Wednesday, August 13, 2008

Vegetable Pulao

தேவையானவை:-

பாசுமதி அரிசி 2 கப்
உருளைக்கிழங்கு 2 (தோல் நீக்கி) சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்)
பீன்ஸ் கால் கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
காரட் கால் கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
பச்சை பட்டாணி கால் கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)
தயிர் 2 டேபிள்ஸ்பூன்
கேசரி பவுடர்,குங்குமப்பூ சிறிதளவு

மசாலா சாமான்:-
கிராம்பு,ஏலக்காய்,பட்டை,கசகசா,பிரிஞ்சி இலை,சோம்பு
எல்லாம் சிறிதளவு.

ஒரு bowlஐ எடுத்துக்கொண்டு கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களை
போடவும்:
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
மிளகு (crushed) 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2 (பொடியாக நறுக்கியது
புதினா ஒரு கொத்து
கொத்தமல்லி தழை ஒரு கொத்து
காரப்பொடி ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் ஒர் டீஸ்பூன்

செய்முறை:-

அரிசியை மூன்று கப் தண்ணீரில்அரை மணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயை எடுத்துக்கொண்டு சிறிது நெய் விட்டு மசாலா சாமான்களை வறுக்கவும்.
பின்னர் வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும்.
bowl லில் வைத்துள்ள பொருட்களை போட்டு நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போனவுடன் எல்லா காய்கறிகளையும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீருடன்
கொதிக்கவைக்கவும்.
கடைசியில் இறக்கும்போது தயிர் விடவும்.
ஊறின அரிசியோடு காய்கறிக் கலவையை சேர்த்து Electric cooker ல் வைக்கவும்.
keep warm வந்ததும் கேசரிபவுடர்,குங்குமப்பூ இரண்டையும் சிறிது வென்னீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை புலவில் சேர்க்கவும்.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...