Sunday, October 17, 2010

ஆலூ பனீர்

தேவையானவை: 
பனீர் துண்டுகள் 2 கப்

வெங்காயம் 3

தக்காளி 3

உருளைக்கிழங்கு 4

தனியாதூள் 2 டீஸ்பூன்

காஷ்மீரி சில்லி தூள் 2 டீஸ்பூன்

மசாலா பொடி 1 டீஸ்பூன்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை 1 டீஸ்பூன்

வறுத்த முந்திரி 10



ஊறவைக்க:

தக்காளி கெட்சப் 2 டேபிள்ஸ்பூன்

வினிகர் 1 டேபிள்ஸ்பூன்

தனியாதூள் 2 டீஸ்பூன்

சீரகதூள் 1 டீஸ்பூன்

மிளகு தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது



செய்முறை:


வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை தோலுரித்து microwave 'h' ல் 2 நிமிடம் வைத்து நீட்டவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

பனீர் துண்டுகளையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு நன்கு கலந்து

உருளைக்கிழங்கு பனீர் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு கிளறி அரைமணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பனீர்,உருளைத்துண்டுகளை வெண்ணையில் பொன்னிறமாக வதக்கி தனியே

எடுத்து வைக்கவேண்டும்.

கடாயில் வெங்காயத்தை எண்ணையில் பொன்னிறமாக வதக்கவேண்டும்.அதனுடன் தனியாதூள்,காஷ்மீரி சில்லி தூள்,மசாலா பொடி சேர்த்து வதக்கவேண்டும்.

தக்காளித் துண்டுகள் சேர்த்து எல்லாம் ஒன்றாக சேர்ந்ததும் உப்பும்,சர்க்கரை ஒரு டீஸ்பூனும் தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து கிளறவேண்டும்.

கடைசியில் வறுத்த உருளைக்கிழங்கு,பனீர் துண்டுகளை அதனுடன் கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவேண்டும்.

வறுத்த முந்திரியால் அலங்கரிக்கவும்.

8 comments:

Asiya Omar said...

arumai kanchana.

Kanchana Radhakrishnan said...

Thanks asiya.

Srividhya Ravikumar said...

looks lovely kanchana... nice recipe..

Kanchana Radhakrishnan said...

Thanks Srividhya.

Mrs.Mano Saminathan said...

ஆலூ பனீர் பார்க்கவே மிக அருமையாக இருக்கிறது காஞ்சனா!!

Kurinji said...

So tempting...

http://kurinjikathambam.blogspot.com/

Kanchana Radhakrishnan said...

.வருகைக்கு நன்றி Mano.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Kurinji.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...