Saturday, March 20, 2010

சோயா பீன்ஸ் ஊத்தப்பம்




தேவையானவை:

சோயா பீன்ஸ் 1 கப்
தண்ணீர் 3 கப்
---
ரவை 1 கப்
வெங்காயம் 1
காரட் 1
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு தேவையானது

செய்முறை:

சோயாவை தண்ணீரில் நான்கு மணிநேரம் ஊறவைத்து மூன்று கப் தண்ணீருடன் மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி சோயாபாலை தனியே எடுத்துவைக்கவும்.

ஒரு கப் ரவையுடன் சோயாபாலை கலந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.

வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சிமூன்றையும் பொடியாக நறுகிக்கொள்ளவும்.

காரட்டை துருவிக்கொள்ளவும்.

கொத்தமல்லித்தழையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஊறவைத்துள்ள சோயாபால், ரவை கலவையுடன் நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

தோசைத் தவாவில் எண்ணைய் விட்டு எண்ணைய் காய்ந்ததும் தயாராக உள்ள மாவை ஒரு கரண்டி நடுவில் விட்டு சாதாரண ஊத்தப்ப அளவில் வார்த்து மேலே துருவிய காரட்டை தூவி எண்ணைய் ஊற்றவும்.இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு தக்காளி,வெங்காயம் ஆகியவற்றால் ஆன கார சட்னி நல்ல combination.

4 comments:

SathyaSridhar said...

Soya beans uthappam is healthy dear,,, looks delicious and yummy with beautiful click,,, thanks for sharing dear ,,,take care n keep smiling dear,,,

Menaga Sathia said...

Nice& healthy dish!!

Kanchana Radhakrishnan said...

Thanks for coming
SathyaSridhar

Kanchana Radhakrishnan said...

Thanks Menaga

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...