Saturday, January 7, 2012

திருவாதிரை களி



ஆருத்ரா தரிசனம் 08-01-2012 அன்று வருகிறது.அன்று செய்யப்படுவது இது.


தேவையானவை:

பச்சரிசி 2 கப்
பயத்தம்பருப்பு ஒரு பிடி
கடலைபருப்பு 1/2 கப்
தண்ணீர் 6 கப்

வெல்லம் பொடித்தது 2 1/2 கப்
துருவிய தேங்காய் 1 கப்
முந்திரிபருப்பு 10
நெய் 1/4 கப்
ஏலக்காய் 5

செய்முறை:

பச்சரிசி,பருப்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணய் விடாமல் சிவக்க வறுத்து மிக்ஸீயில் மூன்றையும் சேர்த்து கரகரப்பாக பொடி ரவையாக அரைத்துக்கொள்ளவேண்டும்.( (அல்லது வறுத்த அரிசி,பருப்புகள் மூன்றையும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து நான்கு விசில் கழித்து இறக்கவும்.)

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 6 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சிறிது கொதித்தவுடன் பொடித்த வெல்லத்தைப்போடவேண்டும்.வெல்லம் கரைந்தவுடன்
தேங்காய் துருவலை அப்படியே பச்சையாகப்போட்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் விடவேண்டும்.தள தள என்று கொதித்தவுடன் அடுப்பை slim ல் வைத்து அரைத்துவைத்த அரிசி பருப்புரவையை தூவிக்கொண்டே கிளறவும்.பின்னர் மூடிவைத்து அடிக்கடி அடிபிடிக்காமல் கிளறவும். நன்றாக வெந்தவுடன் முந்திரிபருப்பை வறுத்துப்போட்டு மீதமுள்ள நெய்யையும் விட்டு ஏலக்காய் பொடியைியும் போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

இறக்கிய பின் விட்டு விட்டு இரண்டு தடவை கிளறினால் "பொல பொல" என்று உதிர்ந்து வரும்.

அன்று, இதனுடன் குறைந்தது 7 காய்கள் போட்டு கூட்டு செய்வதுண்டு. 

8 comments:

ஹேமா said...

திருவாதிரைக்கின்னே களி இருக்கா.ஊர்லயும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.ஆனா என்னன்னு தெரியாது.சாதாரணமாக செய்யும் உழுத்தம் மாக்களி இல்லாம இது வித்தியாசமா இருக்கே.தேங்காய்ப் பால்தானே விட்டுச் செய்வாங்க !

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரியான நேரத்தில் ,சரியான பதிவு.

Kanchana Radhakrishnan said...

//
ஹேமா said...
திருவாதிரைக்கின்னே களி இருக்கா.ஊர்லயும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.ஆனா என்னன்னு தெரியாது.சாதாரணமாக செய்யும் உழுத்தம் மாக்களி இல்லாம இது வித்தியாசமா இருக்கே.தேங்காய்ப் பால்தானே விட்டுச் செய்வாங்க !//



தேங்காய் பால் இந்த திருவாதிரைக் களிக்கு உபயோகிப்பதில்லை.வருகைக்கு நன்றி ஹேமா.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு.

Unknown said...

இது வித்தியாசமா இருக்கே. அருமை

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி சிநேகிதி.

கோமதி அரசு said...

திருவாதிரை களியில் பாசிப்பருப்பு, அல்லது கடலைப் பருப்பை வறுத்து மொட்டு மொட்டாய் வேக வைத்து வெந்த களியில் சேர்த்து செய்வோம். நீங்கள் இரண்டு பருப்பு களையும் வறுத்து , அரிசியோடு பொடித்து செய்ய சொல்கிறீர்கள். நீங்கள் சொன்ன மாதிரி செய்துப் பார்க்கிறேன்.
நன்றி.
போனவார வலைச்சரத்தில் உங்கள் பொங்கலோ பொங்கல் பதிவை பகிர்ந்து கொண்டேன். மார்கழி கலைகள் பகுதியில்

Kanchana Radhakrishnan said...

இரண்டு பருப்புகளையும் வறுத்து அரிசியையும் வறுத்து ரவை போல் அரைத்து களி செய்தால் உதிரியாக வரும்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...