தேவையானவை:
அன்னாசி 2 பெரிய துண்டுகள் (தோல் சீவியது)
துவரம்பருப்பு 1/2 கப்
புளி ஒரு சிறு எலுமிச்சைபழ அளவு
பெருங்காயம் ஒரு துண்டு
உப்பு தேவையானது
-----
அரைக்க:
வற்றல் மிளகாய் 2
தனியா 1/2 டீஸ்பூன்
மிளகு 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
---
செய்முறை:
1.அன்னாசிப்பழத்துண்டுகளை சிறிது தண்ணீருடன் mixy ல் அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
2.துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
3.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் சீரகத்தை பச்சையாகவும் மற்றவற்றை சிறிது எண்ணையில் வறுத்து எல்லாவற்றையும்
ஒன்றாக சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
4..புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.அதில் உப்பு,பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிடவும்.
5.புளி தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரைத்த விழுதையும்,வெந்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
6.கடைசியில் வடித்து வைத்துள்ள அன்னாசி பழச்சாறை விட்டு ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
இந்த ரசத்திற்கு தக்காளி சேர்க்கவேண்டாம்.
Do not look behind, look always in front,at what you want to do - and you are sure of progressing - Annai Mira
Thursday, August 20, 2009
Friday, August 7, 2009
மெரினா சுண்டல்
தேவையானவை:
பச்சப்பட்டாணி 2 கப்
பச்சமிளகாய் 4
துருவிய தேங்காய் 1/2 கப்
மாங்காய் 1
எண்ணைய்,உப்பு தேவையானது
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 4
துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
செய்முறை:
1.பச்சைப்பட்டாணியை 6 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும்
அடுப்பை அணைத்து வடிகட்டிவைக்கவும்.
2.பச்சைமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
3.மாங்காயை துருவிக்கொள்ளவும்.
------
4.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
வடிகட்டிய பட்டாணி,உப்பு,பச்சைமிளகாய்,துருவிய தேங்காய்,துருவிய மாங்காய்
ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
-----
இந்த சுண்டல் தான் கடற்கரையில் விற்கும் சுண்டல்.
Sunday, August 2, 2009
கொழுக்கட்டை
வரலட்சுமி விரத நோன்பிற்கும் வினாயக சதூர்த்திக்கும் தேங்காய்,உளுந்து ஆகிய இரண்டு வகை கொழுக்கட்டைகள் செய்வது வழக்கம்.
இதற்கு மேல்மாவு இரண்டிற்கும் ஒன்று.
மேல்மாவு செய்வதற்கு தேவையானவை:
அரிசி மாவு 2 கப்
(பச்சரிசி 3 கப்பை தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் துணியை போட்டு உலர்த்தி எடுக்கவும்.
பின்னர் mixie ல் அரைத்து சலிக்கவும். )சலித்தமாவு 2 கப் இருக்கவேண்டும்.
தண்ணீர் 4 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் 4 கப் தண்ணீர் விட்டு அதனுடன் எண்ணைய்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்தவுடன் சலித்துவைத்துள்ள அரிசிமாவை பரவலாக தூவிக்கொண்டே கிளறவேண்டும்.கட்டிதட்டாமல் நன்றாக கிளறி
ஒரு தட்டில் எடுத்து வைத்து அதன் மேல் ஈரத்துணியால் மூடவேண்டும்.இப்போழுது மேல்மாவு ரெடி.
தேங்காய் பூரணம் செய்வதற்கு தேவையானவை:
துருவிய தேங்காய் 1 கப்
துருவிய வெல்லம் 1 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்
செய்முறை:
1.அடுப்பில் வாணலியை வைத்து அதில் துருவிய தேங்காய்,வெல்லம் சேர்த்து கிளறவேண்டும்.
(தண்ணீர் விடக்கூடாது)ஈரப்பசை இல்லாமல் "பிசுக்" எனக்கையில் ஒட்டிக்கொள்ளும் பதத்தில் இறக்கி
ஏலக்காய் பொடியை தூவவேண்டும். தேங்காய் பூரணம் ரெடி.
2. ரெடியாக வைத்துள்ள மேல்மாவை நல்லெண்ணையை கையில் தடவிக்கொண்டு பிசைந்து உருண்டைகளாக
உருட்டிக்கொள்ளவும்.
3.ஒரு உருண்டையை கையில் எடுத்து கிண்ணம் போல் செய்து நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடவும்.
பின்னர் இட்லி தட்டில் ஆவியில் வைத்து 7 நிமிடத்தில் எடுக்கவும்.
உளுத்தம்பூரணம் செய்வதற்கு தேவையானவை:
உளுத்தம்பருப்பு 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
சிவப்பு மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
1.இரண்டு பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி மற்றவைகளுடன் சேர்த்து நைசாக
அரைத்துக்கொள்ளவும்.
2.அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்கவும்.
3.ஆவியில் வைத்ததை எடுத்து உதிர்த்துக்கொண்டு வாணலியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
அதனுடன் சேர்த்து கிளறி எடுத்து வைக்கவும்.
4.ரெடியாக வைத்துள்ள மேல்மாவினை உருண்டைகளாக்கி ஒரு உருண்டையை உள்ளங்கையில் வைத்து
பட்டையாக தட்டி அதனுள் உளுந்து பூரணத்தை வைத்து சோமாசி போல் மூடவும்.
பின்னர் இட்லிதட்டில் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.
இதற்கு மேல்மாவு இரண்டிற்கும் ஒன்று.
மேல்மாவு செய்வதற்கு தேவையானவை:
அரிசி மாவு 2 கப்
(பச்சரிசி 3 கப்பை தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் துணியை போட்டு உலர்த்தி எடுக்கவும்.
பின்னர் mixie ல் அரைத்து சலிக்கவும். )சலித்தமாவு 2 கப் இருக்கவேண்டும்.
தண்ணீர் 4 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் 4 கப் தண்ணீர் விட்டு அதனுடன் எண்ணைய்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்தவுடன் சலித்துவைத்துள்ள அரிசிமாவை பரவலாக தூவிக்கொண்டே கிளறவேண்டும்.கட்டிதட்டாமல் நன்றாக கிளறி
ஒரு தட்டில் எடுத்து வைத்து அதன் மேல் ஈரத்துணியால் மூடவேண்டும்.இப்போழுது மேல்மாவு ரெடி.
தேங்காய் பூரணம் செய்வதற்கு தேவையானவை:
துருவிய தேங்காய் 1 கப்
துருவிய வெல்லம் 1 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்
செய்முறை:
1.அடுப்பில் வாணலியை வைத்து அதில் துருவிய தேங்காய்,வெல்லம் சேர்த்து கிளறவேண்டும்.
(தண்ணீர் விடக்கூடாது)ஈரப்பசை இல்லாமல் "பிசுக்" எனக்கையில் ஒட்டிக்கொள்ளும் பதத்தில் இறக்கி
ஏலக்காய் பொடியை தூவவேண்டும். தேங்காய் பூரணம் ரெடி.
2. ரெடியாக வைத்துள்ள மேல்மாவை நல்லெண்ணையை கையில் தடவிக்கொண்டு பிசைந்து உருண்டைகளாக
உருட்டிக்கொள்ளவும்.
3.ஒரு உருண்டையை கையில் எடுத்து கிண்ணம் போல் செய்து நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடவும்.
பின்னர் இட்லி தட்டில் ஆவியில் வைத்து 7 நிமிடத்தில் எடுக்கவும்.
உளுத்தம்பூரணம் செய்வதற்கு தேவையானவை:
உளுத்தம்பருப்பு 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
சிவப்பு மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
1.இரண்டு பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி மற்றவைகளுடன் சேர்த்து நைசாக
அரைத்துக்கொள்ளவும்.
2.அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்கவும்.
3.ஆவியில் வைத்ததை எடுத்து உதிர்த்துக்கொண்டு வாணலியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
அதனுடன் சேர்த்து கிளறி எடுத்து வைக்கவும்.
4.ரெடியாக வைத்துள்ள மேல்மாவினை உருண்டைகளாக்கி ஒரு உருண்டையை உள்ளங்கையில் வைத்து
பட்டையாக தட்டி அதனுள் உளுந்து பூரணத்தை வைத்து சோமாசி போல் மூடவும்.
பின்னர் இட்லிதட்டில் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.
Wednesday, July 29, 2009
வெண்டைக்காய் மோர்க்குழம்பு
தேவையானவை:
வெண்டைக்காய் 10
தயிர் 2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு (ஆய்ந்தது)
அரைக்க:
துவரம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
துருவிய தேங்காய் 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
செய்முறை:
1.வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
2.இரண்டு கப் தயிரில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கடைந்து கொள்ளவும்.அதில் உப்பு,மஞ்சள்பொடி,பெருங்காயத்தூள்
ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும்.
3.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணிரில் ஊறவைத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
4.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து
பின்னர் வெண்டைக்காயை வதக்கவும்.
5.கடைந்து வைத்துள்ள மோர் கலவையை அரைத்து வைத்துள்ள விழுதுடன் சேர்த்து வாணலியில் ஊற்றவும்.
சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும்.
கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்.
வெண்டைக்காய் 10
தயிர் 2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு (ஆய்ந்தது)
அரைக்க:
துவரம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
துருவிய தேங்காய் 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
செய்முறை:
1.வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
2.இரண்டு கப் தயிரில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கடைந்து கொள்ளவும்.அதில் உப்பு,மஞ்சள்பொடி,பெருங்காயத்தூள்
ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும்.
3.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணிரில் ஊறவைத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
4.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து
பின்னர் வெண்டைக்காயை வதக்கவும்.
5.கடைந்து வைத்துள்ள மோர் கலவையை அரைத்து வைத்துள்ள விழுதுடன் சேர்த்து வாணலியில் ஊற்றவும்.
சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும்.
கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்.
Thursday, July 23, 2009
Strawberry அல்வா
தேவையானவை:
Strawberry 15
பால் 1கப்
சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
தேன் 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
1.Strawberry யை சிறு துண்டுகளாக நறுக்கி துருவிக்கொள்ளவும்.
2.துருவியதை பாலுடன் கலந்து அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்.
10 நிமிடம் கழித்து சர்க்கரை,நெய்,தேன் விட்டு அடுப்பை slim ல் வைத்து
விடாமல் கிளறவேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்
Friday, July 10, 2009
காசி அல்வா
தேவையானவை:
1.பூசணிக்காய் 1 (முற்றியது)
2.சர்க்கரை 1 1/2 கிலோ
3.தண்ணீர் 4 டம்ளர்
4.நெய் 1 ஸ்பூன்
5.திராட்சை,முந்திரி,பாதாம் சிறிதளவு
6.ஏலப்பொடி,ஜாதிக்காய் பொடி சிறிதளவு
செய்முறை:
பூசணிக்காயை தேங்காய் துருவியில் துருவி நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து
வேகவைககவும்.பின்னர் வெள்ளைத்துணியில் வடிக்கட்டி பிழிந்தெடுக்கவேண்டும்.
2 கிலோ என்பது 1 1/2 கிலோவாக ஆகியிருக்கும்.
அதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவேண்டும்.நன்றாக கிளறவேண்டும்.
சர்க்கரை பாகாக உருகி மொத்தமாக இறுகி அல்வா மாதிரி வரும்.
வாணலியில் நெய் வைத்து திராட்சை,உடைத்த முந்திரி,பாதாம் வறுத்து அல்வாவில்
போட்டு கடைசியாக ஏல்ப்பொடி,ஜாதிக்காய் பொடி சேர்க்கவேண்டும்.
Monday, July 6, 2009
Cranberry Rice
தேவையானவை:
cranberry
பாசுமதி அரிசி 1 கப்
cranberry (dried) 1 கப்
வெங்காயம் 1
பட்டாணி 1/2 கப்
துருவிய காரட் 1/2 கப்
புளி எலுமிச்சை ஆளவு
------
இஞ்சி பூண்டு விழுது 1 டீஎஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
தனியா பொடி 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி 1/2 டீஸ்பூன்
---
பொடித்த வெல்லம் 1 டீஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது
--
தாளிக்க:
ஏலக்காய் 1
கிராம்பு 2
லவங்கப்பட்டை ஒரு துண்டு
சோம்பு 1 டீஸ்பூன்
--
செய்முறை:
1.பாசுமதி அரிசியை 1 1/2 கப் தண்ணீரில் 40 நிமிடம் ஊறவைக்கவும்.
2.புளியை அரைகப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வைக்கவும்.
3.வாணலியை எடுத்துக்கொண்டு அதில் எண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து பொடியாக
நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
4.அதனுடன் cranberry சேர்த்து மிருதுவாக வரும்வரை வதக்கவும்.
5.பின்னர்
பட்டாணி,துருவிய காரட்,
புளித்தண்ணீர்,உப்பு
இஞ்சி பூண்டு விழுது,
காரப்பொடி,தனியா பொடி,சீரகப்பொடி
ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
6.அதில் பொடி செய்த வெல்லத்தை போட்டு நன்றாக கிளறவும்.
7.வதக்கிய கலவையை ஊறவைத்த அரிசியுடன் கலந்து அப்படியே Electric cooker ல் வைக்கவும்.
(cranberry ன் உவர்ப்பு தன்மையை குறைக்க புளித்தண்ணீரும் வெல்லமும் சேர்க்கப்படுகிறது,)
Subscribe to:
Posts (Atom)
36 எரிசேரி
தேவையானவை: சேனைக்கிழங்கு 1 கப் நறுக்கிய துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...
-
மதுரையில் பிரசித்திபெற்ற குளிர்பானம் தேவையானவை: பால் 4 கப் பாதாம் பிசின் 1 டேபிள்ஸ்பூன் நன்னாரி சிரப் 1 டேபிள்ஸ்பூன் அல்லது ரோஸ் எஸன...
-
கல்கியில் வெளியான "பாரம்பரிய சமையல்" மெகா போட்டியில் எனது "குடலை இட்லி " என்ற சமையல் குறிப்பு தேர்ந்தெடுக்க பட்ட...
-
தேவையானவை: முளைகட்டின சன்னா 1கப் வெங்காயம் 1 இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 2 வற்றல் மிளகாய் 2 பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன் சோம்பு 1 ...


