Monday, July 19, 2010

காராச்சேவ் குருமா


தேவையானவை:

காராச்சேவ் 1 கப் (கடையில் வாங்கியது)
கொண்டக்கடலை 1/2 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
கசகசா 1/2 டீஸ்பூன்
-------
தாளிக்க:

பட்டை 1 துண்டு
லவங்கம் 2
---
செய்முறை:

கொண்டக்கடலையை 4 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கவேண்டும். இதனுடன் வேகவைத்த கொண்டக்கடலை பாதியை (1/4 கப்) யும்,இஞ்சிபூண்டு விழுது,சோம்பு,தேங்காய் துருவல்,கசகசா சேர்த்து விழுது போல் அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணைய் வைத்து பட்டை,லவங்கம் தாளித்து மீதமுள்ள கொண்டக்கடலை கால் கப் சேர்த்து வதக்கவும்.அரைத்த விழுதை உப்புடனும்,சிறிது தண்ணீருடனும் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்தவுடன் காராசேவ் ஒரு கப் சேர்த்து அடுப்பில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும்.

காராச்சேவ் குருமா இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி எல்லாவற்றுக்கும் ஏற்ற side dish.

2 comments:

Nithu Bala said...

Migavum vithyasamana kurma..thanks for sharing this..gonna try it soon..

Kanchana Radhakrishnan said...

varugaikku nanri Nithu.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...