...

எனக்கு பிடித்த உணவு :)

சந்தர் said...

மார்கழி பொங்கலில்... சாரி திங்களில் நாக்கு சப்புக்கொட்ட வைத்துவிட்டீர்கள். சுடச்சுட சாப்பிட்ட எஃபெக்ட்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தூயா

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி சந்தர்

கல்கி said...

ஏன் வெந்தபிறகு உப்பு சேர்க்க வேண்டும்? சீக்கிரம் வேக வேண்டும் என்பதாலா, இல்லை வேறு ஏதாவது காரணமா?

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...