Tuesday, April 1, 2014

இஞ்சி மோர்




தேவையானவை:
மோர் 2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை 1/2 கப்
எலுமிச்சம்பழம் 1
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது

செய்முறை:

பச்சைமிளகாய்,இஞ்சி,கொத்தமல்லித்தழை மூன்றையும் சிறிது தண்ணீர் தெளித்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
இரண்டு கப் மோரை மிக்சியில் போட்டு நன்றாக விப்பரில் அடித்துக்கொள்ளவேண்டும்.

கடைந்த மோரில் அரைத்த விழுது தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
பெருங்காய்த்தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து குடித்தால் தாகம் அடங்கும்

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்த்திடுவோம்... நன்றி அம்மா...

ராமலக்ஷ்மி said...

வெயிலுக்கு குளுமை. நன்றி.

கோமதி அரசு said...

மிக அருமையான இஞ்சி மோர்.
வெயிலுக்கு ஏற்ற பானம்.

Kanchana Radhakrishnan said...

@ திண்டுக்கல் தனபாலன்.

செய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

@ ராமலக்ஷ்மி.

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

@ கோமதி அரசு

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோமதி அரசு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

வெயிலுக்கேற்ற அருமையான பானம். பகிர்ந்தமைக்கு நன்றி மீரா.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி புவனேஸ்வரி ராமநாதன் .

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...