Thursday, December 27, 2012

தக்காளி ரசம்/ சூப்




தேவையானவை:
தக்காளி 3
பூண்டு 2 பல்
ரசப்பொடி 1 தேக்கரண்டி
மிளகு தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
நெய் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
-----
செய்முறை:


ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மூன்று தக்காளிகளும் மூழ்கும் வரை தண்ணீர் வைத்து ஐந்து நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.ஐந்து நிமிடம் கழித்து தக்காளிகளை வெளியே எடுத்து தோலுரித்து மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும்.
-------
அரைத்ததை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் நசுக்கிய பூண்டு,ரசப்பொடி,மிளகு தூள்,தேவையான உப்பும் சேர்த்து
கொதிக்கவேண்டும்.
ரசம் கொதித்த பின் நெய்யில் கடுகு,சீரகம்,கறிவேப்பிலை தாளிக்க வேண்டும்.
இந்த ரசம் செய்வது மிகவும் எளிது.
ரசமாகவும் உபயோகப்படுத்தலாம் அல்லது பிரெட் துண்டுகளை வறுத்துப் போட்டு சூப் ஆகவும் உபயோகப்படுத்தலாம்.

6 comments:

ப.கந்தசாமி said...

நல்ல தகவல். இப்பவே குடிக்கணும் போல் இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

ருசியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி பழனி.கந்தசாமி.

Kanchana Radhakrishnan said...


வருகைக்கு நன்றி
இராஜராஜேஸ்வரி.

ராமலக்ஷ்மி said...

மார்கழி குளிருக்கு நல்ல பகிர்வு.

Kanchana Radhakrishnan said...

Thanks ராமலக்ஷ்மி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...