Sunday, November 7, 2010

காலிஃப்ளவர் குருமா

தேவையானவை:
காலிஃப்ளவர் 2 கப் (சிறு பூக்களாக உதிர்த்தது)

வெங்காயம் 1

உருளைக்கிழங்கு 1

பட்டாணி 1/2 கப்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்

தனியா தூள் 1 டீஸ்பூன்

சீரகதூள் 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு

உப்பு,எண்ணைய் தேவையானது

-----

அரைக்க:

தேங்காய் துருவல் 1/2 கப்

பாதாம் பருப்பு 4

தக்காளி 1

முந்திரிபருப்பு 4

-----

தாளிக்க:

பட்டை 1 சிறிய துண்டு

கிராம்பு 2

சோம்பு 1 டீஸ்பூன்

------


செய்முறை:

வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை பச்சையாக மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.

வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். குருமா

காலிஃப்ளவர்,உருளைக்கிழங்கு,பட்டாணி மூன்றையும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

அரைத்த விழுது,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் இஞ்சி பூண்டு விழுது,தனியா,சீரகதூள்,மிளகாய் தூள் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையால் அலங்கரிக்கவும்..

10 comments:

Nithu Bala said...

ரெசிபி மிகவும் நன்றாக இருக்கிறது..பகிர்வுக்கு நன்றி.

Srividhya Ravikumar said...

looks delcious... yumm..

Mrs.Mano Saminathan said...

குருமா அருமையாக இருக்கிறது!

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது...சாப்பாத்தி ஏற்ற சைட் டிஷ்...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
Nithu.

Kanchana Radhakrishnan said...

Thanks for your comment Srividhya.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
Mano.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
Geetha.

Menaga Sathia said...

சப்பாத்திக்கேத்த சூப்பர்ர்ர் குருமா...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Menaga.

28. அவரைக்காய் புளி குழம்பு

 தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ புளி எலுமிச்சை அளவு வெங்காயம் 1 தக்காளி  1 பூண்டு 5 பற்கள் துருவிய  தேங்காய் 1/4 கப் சாம்பார் பொடி 1 டேபிள்ஸ...