Monday, June 23, 2008

பலாக்காய் குருமா

தேவையானவை:

பலாக்காய் 1
தேங்காய் 1
முந்திரி பருப்பு 10
பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
சீரகம்,சோம்பு,கசகசா ஒவ்வொன்றும் ஒரு ஸ்பூன்
வெங்காயம் 2
பூண்டு 10 பல்
தக்காளி 2
கடுகு,உளுத்தம்பருப்பு,ஏலக்காய்
கிராம்பு,பட்டை,மஞ்சள் தூள் சிறிதளவு
எண்ணைய் 50 கிராம்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

தேங்கயைத் துருவிக்கொள்ளவும்
பலாக்காயின் தோலை சீவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அதில் மஞ்சத்தூளும்,உப்பும் சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடிகட்டவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு முந்திரிபருப்பு,பொட்டுக்கடலை,சீரகம்,சோம்பு,கசகசா
ஆகியவற்றைப் போட்டு வதககவும்.
அத்துடன் தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கி அரைக்கவும்.

உரித்த பூண்டுகள்,பொடியாக நறுக்கிய தக்காளி,வெங்காயம் ஆகியவற்றை
எண்ணையில் வதக்கி அத்துடன் வேகவைத்திருக்கும் பலாக்காய்,அரைத்த விழுது
ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.
கொஞ்சம் தண்ணீர் ஊற்றி,தேவையான உப்பு போட்டு கொதிக்கவைக்கவும்.

சுவையான குருமா தயார்.

No comments:

28. அவரைக்காய் புளி குழம்பு

 தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ புளி எலுமிச்சை அளவு வெங்காயம் 1 தக்காளி  1 பூண்டு 5 பற்கள் துருவிய  தேங்காய் 1/4 கப் சாம்பார் பொடி 1 டேபிள்ஸ...