தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
தக்காளிப்பழம் 2
எலுமிச்சம்பழம் 1
கடுகு 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் 1 சிறிய துண்டு
தனியா,மிளகு,சீரகம் ஒவ்வொன்றும் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையாந்து
கொத்துமல்லி தழை ஒரு கொத்து
கறிவேப்பிலை ஒரு கொத்து
செய்முறை:
துவரம்பருப்பை குக்கரில் ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்.
தக்காளிப்பழத்தை இரண்டு கப் தண்ணீரில் நன்கு பிசைந்து
அதில் ரசப்பொடி,உப்பு,பெருங்காயம் இவற்றைக் கலந்து கொதிக்கவைக்கவும்.
நன்கு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை அதனுடன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
பின்னர் கொத்தமல்லி தழை,கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணய் சேர்க்காமல் தனியா,மிளகு இரண்டையும் வறுத்து
சீரகத்தை பச்சையாக வைத்து பொடி செய்து ரசத்தில் தூவவும்.
கடைசியில் எலுமிச்சம்பழத்தைப் பிழியவும்.
கடுகு தாளித்துக்கொட்டவும்.
1 comment:
ரசம் சுவையாக இருக்கும்போலதான் தோணுது:)
Post a Comment