தேவையானவை:
பாவ் பிரட் 2
வெங்காயம் 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி 1 கப் (பொடியாக நறுக்கியது)
குடமிளகாய் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது
பச்சைப்பட்டாணி 1 கப்
முட்டைக்கோஸ் 1 கப் (பொடியாக நறுக்கியது)
துருவிய காரட் 1 கப்
உருளைக்கிழங்கு 2 (வேகவைத்தது)
பூண்டு 4 பல் (துருவியது)
பச்சைமிளகாய் 3 (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சம் பழ சாறு 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
மசாலா பவுடர் :
தனியாதூள்,சீரகத்தூள்,காரப்பொடி,பாவ் பாஜி மசாலா
ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்.
அலங்கரிக்க:
கொத்தமல்லித்தழை 1/2 கப் (அரிந்தது)
பாஜி செய்முறை:
பொடியாக நறுக்கிய தக்காளியை வாணலியில் எண்ணைய் விட்டு நன்கு வதக்கி பேஸ்டு மாதிரி
செய்து கொள்ளவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் விட்டு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,பூண்டு
இரண்டையும் நன்றாக வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்.
வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அதனுடன்
பொடியாக நறுக்கிய குடமிளகாய்,பீன்ஸ்,முட்டைக்கோஸ்
துருவிய காரட்,
பச்சைப் பட்டாணி,
தக்காளி பேஸ்டு
எல்லாவற்றையும் உப்புடன் சேர்த்து வெங்காயத்தோடு நன்கு கலந்து வதக்கவேண்டும்.
காய்கறிகள் நன்றாக வதங்கிய பின் ஒரு கப் தண்ணீர் விட்டு எல்லா மசாலா பவுடர்களையும்
சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
அடுப்பை அணைத்து எலுமிச்சம் பழ சாற்றினை ஊற்றி நன்கு கிளறவேண்டும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
பாவ் தயாரிக்க:
பாவ் பிரட்டை குறுக்காக வெட்டி அதில் இறுபுறமும் வெண்ணைய் தடவி தோசைக்கல்லில்
பொன்னிறமாக வரும் வரை ரோஸ்டு செய்யவேண்டும்.
சூடாக இருக்கும் போதே ரெடியாக உள்ள பாஜியுடன் சாப்பிடவேண்டும்.
4 comments:
நல்லத்தான் இருக்கு ஆனா செஞ்சு கொடுக்க ஆள் இல்லயே. எதிர்காலத்தில உதவும். நன்றி.
Hi,
First time here..
U have a wonderful space with lovely information and recipies.
I am following u dear
check my space when u find time
with luv,
ArunaManikandan
http://ensamayalkuripugal.blogspot.com
வருகைக்கு நன்றி
அண்ணாமலையான்
வருகைக்கு நன்றி Aruna
Post a Comment