Friday, September 29, 2017

சுரைக்காய் பகாளாபாத்




தேவையானவை:

சுரைக்காய் துருவியது  1 கப்
தயிர் 1 1/2 கப்
பச்சை திராட்சை 1/2 கப்
மாதுளை முத்துகள் 1/2 கப்
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
------
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:


துருவிய சுரைக்காயை  அடுப்பில் வாணலியில் தண்ணீர்  சிறிது தெளித்து   வேகவைக்கவும்,.. ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்..
ஒரு பாத்திரத்தில் தயிருடன் வேகவைத்த சுரைக்காய்,உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,பெருங்காயத்தூள்,பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை
தாளித்து ரெடியாக உள்ள   பகாளாபாத்தில் கலக்கவேண்டும்.
பச்சை திராட்சை,மாதுளை முத்துகள் சேர்க்கலாம்.

அரிசி சாதத்தை குறைக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள் இதனை தயிர் சாதத்துக்கு பதில் சாப்பிடலாம்.


Thursday, September 21, 2017

கருப்பு உளுந்து சுண்டல்



தேவையானவை:
கருப்பு உளுந்து  2 கப்
தேங்காய் துருவல்  1/2 கப்
இஞ்சி              1 துண்டு
பச்சைமிளகாய்      3
சீரகம்              1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு          1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
------
செய்முறை:
 கருப்பு உளுந்தை இரவே ஊறவைத்து மறு நாள் குக்கரில்  தேவையான உப்புடன் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம் நான்கினையும் தண்ணீர் விடாமல் பொடி போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கருப்பு உளுந்தை வடிகட்டி
சேர்க்கவேண்டும்.அதனுடன் அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
நவராத்திரிக்கு ஒரு நாள் இந்த சுண்டலை செய்யலாம்,

Sunday, September 17, 2017

தினை புட்டு



தேவையானவை:

தினை ரவை 1 கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
நெய் 1/4கப்
துவரம்பருப்பு 2 டீஸ்பூன்
தண்ணீர் 3/4 கப்
தேங்காய் துருவல்  2 டீஸ்பூன்
ஏலக்காய் 2
முந்திரிபருப்பு 5
உப்பு ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒருவாணலியை எடுத்துக்கொண்டு  தினை ரவையை எண்ணைய் விடாமல் சிவக்க வறுத்துக்கொள்ளவும்,வறுத்ததை மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
துவரம்பருப்பை சிறிது நீரில் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

முக்கால் கப் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பை கரைத்து அந்த தண்ணீரை ரவையில் விட்டு பிசிறிக்கொள்ளவும்.அதன் மீது ஊறவைத்த
துவரம்பருப்பையும் போட்டு குக்கரில் இட்லி தட்டில் பரப்பி 15 நிமிடம் வேகவைக்கவும்.(நடுவில் திறந்து பார்த்து வேகவில்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து வைக்கவும்)
நன்கு வெந்தவுடன் ஒரு பெரிய தட்டில் கொட்டி உதிர்த்துக்கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணரில் கரைய விட்டு மண்ணில்லாமல் வடிகட்டவேண்டும்.
பிறகு வெல்லத்துடன் ஏலக்காய்,தேங்காய் துருவல் சேர்த்து நல்லகெட்டி பாகாய் (ஒரு தட்டில் ஒரு சொட்டு விட்டால் முத்தாக வரும்)வந்தவுடன் வெந்த ரவையைக்கொட்டி
நன்றாக கிளறி வறுத்த முந்திரி,நெய் இவற்றை விட்டு இறக்கவும்.அடுப்பிலிருந்து இறக்கினவுடன் சற்று இளகினாற்போலத்தான் இருக்கும்.அரைமணி கழித்து பாகு உள்ளே
இழுத்துக்கொண்டு நன்றாக உதிரியாக வந்துவிடும்.

நவராத்திரிக்கு சுண்டலுக்கு பதில் புட்டு ஒருநாள் செய்யும் வழக்கம் உண்டு

Wednesday, August 30, 2017

பனீர் புலவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி     1 கப்
பனீர் துண்டுகள் 15
வெங்காயம் 1
பட்டாணி   1/2 கப்
உருளைக்கிழங்கு 1
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
புதினா,கொத்தமல்லித்தழை   சிறிதளவு
நெய்  2 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய்    தேவையானது
-----
தாளிக்க:
பட்டை,லவங்கம்,ஏலக்காய்
--------------------
செய்முறை:


பாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
வெங்காயம், உருளைக்கிழங்கு இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பனீர் துண்டுகளை வெந்நீரில்   அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் நெய்யில் சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக  வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
----------
வாணலியில் சிறிது நெய்  வைத்து பட்டை,லவங்கம்,ஏலக்காய் தாளித்து  அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்

பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கு,பட்டாணி சேர்க்கவேண்டும். இஞ்சி பூண்டு விழுது தேவையான உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லிதழை சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
--------
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பாசுமதி அரிசியை வடிகட்டி 1 1/2 கப் தண்ணீருடன்  வைத்து அதனுடன் வதக்கிவைத்துள்ள காய்கறி கலவையை சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து புலவை எடுத்து  வறுத்த பனீரை சேர்த்து ஒரு கிளறு கிளறவேண்டும்.

பனீரில் புரத சத்தும்.சுண்ணாம்பு சத்தும் உள்ளது.
குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Sunday, January 22, 2017

பாதாம் வரகு லட்டு

தேவையானவை:

பாதாம் பருப்பு 15
முந்திரிபருப்பு 15
வரகரிசி   1/2 கப்
பொட்டுக்கடலை 1/2 கப்
கருப்பட்டி பொடித்தது  1/2 கப்
நெய்  1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி

----------
செய்முறை:

பாதாம் பருப்பை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து வைக்கவும்.
முந்திரிபருப்பு,பாதாம் இரண்டையும் நைசாக அரைக்கவும்.
வரகரிசியை வறுத்து பொடி பண்ணவும்.
பொடித்த பாதாம்,முந்திரி,வரகரிசி இதனுடன் பொடித்த கருப்பட்டியை சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும். ஏலத்தூள் சேர்க்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள மாவு,உருக்கின நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

பாதாம் வரகு லட்டு சிறுவர் சிறுவர்களுக்கு ஒரு மாலை நேர சிற்றுண்டியாகும்.

Tuesday, October 11, 2016

ஓலன்



தேவையானவை:

பூசணி கீற்று 2

காராமணி 1 கப்

பச்சைமிளகாய் 4

தேங்காய் பால் 1 கப்

தேங்காய் எண்ணைய்  1/4 கப்
கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:



பூசணி கீற்றுகளை தோலெடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

காராமணியை லேசாக எண்ணையில்லாமல் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்

பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.

------

அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள்,வேகவைத்த காராமணி,

பச்சைமிளகாய், ஒரு கப் தண்ணீருடன் கால் கப் தேங்காய் பால்,சேர்த்து வேகவைக்கவும்.

பூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.

 தேங்காய் எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

கடைசியில் மீதமுள்ள தேங்காய் பாலை சேர்த்து சிறித் கொதித்தபின் இறக்கவும்.

------

ஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.

சப்பாத்தி,பூரிக்கும் சிறந்த side dish ஆகும். 

Monday, October 3, 2016

ராகி புட்டு



தேவையான பொருட்கள்:

கேழ்வரகு(ராகி) மாவு -  1 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
தூள் வெல்லம் 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு  சிறிதளவு

செய் முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது ராகி மாவை  பரப்பிவிட்டு இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடத்தில் எடுக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து மாவை நன்றாக உதிர்க்கவும்.பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சிறிது உப்பு சேர்த்து பிசிறவும்.
பிசிறிய மாவை மீண்டும்வெள்ளை துணியில் பரப்பி இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் கழித்து எடுக்கவும்,

குக்கரில் இருந்து எடுத்து தேங்காய் துருவல்,தூள் வெல்லம்,நெய்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசிறவும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...