Tuesday, January 21, 2014

பரங்கிக்காய் பால் கூட்டு



தேவையானவை:

பரங்கிக்காய் துண்டுகள் 2 கப்
பால் 1/2 கப்
பொடித்த வெல்லம் 2 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் 2 மேசைக்கரண்டி
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
உப்பு 1/2 தேக்கரண்டி
---------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
தேங்காயெண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:


ஒருபாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் வைத்து பரங்கிக்காய் துண்டுகளை வேகவைக்கவும்.
அரிசிமாவை கால் கப் தண்ணீரில் கரைத்து அதில் சேர்க்கவும்.
கொதித்தவுடன் பால்,பொடித்த வெல்லம்,உப்பு மூன்றையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
கடைசியில் துருவிய தேங்காய் அல்லது தேங்காய் பால் (கால் கப்) சேர்த்து எல்லாவற்றையும் கலந்து அடுப்பை அணைக்கவும்.
தேங்காயெண்ணையில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.

Tuesday, January 14, 2014

தேங்காய் பொடி



தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை 1/4 கப்
புளி சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1/2 தேக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:


தேவையானவையில் குறிப்பிட்ட ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணெயில் வறுக்கவேண்டும்.
மிக்சியில் எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவேண்டும்.

இட்லி,தோசைக்கு ஏற்றது.
சாதத்தில் கொஞ்சம் நெய்விட்டு இந்த பொடியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

Monday, January 6, 2014

பார்லி கிச்சடி





தேவையானவை:

பார்லி 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சைமிளகாய் 2
சீரகம் 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்கம்பழம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
நெய் 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
--------
செய்முறை:



பார்லியை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் தனித்தனியே பார்லியையும் பயத்தம்பருப்பையும் வேகவைக்கவேண்டும்.(2 விசில்)

அடுப்பில் கடாயை வைத்து நெய்யில் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
அதனுடன் பெருங்காயத்தை பொரித்து குறுக்கே வெட்டிய பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.
பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் குக்கரில் இருந்து எடுத்த பார்லியையும் பயத்தம்பருப்பையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
கிச்சடி கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.
கொத்தமல்லித்தழையை தூவ பார்லி கிச்சடி ரெடி.

Wednesday, January 1, 2014

கேப்சிகம் கோசுமல்லி




தேவையானவை:

குடமிளகாய் 2
பயத்தம்பருப்பு 1/4 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:


குடமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.
ஊறவைத்த பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவும்.
 குடமிளகாய் நன்கு வதங்கிய பின் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை தூவி இறக்கவும்.

Friday, December 27, 2013

பச்சைமிளகாய் சட்னி



தேவையானவை:

பச்சைமிளகாய் 10
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கறிவேப்பிலை சிறிதளவு
வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சைமிளகாயை எண்ணைய் விட்டு வதக்கிகொள்ளவும்.
பெருங்காயம்,உப்பு இரண்டையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியிலிருந்து கோதை எடுத்துவிட்டு லேசாக வறுக்கவேண்டும்.
பச்சைமிளகாய்,உப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவேண்டும்.


வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
வேண்டுபவர்கள் வெல்லத்தை சேர்க்கலாம்.

தோசை,இட்லி இவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.

Sunday, December 15, 2013

திருவாதிரைக் களியும் ஏழு காய் கூட்டும்



திருவாதிரைக் களி:

தேவையானவை:
பச்சரிசி 1 கப்
பொடித்த வெல்லம் 1 1/2 கப்
துருவிய தேங்காய் 3/4 கப்
நெய் 1/4 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 10
------
செய்முறை:
அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவேண்டும்.
வறுத்த அரிசியை மிக்சியில் ரவை போல உடைத்துக்கொள்ளவும்.
துருவிய தேங்காய்,உடைத்த முந்திரி இரண்டையும் சிறிது நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
பொடித்த வெல்லத்தை இரண்டு கப் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டிவைக்கவும்.
------
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் உடைத்த அரிசி ரவை,வடிகட்டிய வெல்லம்,வறுத்த தேங்காய் துருவல் மூன்றையும்  வெல்லக்கரைசல் 2 கப் தண்ணீர் அரை கப்  சேர்த்து குக்கரில் வைக்கவும்.(3 விசில்).

குக்கரில் இருந்து எடுத்து மீதியுள்ள நெய்,வறுத்த முந்திரி,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு
  கிளறவேண்டும்.
------------------------------
ஏழு காய் கூட்டு:


தேவையானவை:

பூசனிக்காய் ஒரு துண்டு
பரங்கிக்காய் ஒரு துண்டு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு 1
வாழைக்க்காய் 1
உருளைக்கிழங்கு 2
சேனைக்கிழங்கு (நறுக்கிய துண்டுகள்) 10
அவரைக்காய் 10

பச்சை மொச்சைப்பருப்பு 1/2 கப்
------
துவரம்பருப்பு 1 கப்
புளி பெரிய எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லி 1 கப் (ஆய்ந்தது)
-----
அரைக்க:

மிளகாய்வற்றல் 10
தனியா 1/4 கப்
கடலைபருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல்  1கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி

பெருங்காயம் ஒரு துண்டு
------
தாளிக்க:
கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் வைத்து நன்கு வேகவிடவும்.
அவரைக்காயை தவிர்த்து மற்ற காய்கறிகளை தோலை சீவிவிட்டு ஒரே அளவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அவரைக்காயை நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணைய் விட்டு நன்றாக வறுத்து விழுதுபோல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து நறுக்கிய காய்கறிகளை மொச்சையுடன் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
தாராளமாக எண்ணைய் விட்டு வதக்கவும்.காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் புளியை கெட்டியாக கரைத்து விடவும்.நன்றாக கொதித்தவுடன் வேகவைத்த
பருப்பையும்,அரைத்த விழுதையும் உப்புடன் சேர்க்கவும்.
நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவும்.கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...