Monday, March 30, 2015

வரகு சர்க்கரை பொங்கல்



தேவையானவை:



வரகரிசி 1 கப்

பயற்றம்பருப்பு 1 மேசைக்கரண்டி

பொடித்தவெல்லம் 1 1/4

தண்ணீர் 4

நெய் 1/4 கப்

பால் 1/2 கப்

-----------------------

ஜாதிக்காய் 1 துண்டு

குங்குமப்பூ 1 டீஸ்பூன்

ஏலக்காய் 4

முந்திரிபருப்பு 10

கேசரிப்பவுடர் 1 /2டீஸ்பூன்



செய்முறை:




ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு பயற்றம்பருப்பை எண்ணைய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.

வரகரிசியை சிறிது நெய்யில் நன்றாக வறுக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.

குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த பயத்தம்பருப்பு, வறுத்த வரகரிசி நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ( ஐந்து விசில்) எடுக்கவும்.

குக்கரில் இருந்து எடுத்து ரெடியாக உள்ள வடிகட்டிய வெல்லத்தை சேர்த்து கிளறவும். வரகரிசியும் வெல்லமும் ஒன்று சேர்ந்து சர்க்கரை பொங்கல் பக்குவம் வரும்.


ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் கேசரிப்பவுடர்,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து  பொங்கலில் சேர்க்கவும் மீதமுள்ள பாலையும் பொங்கலில் சேர்க்கவும்.,முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

9 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு.

Kanchana Radhakrishnan said...

Thanks ராமலக்ஷ்மி.

திண்டுக்கல் தனபாலன் said...

அல்வா போல அழகாக செய்து உள்ளீர்கள்... நன்றி...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீங்கள். வாழ்த்துக்கள் த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kanchana Radhakrishnan said...

@ திண்டுக்கல் தனபாலன்

நன்றி. திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...


@ ரூபன்.
Thanks ரூபன்.

”தளிர் சுரேஷ்” said...

சத்தான உணவு! பகிர்வுக்கு நன்றி!

Kanchana Radhakrishnan said...

நன்றி.
‘தளிர்’ சுரேஷ்.

Kanchana Radhakrishnan said...

pl.visit my blog for kids moral stories.

http://siruvarulakam.blogspot.com/2015/03/143.html

27. வெண்டைக்காய் மோர் குழம்பு

 தேவையனவை: வெண்டைக்காய்  10 தயிர் 1 கப் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானவை கொத்தமல்லித்தழை சிறிதளவு ————— அரைக்க: தனியா 1 டீஸ்பூ...