Monday, December 28, 2009

கல்கண்டு பாத்

தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 கப்
பால் 2 கப்
கல்கண்டு 2 கப்
---
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10
குங்குமப்பூ சிறிதளவு

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு அரிசியையும் பயத்தம்பருப்பையும் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
இதில் வென்னீர் விட்டு நன்றாக களைந்து கொள்ளவும்.
பாலில் சிறிது தண்ணீர் சேர்த்து களைந்த அரிசியையும் பருப்பையும் அதில் கலந்து
குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கால் கப் தண்ணீர் விட்டு
கல்கண்டை போட்டு கம்பிப்பாகு பதத்திற்கு காய்ச்சவும்.
இதில் வெந்த அரிசியையும் பருப்பையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
மீதமுள்ள நெய்,ஏலக்காய்தூள் சேர்க்கவும்
குங்குமப்பூ வை சிறிது பாலில் கலந்து சேர்க்கவும்
எல்லாவற்றையும் நன்றாக கிளறி இறக்கவும்.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...