Thursday, October 13, 2011

புடலங்காய் உசிலி





 தேவையானவை:

 புடலங்காய் 2 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள்  1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்

மிளகாய் வற்றல் 4

பெருங்காயம் 1 துண்டு

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது
---
தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு .கறிவேப்பிலை மூன்றும்சிறிதளவு

செய்முறை:

புடலங்காயை பொடியாக நறுக்கிக்கொண்டு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து பிசறி பத்து நிமிடம் ஊறவைக்கவும்.

துவரம்பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம் நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில்

ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.

ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்க்கவும்.(மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் உதிரியாக வரும்)

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு .கறிவேப்பிலை  தாளித்து

ஊறவைத்த புடலங்காய் துண்டுகளை நன்றாக பிழிந்து எடுத்து சேர்த்து வதக்கவும்..
 புடலங்காய் நன்கு வதங்கினவுடன் உதிர்த்த பருப்புகளை சேர்த்து சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறவும்.
உதிரி உதிரியாக வரும்.கடைசியில் தேங்காய் துருவலை சிறிது வறுத்து சேர்க்கவேண்டும்.

2 comments:

MyKitchen Flavors-BonAppetit!. said...

Pudalagkai Paruppu Usili luks fine and appetizingly Good in the pic.Luv it

Kanchana Radhakrishnan said...

Thanks MyKitchen Flavors-BonAppetite.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...