Friday, May 29, 2009

உருளை குருமா


தேவையானவை:

உருளைக்கிழங்கு 2
பட்டாணி 1\2 கப்
வெங்காயம் 2
தேங்காய் பால் 1/2 கப்
----
மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்
தனியா பொடி 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி 1/2 டீஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
---
அரைக்க:
முந்திரி 4
பாதாம் 4
கசகசா 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
பட்டை 1 துண்டு
---
தாளிக்க:
கடுகு,கடலைபருப்பு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கசகசாவையும் பாதாமையும் தனித்தனியாக ஊறவைத்து அரைக்கக்கொடுத்துள்ள மற்ற பொருட்களுடன் சேர்த்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு
பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் உருளைக்கிழங்கு பட்டாணி சேர்த்து வதக்கவும்.
மஞ்சள்பொடி,தனியாபொடி,சீரகப்பொடி,காரப்பொடி ஆகிய நான்குடன் உப்பு,தண்ணீர் ,அரைத்த விழுது ஆகியவற்றை கலந்து கொதிக்கவைக்கவும்.
நன்கு கொதித்தவுடன் தேங்காய்பாலை விட்டு இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
சப்பாத்தி, பூரி க்கு இது நல்ல சைட் டிஷ் ஆகும்.

1 comment:

Mugund said...

Had a quick browse through the recipies that you had listed out. Though I'm not a apt person to comment on it - what I can say about is 'all the recipes were simple and nice'.

Also we have just started out with a site www.thadagam.com [ intention is to make it as a general weekly Tamil magazine ] . There is a plan for a seperate session on cooking in it - and we will be much pleased if you can come forward and share your works with us .

Thanks in advance for your reply. :-)

Mugund.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...