Thursday, September 25, 2014

.ராகி புட்டு.



தேவையான பொருட்கள்:

கேழ்வரகு(ராகி) மாவு -  1 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
தூள் வெல்லம் 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு  சிறிதளவு

செய் முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது ராகி மாவை  பரப்பிவிட்டு இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடத்தில் எடுக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து மாவை நன்றாக உதிர்க்கவும்.பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சிறிது உப்பு சேர்த்து பிசிறவும்.
பிசிறிய மாவை மீண்டும்வெள்ளை துணியில் பரப்பி இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் கழித்து எடுக்கவும்,

குக்கரில் இருந்து எடுத்து தேங்காய் துருவல்,தூள் வெல்லம்,நெய்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசிறவும்.

2 comments:

கோமதி அரசு said...

நவராத்திரிக்கு அருமையான ராகி புட்டு அருமை.
நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோமதி அரசு.

32.மிளகூட்டல்

 தேவையானவை: துவரம் பருப்பு. 1/2 கப் காய்கறிகள் 2 கப் (காரத்,வெள்ளபூசணி,மஞ்சள் பூசணி,வாழைக்காய்,உருளைக்கிழங்கு,சேனை,பட்டாணி, முருங்கை) எல்லா ...