Wednesday, October 14, 2009

மைக்ரோவேவ் மைசூர் பாக்


தேவையானவை:

கடலைமாவு 1 கப்
பொடித்த சர்க்கரை 1 1/2 கப்
நெய் 1 கப்
பால் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கடலை மாவு,பொடித்த சர்க்கரை,நெய் மூன்றையும் மைக்ரோவேவ் பாத்திரத்தில் நன்கு கலந்து கீழ்கண்டவாறு வைக்கவும்.

மைக்ரோவேவ் "High" ல் 2 1/2 நிமிடம் வைக்கவேண்டும்.
முதலில் 30 செகண்டு வைத்துவிட்டு எடுத்து கிளறி மீண்டும் 30 செகண்டு வைத்து கிளறி
மீண்டும் இது மாதிரி மொத்தம் 5 தடவை செய்யவேண்டும்.(அதாவது 2 1/2 நிமிடம்).
----
பின்னர் பாலை விட்டு கலந்து
"High" ல் மீண்டும் 2 1/2 நிமிடம் மேற்கூறியவாறு 30 செகண்டுக்கு ஒரு தடவை எடுத்து கிளறி
வைக்கவேண்டும். (5 தடவை).
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
ஒரு தட்டில் நெய் தடவி மைசூர் பாக் கலவையை கொட்டி வேண்டிய வடிவத்தில்
கட் பண்ணிக்கொள்ளவும்.

Monday, October 12, 2009

குலாப் ஜாமுன்


தேவையானவை:

கோவா (sugarless) 2 கப்
சர்க்கரை 5 கப்
மைதாமாவு 1/2 கப்
நெய் 1 1/2 கப்
சோடா உப்பு 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்
பச்சைகற்பூரம் 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 6 கப்

செய்முறை:
1.கோவாவை முதலில் ஒரு தட்டில் கொட்டி பிசையவும்.பின்னர் அதில்
மைதாமாவையும்,சோடா உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து மூடி வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

2.ஒரு அகண்ட கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் கொதித்தவுடன்
சர்க்கரையை சேர்க்கவும்.பாகு பதம் (இரண்டு விரலால் பாகைத் தொட்டுப் பார்த்தால்
'பிசுக்' என்று ஒட்டிக்கொள்ளும்.) வந்தவுடன் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து
பாகை வடிகட்டவும்.
வடிகட்டிய பாகில் குங்குமப்பூவை ஒரு டீஸ்பூன் சூடான பாலில் கரைத்து சேர்க்கவும்.
.
3.வாண்லியில் நெய்யை விட்டு அடுப்பை slim ல் வைத்து நெய் காய்ந்தபின் உருட்டி வைத்துள்ள
குலாப் ஜாமுனை கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு,சற்று வெந்த பின் மெல்லிய குச்சியால்
ஒவ்வொன்றாகமெதுவாகத் திருப்பி விடவேண்டும்.
brown கலராக வந்தபின் இரண்டு நிமீடம் வைத்து நெய் வடிந்த பின் செய்து வைத்துள்ள பாகில் போடவும்.
அரை மணி கழித்து ஜீராவுடன் எடுத்து சாப்பிடலாம்.
(நெய் 1 1/2 கப் அதிகம் தான்.வாணலியின் அடியில் குலாப்ஜாமுன் படாமல்
இருப்பதற்காகவே நெய் சற்று கூடுதலாக வைக்கவேண்டும்)

Tuesday, October 6, 2009

ரவா உப்புமா


தேவையானவை:

ரவை 1 கப்
பெரிய வெங்காயம் 1
பட்டாணி 1/2 கப்
காரட் 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
நெய் 2 டேபிள்ஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து

செய்முறை:

1.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவையை நன்றாக
பொன்னிறமாக வறுக்கவும்.தனியே எடுத்து வைக்கவும்.
2.வெங்காயத்தையும் காரட்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
3.பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் கீறிக்கொள்ளவும்.
----
1.வாணலியில் எண்ணய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை
பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் பச்சைமிளகாய்,இஞ்சி சேர்த்து வதக்கவும்.
2.பின்னர் காரட்,பட்டாணி இரண்டையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
காய்கறிக் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.
---
1.ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
சிறிது உப்பு சேர்க்கவும்.தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் வறுத்த ரவையை தூவிக்கொண்டே கிளறவும்.
கட்டி தட்டாமல் வந்தவுடன் காய்கறிக் கலவையை சேர்த்து கிளறவும்.
மீதியுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊத்தவும்.
ரவை உப்புமா உதிரியாக நன்றாக வரும்.

Thursday, October 1, 2009

ஆப்பிள் பகோடா


தேவையானவை:

ஆப்பிள் 1
கடலைமாவு 1/2 கப்
அரிசி மாவு 1/4 கப்
உப்பு கொஞ்சம்
எண்ணைய் தேவையானவை



செய்முறை:
ஆப்பிளை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
துருவிய ஆப்பிள்,கடலைமாவு,அரிசிமாவு,உப்பு நான்கையும் ஒன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்.
தண்ணீர் வேண்டாம்.ஆப்பிளில் இருக்கும் ஈரத்தன்மையே போதுமானது.
கடாயில் எண்ணைய் வைத்து பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பகோடாக்களாக
போட்டு பொன்னிறமாக வ்ந்ததும் எடுக்கவும்.
இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி

Friday, September 25, 2009

ஓட்ஸ் உப்புமா


தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
காரட் 2
குடமிளகாய் 1
தண்ணீர் 1 1/2 கப்
உப்பு,எண்ணய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு

தாளிக்க:

கடுகு 1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

வெங்காயம்,பச்சைமிளகாய்,காரட்,குடமிளகாய் நான்கையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
---
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து பச்சைமிளகாய்,
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் காரட்,குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் 1 1/2 கப் தண்ணீருடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஓட்ஸை தூவி நன்றாக கிளற வேண்டும்.
ஓட்ஸ் வெந்தவுடன் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை
தூவவும்.

Tuesday, September 15, 2009

முளைகட்டின சோயா பீன்ஸ் சுண்டல்





முளைகட்டின சோயா பீன்ஸில் புரோட்டின் அதிகம் உள்ளது.நார்ச்சத்தும் விட்டமின் சி யும் அடங்கியுள்ளது.

தேவையானவை:

சோயாபீன்ஸ் 1கப்
குடமிளகாய் 1
வெங்காயம் 1
காரட் 2
பச்சைமிளகாய் 2
மஞ்சள்பொடி 1 டீஸ்பூன்
--
பொடி செய்ய:
தனியா 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சிவப்புமிளகாய் 2
--
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து

சோயாவை முளைகட்டும் முறை"

சோயாவை 2 கப் தண்ணீரில் முதல்நாள் இரவு ஊறவைக்கவேண்டும்.அடுத்தநாள் அந்த தண்ணீரை எடுத்துவிட்டு
வேறு தண்ணீர் விட்டு ஊறவைக்கவேண்டும்.இது மாதிரி 2,3 தடவை செய்யவேண்டும்.இரண்டாம் நாள் இரவில் சோயாவை
தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு ஈரத்துணியில் வைக்கவேண்டும்.அடுத்தநாள் காலையில் ஒவ்வொரு சோயா பருப்பும் அழகாக
முளைகட்டியிருக்கும்.
---
செய்முறை:
குடமிளகாயை பொடியாக நறுக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.
பொடிசெய்வதற்கு சொன்ன பொருட்களை லேசாக எண்ணையில் வறுத்து
பொடி செய்து கொள்ளவும்.
முளைகட்டி சோயா பருப்பை தண்ணீர்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.வடிகட்டவும்.
வாணலியை எடுத்துக்கொண்டு எண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய்
சேர்த்துவதக்கவும்.
குடமிளகாய்,துருவிய காரட் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
வேகவைத்த சோயா பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடைசியில் பொடி செய்த பொடியை தூவவும்.

Tuesday, September 1, 2009

அவல் உப்புமா


தேவையானவை:

அவல் 1கப்
பச்சைமிளகாய் 2
மஞ்சள்பொடி 1 டீஸ்பூன்
----
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 1
எலுமிச்சம்பழம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
----
செய்முறை:

1.அவலை தண்ணீரில் நன்றாகக் களைந்து வடிகட்டிவைக்கவும்.
கெட்டி அவல் என்றால் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்.
2.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
3.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
----
1.வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பச்சைமிளகாயை குறுக்காக வெட்டி சேர்த்து வதக்கவும்.
2.அவலை நன்றாக பிழிந்து அதனுடன் உப்பு,மஞ்சள்பொடி,மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து
வெங்காயம்,பச்சைமிளகாயுடன் கலந்து நன்கு கிளறவும்.
அவல் சீக்கிரத்தில் வெந்துவிடும்.
3.அடுப்பை அணைத்து எலுமிச்சம்பழம் பிழியவும்.
கொத்தமல்லித் தழையை தூவவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...