Wednesday, October 27, 2010

புளியோதரை

தேவையானவை: 






பாசுமதி அரிசி 2 கப்



மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்



நல்லெண்ணைய் 4 டேபிள்ஸ்பூன்



முந்திரிபருப்பு 10



வேர்க்கடலை 10



கறிவேப்பிலை சிறிதளவு

நெய் 1 டீஸ்பூன்









-----



புளிக்காய்ச்சல் செய்ய தேவையானது:






புளி 2 எலுமிச்சை அளவு



மிளகாய்வற்றல் 6



வெந்தயம் 2 டீஸ்பூன்



கடுகு 1 டீஸ்பூன்



உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்



கடலைபருப்பு 1 டீஸ்பூன்



பெருங்காயம் 1 துண்டு







செய்முறை:



வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எண்ணைய் விட்டு மிளகாய்வற்றலை வறுத்து இரண்டையும் சிறிது உப்போடு நன்கு பொடி பண்ணிக்கொள்ளவும்.

புளியை இரண்டு கப் தண்ணீரில் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.





வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,மீதமுள்ள 2 மிளகாய்,பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொண்டு தயாராக உள்ள புளித்தண்ணியை சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.வெந்தயப் பொடியில் பாதியை இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.



20 நிமிடங்கள் நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவேண்டும். இப்பொழுது புளிக்காய்ச்சல் ரெடி.







பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து உதிரியாக குக்கரில் 3 விசில் வரும் வரை வைக்கவும்.(ele,cooker லும் வைக்கலாம்)



சாதம் ஆறினவுடன் ஒரு தட்டில் பரவலாக போட்டு மஞ்சள் தூள் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து பிசறவேண்டும்.15 நிமிடம் ஊறவேண்டும்.



பின்னர் செய்து வைத்திருக்கும் புளிக்காய்ச்சலை சேர்க்கவும் மீதமுள்ள பொடியை சேர்க்கவும்..முந்திரிபருப்பு,வேர்க்கடலை,கறிவேப்பிலை மூன்றையும் சிறிது நெய்யில் வறுத்து நன்றாக கலந்து வைக்கவும்.

6 comments:

Nithu Bala said...

Traditional and delicious..

Kanchana Radhakrishnan said...

Thanks Nithu Bala.

Asiya Omar said...

செம செய்முறை.சூப்பர்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
asiya.

Radhakrishnan said...

இந்த வாரம் புளியோதரை சாப்பிட வேண்டும்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி V.Radhakrishnan.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...