Friday, January 23, 2015

தினை இட்லி


தேவையானவை:
தினை 3 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
அவல் 1/4 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
----
செய்முறை:

தினையை தனியாகவும்.உளுத்தம்பருப்பு வெந்தயம் இரண்டையும் சேர்த்தும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அவலை அரை மணிநேரம் ஊறவைத்தால் போதும்.
உளுத்தம்பருப்பு,வெந்தயம்,அவல் மூன்றையும் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவேண்டும்.
தினையை தனியாக அரைத்து அரைத்து வைத்துள்ள உளுத்தம்பருப்பு,வெந்தயத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.
ஆறு மணிநேரம் கழித்து மாவு புளித்துவிடும்.பின்னர் இட்லியாக வார்க்கலாம்

தினையில் புரோட்டீன்,நார்சத்து உள்ளது.

1 comment:

கோமதி அரசு said...

தினை இட்லி அருமை. செய்து பார்க்கிறேன்.

32.மிளகூட்டல்

 தேவையானவை: துவரம் பருப்பு. 1/2 கப் காய்கறிகள் 2 கப் (காரத்,வெள்ளபூசணி,மஞ்சள் பூசணி,வாழைக்காய்,உருளைக்கிழங்கு,சேனை,பட்டாணி, முருங்கை) எல்லா ...