Monday, June 16, 2014

தயிர் வடை



தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப்
தயிர் 2 கப்
சர்க்கரை 1 தேக்கரண்டி
கேரட் துருவல் 1 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கடுக் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:


உளுத்தம்பருப்பை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
பின்பு வடிகட்டி நன்றாக வெண்ணெய் போல அரைத்து எடுக்கவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் புளிப்பில்லாத தயிரில் கடுகை தாளித்துக்கொட்டி
உப்பு போட்டு ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்து வைக்கவேண்டும்.

அடுப்பில் எண்ணெய் வைத்து அரைத்த மாவை வடைகளாக தட்டவேண்டும்.சூடாக இருக்கும்போதே வடைகளை
தயிரில் போடவேண்டும். அதன் மேல் கேரட் துருவலையும்,கொத்தமல்லித்தழையையும் அலங்கரிக்கவேண்டும்.
காராபூந்தியையும் மேலே தூவி அலங்கரிக்கலாம்.

 (மோர்க்குழம்பிலோ அல்லது ரசத்திலோ கூட இந்த வடையை போடலாம்.)

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்க்கிறோம்...

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு.

Kanchana Radhakrishnan said...

Thanks
திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

@ ராமலக்ஷ்மி.

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

NAGARJOON said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ACCA Training in Chennai | ACCA Training institutes Chennai | ACCA Exam Coaching Classes

27. வெண்டைக்காய் மோர் குழம்பு

 தேவையனவை: வெண்டைக்காய்  10 தயிர் 1 கப் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானவை கொத்தமல்லித்தழை சிறிதளவு ————— அரைக்க: தனியா 1 டீஸ்பூ...