Tuesday, June 23, 2009

குணுக்கு


தேவையானவை:

பச்சரிசி 1 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
கடலைபருப்பு 1/2 கப்
சிவப்பு மிளகாய் 4
பச்சைமிளகாய் 4
வெங்காயம் 1
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை ஆய்ந்தது சிறிதளவு
எண்ணைய்,உப்பு தேவையானது

செய்முறை:

1.அரிசியையும் எல்லா பருப்புகளையும் ஒரு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டவேண்டும்.அதனுடன் சிவப்பு மிளகாய்,
பச்சைமிளகாய்,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவேண்டும்.
2.அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கலக்கவும்.
3.வாணலியில் எண்ணைய் வைத்து அரைத்தமாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
தக்காளி sauce உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...