Sunday, December 26, 2010

காராமணி மசாலா

தேவையானவை:

காராமணி 1 கப்
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 2
தக்காளி 1
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியாதூள் 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி சில்லித்தூள் 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி 1/2 டீஸ்பூன்
------
அரைக்க: 
தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
-----
தாளிக்க:
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
சோம்பு 1 டீஸ்பூன்
----

செய்முறை:
காராமணியை லேசாக வறுத்து இரண்டு கப் தண்ணீரில் வேகவைத்தால் ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்.
வெந்தவுடன் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
வெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் லேசாக வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு,தக்காளி,வேகவைத்த காராமணி.தேவையான உப்பு,சிறிது தண்ணீர் எல்லாம்
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
அவற்றுடன் தனியா தூள்.காஷ்மீரி சில்லித்தூள்,ஆம்சூர் பொடி,அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.

9 comments:

Nithu Bala said...

Delicious curry:-)

Asiya Omar said...

அருமை.

Priya Sreeram said...

yummy love this with phulkas !!

Kanchana Radhakrishnan said...

Thanks Nithu.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையா இருக்கு.

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri asiya.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.

Reva said...

fantastic recipe and blog....Thanks for sharing...will be regular on this blog and on "tamizha tamizha"... arumaiyaana pathivugal

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Revathi.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...